தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சற்றே நகுக!!!

View previous topic View next topic Go down

சற்றே நகுக!!! Empty சற்றே நகுக!!!

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 1:02 pm

ஒரு விருந்தில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார்,''அந்த மூலையில் மிகவும் உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் அசிங்கமான பெண்மணி யார்?''
''அவள் என் மனைவி.''
''நான் அவரைச் சொல்லவில்லை ,அவர்  அருகில்  இருக்கும்  பெண்ணைக் குறிப்பிடுகிறேன்.''
''அவள் என் சகோதரி.''
**********
ஆங்கிலத்தில் அகராதியைத் தயாரித்த சாமுவேல் ஜான்சனைச் சந்தித்த இரண்டு பெண்மணிகள் அவரிடம்,''நீங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும்  உங்கள்  அகராதியில் சேர்க்காதது குறித்து மகிழ்ச்சி,''என்றனர்.உடனே ஜான்சன் கேட்டார்,''ஏன் நீங்கள் அவற்றைத் தேடினீர்களா?''
**********
ஒரு பணியாள் தன்னுடைய செல்வந்தர் எஜமானிடம்,''நீங்கள் என்னை முழுசா நம்பலை.அதனால் வேலையை விட்டு நின்னுக்கிறேன்,''என்றான். அவர்,''நீ எப்படி அப்படி சொல்லலாம்?சாவிக்கொத்தையே உன்னை நம்பி மேஜையின் மேலே தானே வச்சிட்டு வெளியே போகிறேன்,''என்றார். பணியாள்,''உண்மைதான்.ஆனால் ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?''என்றான்.
**********
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிப்பதாகக் கூறினான்.அவன் நண்பன் கேட்டான்,''என்ன,முதல் பார்வையிலேயே காதலா?''இளைஞன் சொன்னான்,''இல்லை இது இரண்டாவது பார்வையில் நிகழ்ந்தது.''  எனென நண்பன் விளக்கம் கேட்க அவன்  சொன்னான்,''முதல் முறை பார்த்தபோது அவள் பணக்காரப்பெண் என்று தெரியாது.''
**********
ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,''என் கணவர் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார்.''என்று சொன்னார்.மருத்துவர் ,''இந்த மாத்திரையைக் கொடுங்கள்.அவர் ஆழ்ந்து தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''என்றார்.அந்தப்பெண் சொன்னாள்,''டாக்டர்,அவருக்குத் தூக்க மாத்திரை  வேண்டாம்.நான் தூங்காமல் இருக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள்.ஏன்என்றால் அவர் தூக்கத்தில் பேசுவது, முழிச்சிக்கிட்டு இருக்கும் போதுபேசுவதைவிட சுவாரசியமா இருக்கு.''
**********
ஒரு பேச்சாளர் சிறப்பு விருந்தினரை வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.ஐந்து நிமிடம் கழித்து அந்த சிறப்பு விருந்தினர்,எழுந்து,''தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்,''என்றார்.அருகிலிருந்தவர்,''ஏன் ஐந்து நிமிடமாக ஒன்றும் சொல்லாமல் இப்போது சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''நானே அதில் மயங்கி மெய் மறந்துவிட்டேன்.அதனால்தான்.''
**********
ஒரு சிறுவனின் அருகில் ஒரு அழகிய நாய் இருந்தது.அங்கு வந்த அவன் நண்பன் கேட்டான்,''உன் நாய் கடிக்குமா?'''கடிக்காது,''என்று பதில் வந்தது.நண்பன் உடனே அந்த நாயின் நெற்றியில் கை வைத்ததும் அந்த நாய் அவனை கடிக்காத குறையாய் உறுமி அவன் மீது பாய்ந்தது.வெலவெலத்துப்போன நண்பன் ''உன் நாய் கடிக்குமா என்று கேட்டேன்.நீ ஏன் அது கோபக்கார நாய் எனச் சொல்லவில்லை?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,''என நாய் சாதுவானது அது என் வீட்டில் இருக்கிறது.இது என் நாய் இல்லை வேறு யாருடையதோ?''
**********
                                        இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சற்றே நகுக!!! Empty Re: சற்றே நகுக!!!

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 1:05 pm

முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ்யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
*********
இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
எல்லாம் செலவழிஞ்சு போச்சுஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்
அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி
***********
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன்சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்னந்த கஷடத்துல ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாதுபாருங்க
****************
டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு
இத நீங்க சொல்லவே வேண்டாம்எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்கமுடியும்.
************
ஞாபக மறதி 
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காமடிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டிஇன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சற்றே நகுக!!! Empty Re: சற்றே நகுக!!!

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 1:12 pm

'எப்படிங்க வாழ்க்கை?'
''மாமூல் வாழ்க்கைதானுங்க.''
'அப்போ சம்பளம் அப்படியே மிச்சம்னு சொல்லுங்க.'
**********
'முட்டைக்கு நடுவில என்ன இருக்கு?'
''மஞ்சள் கரு தான்.''
'இல்லை,ட் என்னும் எழுத்து தான்.'
**********
''ஒரு ஐம்பது பைசா காணாமல் போனதற்காக இருட்டில் தேடிக்கிட்டு இருக்காயே,காலையில் தேடக்கூடாதா?'
''அட,காலையிலிருந்து தான் தேடிக்கிட்டிருக்கேன்.''
**********
புலவர்: உங்கள் கடையிலே ரவா வாங்க வேண்டும் என்பது என் பேரவா.நான் வரவா?இல்லை என் பையனை அனுப்பித்தரவா?
கடைக்காரர்: ஒரே தொந்தரவா  போச்சு.
**********
தாய்: மகனே,உன்னை உளுந்தும் பெருங்காயமும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் நீ கீழே விழுந்து பெருங்காயத்துடன்    வந்திருக்கிறாயே?
**********
''புளிரசம் வைக்கவா,மிளகு ரசம் வைக்கவா என்பதில் உனக்கும் உன் மாமிக்கும் ஏற்பட்ட சண்டை என்னாச்சு?''
'அக்கம் பக்கத்தில வந்து சமரசம் செஞ்சாங்க.' 
**********
''இங்கு சப்தம் செய்யாதீர்கள்''என்று ஒரு அரசு அலுவகத்தில்  ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.குறும்புக்காரர் ஒருவர் அதன் பக்கத்திலேயே,'இல்லையென்றால் நாங்கள் எழுந்து விடுவோம்.'என்றுஎழுதி வைத்தார்.
**********
காதல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்ட தந்தை கேட்டார்,''அவனிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?''மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள்,''இதே கேள்வியைத்தான் அப்பா அவரும் கேட்டார்.'
**********
''கண்ணே, என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காகத்தான் என்னைக் காதலிக்கிறாயா?''
'இல்லை,என்னிடம் பணம் இல்லை என்பதற்காகத்தான் காதலிக்கிறேன்.'
**********
விபத்தில்  நினைவிழந்த கணவன்,நினைவு வந்ததும் கேட்டான்,''நான் சொர்க்கத்தில் இருக்கிறேனா?''மனைவி சொன்னாள்,'நான் இங்கே இருக்கிறேன் தெரியவில்லையா?'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சற்றே நகுக!!! Empty Re: சற்றே நகுக!!!

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 1:13 pm

ஒரு இடத்தில் காந்தி,ஜான்சி ராணி ,வீர சிவாஜி ஆகியோரின் சிலைகள் இருந்தன.அந்த வழியே போன ஒருவரிடம் காந்தி சிலை சொன்னதாம்,''இதோ பாரப்பா,அவங்க இரண்டு பெரும் ஜம்முன்னு குதிரை மேலே உட்கார்ந்திருக்காங்க!எனக்கும் ஒரு குதிரை தரக்கூடாதா?''வந்த ஆள் சிலை பேசுகிறதைப் பார்த்து ,ஒரு மந்திரியிடம் போய் சொல்லி அவரை அழைத்து வந்தார்.காந்தி சிலை கேட்டதாம்,''என்னப்பா,ஒரு குதிரையை நான் கேட்டால் ஒரு கழுதையைக் கூட்டி வந்திருக்கிறாயே!''
**********


அமெரிக்க விஞ்ஞானி; நாங்கள் ஒரு கருவி கண்டு பிடித்துள்ளோம்.அதன் முன்னால் யாரும் பொய் பேச முடியாது.
இந்திய விஞ்ஞானி; இது ஒன்றும் புதிதில்லை.இந்தியர்களாகிய நாங்கள் அந்த மாதிரிக் கருவியைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.
**********
நோயாளி ; ஒரு வாரமா உடம்பு சரியில்ல,டாக்டர்.
டாக்டர் ; ஒரு வாரமா ஏன்இங்கு வரலை?
நோயாளி ; அதான் சொன்னேனே,உடம்பு சரியில்லையின்னு.
**********
''மூணு பேர் ஆத்தில குதிச்சு நீந்தினாங்க..அதில ஒருத்தர் முடி தான் நனைந்து இருந்தது.''
'அது எப்படி?'
''மீதி ரெண்டு பேர் தலையும் வழுக்கை.''
**********
நாவலாசிரியர் ; தெரியுமா உனக்கு?கொஞ்ச நேரத்துக்கு முன்னால்
புத்தகம்  வாங்க வந்த ஒருவன் அந்தக் கடையிலிருந்து நான் எழுதிய நாவல் ஒன்றைத் திருடிக் கொண்டு போய் விட்டானாம்.
மற்றவர்; அதற்கான் தண்டனையை அவன்  சீக்கிரம் அனுபவிப்பான்.
**********
''நேத்து ராத்திரி டி.வி.இல வானிலை  அறிக்கை கேட்டாயா?''
;நான் கேட்கலை.அவங்கதான் சொன்னாங்க.' 
**********
''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் தப்பிச்சிட்டேன்.'
'ஆச்சரியமா இருக்கே,எப்படி?'
''நான் விழுந்தது ஏணியின் இரண்டாவதுபடியிலிருந்து தானே!''
**********
முதலாளி/; கோழிப் பண்ணையில் வேலைக்கு வந்தால் கோழி முட்டையைத் திருட மாட்டாயே?
தொழிலாளி;கேட்டுப் பாருங்க எசமான்,நான் முன்னே வேலை பார்த்த கப்பல் கம்பெனியிலே ஒரு கப்பலைக் கூடத் திருடினதில்லீங்க.
**********
ஒரு விவசாயி வங்கிக்கு சென்று,இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான்.'உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?"என்று அதிகாரி கேட்டார்.''இருபது மாடுகள் ''என்றான் விவசாயி.கடன் கொடுக்கப் பட்டது.சில மாதங்கள் கழித்து விவசாயி நிறைய பணத்துடன் வங்கிக்கு வந்து,கடனை அடைத்தான்.மீதிப் பணத்துடன் புறப்பட்ட அவனை பார்த்து அதிகாரி,'கையிலிருக்கும் பணத்தையும் இந்த வங்கியிலேயே போட்டு விடுங்களேன்.'என்றார்.சந்தேகப் பார்வையுடன் விவசாயி கேட்டான்,''உங்களிடம் எத்தனை மாடுகள் உள்ளன?''
**********
யாருக்கும் சுலபமாகப் பணம் கொடுக்காத வட்டிக் கடைக் காரர் ஒருவரிடம் கடன் வாங்க வந்தார் ஒருவர். வட்டிக் கடைக்காரர் ஒரு சோதனை வைத்தார்.'என் கண்ணில் ஒன்று போலிக்கண்.அதை சரியாகக் கண்டு பிடித்தால் கடன் தருகிறேன்.'என்றார்.வந்தவர் சரியான விடையை சொல்ல,வட்டிக் கடைக்காரர் அதிசயத்துடன்,'எப்படி சரியாகச் சொன்னீர்கள்?'என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''அந்தக் கண்ணில் தான் கொஞ்சம் கருணை இருப்பதாகத் தெரிந்தது.''



http://iruvarullam.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சற்றே நகுக!!! Empty Re: சற்றே நகுக!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum