தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

View previous topic View next topic Go down

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை Empty நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

Post by மகா பிரபு Tue Oct 08, 2013 5:20 pm

சாப்பிட்டதும் பசி அடங்கிவிடும். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பே பசி அடங்கிவிட்டால்? அங்கேதான் பிரச்னையே. அப்படிப்பட்டவர்களுக்கு உடலளவிலோ மனதளவிலோ ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அல்லது நோய்க்கான அறிகுறியாகக் கூட அதை எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள், டீ ஏஜ் பிள்ளைகள், ஏன் பெரியவர்கள் கூட அடிக்கடி, "பசிக்கவே இல்லை. சாப்பாடு வேண்டாம்' என்று அடம்பிடிப்பது வாடிக்கை. ஆனால் அது மேலோட்டமான விஷயம் அல்ல. இதில் இரண்டு வகை உண்டு.

முதல் வகை: சிலர் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலையில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கத்தை இழந்திருப்பார்கதீள். இதுபோன்ற காரணங்களுக்காக சிலருக்கு அந்த சமயம் பசியே எடுக்காது. சாப்பிடத் தோன்றாது. இந்த பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது. உடலும் களைப்பு அடையாது.

இரண்டாவது வகை: சிலர் ஏதோ ஒருவகையில் அதீத பயத்துடனேயே இருப்பார்கள். அளவுக்கு அதிகமாக கவலைப் படுவார்கள். எப்போதும் மனவருத்தத்திலேயே இருப்பார்கள். இவர்களுக்குப் பசியே எடுக்காது. இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, புற்றுநோய், காய்ச்சல் இருந்தால் பசி எடுக்காது. இந்த பசியின்மை தானாக சரியாகாது. உடலை வருத்தி, சோர்வடையச் செய்து விடும். உடல் மெலியத் தொடங்கிவிடும். இந்த வகை பசியின்மைதான் கவனிக்க வேண்டியதாகும்.

மேலும் சில காரணங்கள்:

1. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் பசிக்காது. செரிமானம் சரியாக நடக்காமல் இருந்தால் கூட பசிக்காது.

2. இளைஞர்களாக இருந்தால் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக பசி எடுக்காது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் பசியே இருக்காது.

3. மது அருந்துபவர்களுக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பசியின்மை கண்டிப்பாக வரும்.

பசியின்மையின் விளைவுகள்:

1. சாப்பிடக் கூப்பிட்டால் "பசிக்கல... பசிக்கல' என்று சாப்பிட மறுப்பார்கள். பசி இருந்தாலும் சாப்பிட மனம் தோணாது.

2. உணவு உண்ணும் பழக்கத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள். எப்போது எங்கே சாப்பிடுவார்கள் என்றே தெரியது. சாப்பாட்டில் விருப்பமே இருக்காது.

3. திடீர் திடீரென்று உடல் எடை குறைந்தால் பசியின்மையால் அவதிப்படுகிறார் என்று முடிவுக்க வரலாம்.

4. பசியின்மையால் உடல் மெலிந்தால் அதை மறைக்க, தொள தொள ஆடை அணிந்து மறைக்கப் பார்ப்பார்கள்.

5. அடிக்கடி தங்களின் உடல் எடையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள். உடல் மெலிந்தாலும் அதிகரித்தாலும் கவலைப்படுவார்கள்.

6. மாதவிலக்கு சுழற்சி தவறிப்போகும். பெண்கள் இதற்காகவாவது பசியின்மையை போக்க முயல வேண்டும்.

7. பசியின்மையால் அவதிப்படுபவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். "சாப்பிட அழைத்தால் எரிந்து எரிந்து விழுவார்கள்.'

8. சரியாக தூக்கமே வராது. எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

9. சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள். உடல் உழைப்புக்கும் பசியின்மைக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் காரணம்!

பெரும்பாலும் குடும்பச் சூழலும் பணியிடச் சூழலும்தான் பசியின்மைக்கு அதிமுக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மன இறுக்கம், மன வருத்தம் இவைöய்லாம் குடும்பத்தில், பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சுற்றியே எழுகிறது. அதை சரிசெய்வது முதல் கடமையாகும்.

பசியின்மையைப் போக்கும் வழிகள் எளிது!

1. உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பசி தானாக எடுக்கும்.

2. குடும்பத்தில் சுமுகமான சூழலை உருவாக்க முயல வேண்டும்.

3. வேளாவேளைக்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். அதைவிட, சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.

5. சாப்பிடும்போது இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். விக்கல் எடுத்தால், அதிக காரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் வயிறுமுட்ட தண்ணீர் சாப்பிடக்கூடாது. அளவாக சாப்பிடுவது நல்லது.

6. சாப்பிடும் முன் காபி, டீ, பால், பழம், ரொட்டி, பிஸ்கட் என்று எதையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், அரை மணி நேரம் கழித்தே உணவு உண்ண வேண்டும்.

7. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மேற்கொள்பவர்களுக்கு பசி தானாக வரும். சிக்கல் இருக்காது.

- இரா. மணிகண்டன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை Empty Re: நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

Post by sawmya Tue Oct 08, 2013 8:11 pm

புது தகவலுக்கு நன்றி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை Empty Re: நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

Post by செந்தில் Tue Oct 08, 2013 8:21 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை Empty Re: நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

Post by முரளிராஜா Wed Oct 09, 2013 5:49 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை Empty Re: நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum