தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

View previous topic View next topic Go down

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! Empty மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

Post by முழுமுதலோன் Sat Oct 26, 2013 10:57 am

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! 538637_321899811248859_1053316703_n



மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.

பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

· நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்



http://iruvarullam.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! Empty Re: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

Post by sawmya Sat Oct 26, 2013 12:11 pm

மஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.


கீழா நெல்லி
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூறு உட்புகுந்திருக்கிறது என்பதன் அறிகுறியே அது. கணையம், பித்தநீர் நாளம், புற்று, பித்தக் கற்கள், கல்லீரல் அட்டைப் புழுக்கள் , அழற்சி, நீர்க்கட்டிகள் ஆகியனவும் இன்னும் பலவும்  காரணமாகும்.


அருகம்புல்
உடல் மஞ்சளாவதும், கண்கள் மஞ்சளாவதும், சிறுநீர் மஞ்சளாகப் போவதும் மலம் வெள்ளையாக, பழுப்பாகப் போவதும் சில அறிகுறிகள். சிலருக்கு அரிப்பு இருக்கும். சிலருக்கு சோர்வாக இருக்கும் . பசியே இருக்காது. சாப்பிடவே மாட்டார்கள். 


கரிசலாங்கண்ணி/கையந்தரை/கரைப்பான்
பிலிரூபினின் அளவு நார்மலாக  0.3 இல் இருந்து  1.9 மிலிகி/டெசிலிட்டர் இருக்கலாம். இதை விட அதிகம் இருந்தால் அது கவனிக்கப்படவேண்டும்.


கோவை இலை.
மஞ்சள் காமாலை பொதுவாக  வைரஸ் தொற்று, மருத்து, மதுபானம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. வைரஸ்  A , B , C  ஆகியவற்றாலும் ஏற்படுகிறது. சில உணவுகளை வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உண்பதாலும் ( அரைவேக்காடு மாமிசங்கள் ) மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஏ  அதிக அளவு பாதிக்காது. பி யும் சி யும் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும். 


சீரகக் கொழுக்கட்டை.
இதற்கு ஆங்கில மருத்துவத்தில் லிவ் 52 சிரப்பும், மருந்துகளும், குளுக்கோஸ் ட்ரிப்புகளுமே வழங்கப்படுகின்றன. ஓய்வு என்பதே முக்கியம். கரும்புச் சாறு , இளநீர், நீர் உணவுகள், கஞ்சி, மோர் சாதம் எடுத்துக் கொள்ளலாம்.


பருப்புத் துவையல்
ஆனால் காரைக்குடியில்  கழனிவாசலில் நாட்டு மருந்து கொடுப்பார்கள். இதில் அவர்கள் தரும் மருந்தை ஒரு முறை சாப்பிட்டால் போதும். ஆங்கில மருந்து மஞ்சள் காமாலைக்கு உதவாது என்று  ஒரு செவிலி குறிப்பிட்டார்.


வெங்காயம் சேர்த்து அவித்த காரட்
இந்த நாட்டு மருந்து கொடுப்பவர்கள் அதை விடியற்காலையில் கொடுத்ததும் குடித்துவிட்டு வந்தால் 2 மணி நேரத்தில் தொடர்ந்து பேதியாகும். அப்படி இல்லாவிட்டால் வெந்நீரில் குளித்து இட்லி , சாம்பார் , சட்னி வைத்து சாப்பிடவும். அதன் பின் ரொம்பப் போனால் குளுக்கோஸ் ட்ரிப் ஏற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.


வெங்காயம் சேர்த்து அவித்த பீன்ஸ்
அதன் பின் தினம் காலை ஒரு கைப்பிடி அருகம்புல், ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி / கையாந்தரை/ கரைப்பான் , ஒரு கைப்பிடி கோவை இலை மூன்றையும் தண்ணீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து 200 மிலி 20 நாள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குப் பின் வெள்ளை முள்ளங்கியைப் பாலில் அரைத்து குளுக்கோஸ் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும்.


சிறுபருப்பு முட்டைக்கோஸ் கூட்டு
இது போக கீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு போட்டு அரைத்து வடிகட்டிக் கொடுக்கவேண்டும்.


இடியாப்பம் பச்சடி
மூன்றாம் நால் நல்லெண்ணையில் மிளகு, சீரகம், பூண்டு போட்டுக் காய்ச்சித் தேய்த்துக் குளித்து வர வேண்டும். தினமும் குளிர்ந்த நீரில் கட்டாயம் குளிக்க வேண்டும்.


சாத்துக்குடி ஜூஸ்
அசைவம் சாப்பிடலாம் , கருவாடு, இளநீர், கரும்புச் சாறு, மது ஆகாது. ஆனால் தினம் குளுக்கோஸ் 200 கிராம் சாப்பிடலாம். என்று போட்டிருக்கிறார்கள். 


மாதுளம் பழச்சாறு
ஆனால் முதல் மூன்று வாரங்களுக்கு இந்த மருந்துகளை முடிந்த அளவு கொடுத்து எண்ணெய் இல்லாமல் சமைத்து பழச்சாறு வகைகளும் கொடுத்து வந்தால்தான் கல்லீரல் பழைய நிலையை அடையும். நல்ல பசியும் எடுக்கும்.

பெரியவர் மு. பெரியசாமி என்பவரும் அவரது பிள்ளைகளும் இந்த மருந்தைக் கொடுத்து வருகிறார்கள். டாக்டரிடம் சென்றால் அவர் பிலிரூபினை செக் செய்துவிட்டு சில மருந்துகளும் லிவ் 52 வுமே போதும் என்கிறார்.

மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியே கண்கண்ட மருந்து என்பது என் அம்மாவின் அபிப்பிராயம். தினம் தலைக்குக் குளிரக் குளித்து  கீழாநெல்லிச் சாறை அருந்து எண்ணெய் இல்லாத காரமும் உப்பும் குறைவான உணவுகளை உண்டு வந்தாலே சரியாகும் என்பார்.



 Thenammai Lakshmanan 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! Empty Re: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

Post by kanmani singh Sat Oct 26, 2013 2:18 pm

பயனுள்ள தகவல்கள். நன்றி..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! Empty Re: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum