Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
மூலவர் : பஞ்சமுகேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகாவில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருவானைக்காவல்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:
கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்காவல், திருச்சி.
போன்:
+91
பொது தகவல்:
தட்சிணாமூர்த்தி, மகா கணபதி வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசிப்பதால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், செல்வ வளம் பெருகும், உடல் நலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து,அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இறைவனுக்கு நேர் எதிரே தனி சன்னிதியில் இறைவி திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள். அம்மன் தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள். இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள் பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்கமுடியும். இந்த அமைப்பு அபூர்வமானது. இப்படி தரிசிப்பதால் மணப்பேறு கைகூடும். மங்களங்கள் சேரும் என்கிறார்கள். இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுரசுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜ ராஜேஸ்வரர் காட்சியளிக்கிறார். எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜ ராஜேசுவரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் பெருகும் என்கிறார்கள். அதற்குக் காரணம், குபேரனால் வழிபடப்பட்ட அந்த ராஜராஜேஸ்வரர் இவரே என்பதால்தான் இவரை வழிபட்டால் செல்வ வளமும் உடல் நலமும் சிறக்கும் என்கிறார்கள். அதோடு, கைவிட்டுப்போன பொருளும் திரும்பக் கிட்டுமாம். கிழக்குப் பிராகாரத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமிகளில் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றன. லிங்க வடிவிலான சதுஸ்- சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஸ் சஷ்டி லேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. அது என்ன சதுஸ் சஷ்டி ? அறுபத்து நான்கு என்பதைத்தான் வடமொழியில் அப்படி சொல்கிறார்கள். அறுபத்தி நான்கு லிங்கங்கள் சேர்ந்த ஒரே லிங்க வடிவம் ! தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் லிங்க பாணம் அமைந்துள்ளது. பாணம் முழுவதும் உள்ள 64 வரிக்கோடுகளை முகங்களாகக் கணக்கிடப்பட்டு மகா சதாசிவ மூர்ததி, அஷ்டாஷ்ட லிங்கமூர்த்தி என வழிபடுகின்றனர் பக்தர்கள். இறைவனின் பின்புறம் நான்கு வேதங்களும், சாளக்கிராமம் வடிவில் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஐந்தெழுத்து நாதனின் வடிவங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது சதாசிவமூர்த்தம். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்கள் கொண்ட திருவடிவம் இது. அதோமுகம் எனும் மேல்நோக்கிய ஆறாவது முகமும் இதில் சூட்சும வடிவில் உண்டு, என்றாலும் ஐந்து முகங்களே காணமுடியும். குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம்!
தல வரலாறு:
விச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள். மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை பெரும் யுத்தம் புரியும் அளவிற்கு வளர்ந்தது. போரில் குபேரனின் அனைத்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன், மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. மகாவிஷ்ணு, தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்த ராவணனை யுத்தத்தில் வீழ்த்துவார். அப்போது, உன்னிடமிருந்து பறிபோன புஷ்பகவிமானமும் உனது செல்வமும் உன்னை அடையும் என்றது அக்குரல். பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஓர் ஆலயம் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். முடிவில் இறைவன் அருளால், அவரது வாக்குப்படியே இழந்த தன் பெருமைகளையும் பொருளையும் மீண்டும் பெற்றான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 16 தளங்கள் வரை இருப்பது அதிசயம்!
விஞ்ஞானம் அடிப்படையில்: கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.
நன்றி தினமலர்
மூலவர் : பஞ்சமுகேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகாவில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருவானைக்காவல்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:
கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்காவல், திருச்சி.
போன்:
+91
பொது தகவல்:
தட்சிணாமூர்த்தி, மகா கணபதி வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசிப்பதால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், செல்வ வளம் பெருகும், உடல் நலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து,அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இறைவனுக்கு நேர் எதிரே தனி சன்னிதியில் இறைவி திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள். அம்மன் தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள். இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள் பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்கமுடியும். இந்த அமைப்பு அபூர்வமானது. இப்படி தரிசிப்பதால் மணப்பேறு கைகூடும். மங்களங்கள் சேரும் என்கிறார்கள். இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுரசுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜ ராஜேஸ்வரர் காட்சியளிக்கிறார். எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜ ராஜேசுவரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் பெருகும் என்கிறார்கள். அதற்குக் காரணம், குபேரனால் வழிபடப்பட்ட அந்த ராஜராஜேஸ்வரர் இவரே என்பதால்தான் இவரை வழிபட்டால் செல்வ வளமும் உடல் நலமும் சிறக்கும் என்கிறார்கள். அதோடு, கைவிட்டுப்போன பொருளும் திரும்பக் கிட்டுமாம். கிழக்குப் பிராகாரத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமிகளில் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றன. லிங்க வடிவிலான சதுஸ்- சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஸ் சஷ்டி லேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. அது என்ன சதுஸ் சஷ்டி ? அறுபத்து நான்கு என்பதைத்தான் வடமொழியில் அப்படி சொல்கிறார்கள். அறுபத்தி நான்கு லிங்கங்கள் சேர்ந்த ஒரே லிங்க வடிவம் ! தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் லிங்க பாணம் அமைந்துள்ளது. பாணம் முழுவதும் உள்ள 64 வரிக்கோடுகளை முகங்களாகக் கணக்கிடப்பட்டு மகா சதாசிவ மூர்ததி, அஷ்டாஷ்ட லிங்கமூர்த்தி என வழிபடுகின்றனர் பக்தர்கள். இறைவனின் பின்புறம் நான்கு வேதங்களும், சாளக்கிராமம் வடிவில் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஐந்தெழுத்து நாதனின் வடிவங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது சதாசிவமூர்த்தம். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்கள் கொண்ட திருவடிவம் இது. அதோமுகம் எனும் மேல்நோக்கிய ஆறாவது முகமும் இதில் சூட்சும வடிவில் உண்டு, என்றாலும் ஐந்து முகங்களே காணமுடியும். குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம்!
தல வரலாறு:
விச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள். மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை பெரும் யுத்தம் புரியும் அளவிற்கு வளர்ந்தது. போரில் குபேரனின் அனைத்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன், மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. மகாவிஷ்ணு, தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்த ராவணனை யுத்தத்தில் வீழ்த்துவார். அப்போது, உன்னிடமிருந்து பறிபோன புஷ்பகவிமானமும் உனது செல்வமும் உன்னை அடையும் என்றது அக்குரல். பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஓர் ஆலயம் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். முடிவில் இறைவன் அருளால், அவரது வாக்குப்படியே இழந்த தன் பெருமைகளையும் பொருளையும் மீண்டும் பெற்றான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 16 தளங்கள் வரை இருப்பது அதிசயம்!
விஞ்ஞானம் அடிப்படையில்: கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருச்சி
» வெள்ளூர் அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» ஈங்கோய்மலை அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி
» வெள்ளூர் அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» ஈங்கோய்மலை அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|