தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"வாசித்ததில் நேசித்தது "

View previous topic View next topic Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:09 pm

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:10 pm

உலகத்தை மாற்றுவதெல்லாம் பின்பு இருக்கட்டும் 

திருமணம் ஆகிவிட்டால் உங்களால் ஒரு தொலைக்காட்சி சேனல் கூட மாற்ற முடியாது 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:11 pm

உயரமான மலை உச்சியில் 
நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி நம்ம நல்லதம்பி கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். 

கடவுளே.. .!என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாகஅவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்குஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே....

எல்லாம் சரி. அவளை ஏன் முட்டாளாகப் படைத்தாய் ?
-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:12 pm

வாழ்க்கை எனபது மூன்று பக்கங்களை கொண்ட அருமையான புத்தகம் .

முதல் பக்கமான பிறப்பையும் கடைசி பக்கமான மரணத்தையும் இறைவன் முன்பே நிரப்பிவிட்டான் .

நடுப்பக்கம் மட்டுமே நம் கைகளில் ...

அதை அன்பு மகிழ்ச்சி கருணை பக்தி என்ற நல்ல செயல்களால் நாம் நிரப்பி கொள்வோமே நட்புகளே ...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:13 pm

ஒரு கண் தெரியாதவர் ஆலயத்துக்கு சென்றார் 

எல்லாரும் அவரை பார்த்துகேலியாக நீ கடவுளை காண முடியாதே இங்கு எதற்கு வந்தாய் ? 

குருடர் சொன்னார் கடவுள் என்னை பார்ப்பார் அதற்காக வந்தேன் 

நேர்மறை எண்ணங்கள் வெற்றிக்கே ...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:14 pm

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி.

திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார்.

“நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம்.

உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்

நாம் விடுதலையடைந்து விடுவோம்”

என்றதும் இவரும் ஆர்வமாகத் தோண்டினார். 

ஆறடி தோண்டி தலையை வெளியே நீட்டியதும் அதிர்ந்தார்.

சிறைக்காவலர் அறைக்குள் போனது அது.

கடலை நோக்கித் தோண்ட சொன்னதை மறந்திருந்தார். 

எந்த முயற்சியையும் சரியான திசையில் மேற்கொள்பவர்களே வெல்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:14 pm

ஒரு மிருகக்காட்சி சாலைக்கு கணவன், மனைவி, மனைவியின் அம்மா சென்றார்கள். சுற்றிப்பார்க்கும்போது சிங்கத்தின் கூண்டில் மாமியார் தவறுதலாக விழுந்துவிட்டார்.

மாமியார் சிங்கத்தைப் பார்க்க, சிங்கமும் மாமியாரைப் பார்த்து திரும்பியது. 

“ஐயோ, இப்ப என்ன பண்றது?” என்று கணவனைப் பார்த்து மனைவி கத்தினாள். 

“சிங்கம் இந்த சிக்கலிலிருந்து எப்படியாவது தப்பிக்கணும்னு கடவுள்கிட்டே வேண்டிக்கலாம்” என்றான் அமைதியாக.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:15 pm

ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.

அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.

அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:17 pm

கல்யாணமான பெண்களை ஏன் உலகம் வேறு விதமாக பார்க்கிறது?

புடவைக்கு மாறி தாலியையும் மெட்டியையும் அணிந்து வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் அவள் கல்யாணமான பெண்மணி என்பதற்கான அடையாளங்கள்....ஆனால் உள்ளத்தளவில் அவள் இன்னும் சிறு பெண்தான்....

ஒரு வீட்டை நிர்வகிப்பது எப்படி என்பதை அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை....தன்னையும் இன்னும் ஒருவரையும், சில சமயங்களில் அதற்கு மேலுமான குடும்ப அங்கத்தினர்களைக் கவனித்துக் கொள்வது எப்படி என்பதை அவள் திக்கித் திணறி கற்றுக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறாள்.

கல்யாணம் என்பது ஒரு பெண்ணை பொம்பளை ஆக்கிவிடாது.....குழந்தையே பெற்றிருந்தாலும் மனதளவில் அவள் இன்னும் குழந்தையே.

அவளைக் கொண்டாடுங்கள்....அவளுக்குள் குறுகுறுக்கும் குழந்தைத்தனத்தை கொண்டாடுங்கள்...அவள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ... உங்கள் தோழியாகவோ, உங்கள் சகோதரியாகவோ, உங்கள் தாயாகவோ.... ஏன் அறிமுகமே இல்லாதவளாகக் கூட இருந்துவிட்டு போகட்டும்.

எல்லாவற்றிற்கும் அவளே பொறுப்பு என்பது பைத்தியக்காரத்தனம்...., எல்லா வேலைகளையும் அவள் இழுத்துப் போட்டு செய்வது அவளது ஆர்வத்தின் வெளிப்பாடு அவ்வளவே.

இதைப் படிக்கும் ஆண்களே...

அவளை நேசியுங்கள்....அவள் இஷ்டத்திற்கு அவளை இருக்க விடுங்கள்....உங்களைப் பார்த்துக் கொள்வதற்காக அவள் பிறக்கவில்லை....அவளது நல்ல மனதும் உங்கள் மீதான அபரிமிதமான அன்பும் தான் அவளை உங்கள் நலனில் அக்கறை கொள்ளச் செய்கிறது.

இதைப் படிக்கும் எனதருமைத் தோழிகளே....

வளருங்கள்...அவசரமில்லை.....எவ்வளவு சமயமெடுத்தாலும் பரவாயில்லை...மெல்ல வளருங்கள்.....ஆனால் உங்களுக்குள் இருக்கும் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சரியா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:18 pm

கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.

‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’

‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’

குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.

டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘‘ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.’’ _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.

டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.

எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் 

அந்த அழுக்கு ஆசாமி. ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. 

ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!’’

பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 12:19 pm

கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்!

விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை வேணும்… எங்க வீட்டுலே பாருங்க…எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!”

“சின்ன பிரச்சினைன்னா எது..?”

““பையனை கல்லூரியிலே சேர்க்கறது...... பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது.. புதுசா வீடு கட்டறது...... காசை செலவு பண்றது....முதலீடு பண்றது... இதெல்லாம்தான்…!”

“பெரிய பிரச்சினைன்னா..?”

“உலகத்துலே அணுகுண்டு ....இருக்கலாமா...கூடாதா...?இலங்கைப்பிரச்சனை...... காஷ்மீர்ப் பிரச்சனை...…உலக சமாதானத்தை எப்படி நிலை நாட்டுவது என்று யோசித்தல்...
ஈராக்.. ஈரான்… பிரச்னைக்கு தீர்வு காண்பது...இது மாதிரி”.....!!!???





முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by sawmya Mon Oct 28, 2013 1:33 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum