Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .
பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .
தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .
யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .
பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .
இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .
தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .
1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .
இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .
பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .
தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .
யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .
பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .
இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .
தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .
1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .
இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நல்லதொரு நூல் விமர்சனம் அண்ணா
நன்றி
நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|