Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
Page 1 of 1 • Share
அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
கர்நாடக சங்கீதத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு பாடகர்.அப்போது முன் வரிசையில் ஒரு அழகான வாலிபர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழகுள்ளதுரைஇவர் யாரடி?''என்று பாடினார்.அடுத்து ஒரு குள்ளமான ரசிகர் ஒருவர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழ குள்ள துரை இவர் யாரடி?''என்று பிரித்துப் பாடினார்.பின்னர் ஒரு வளர்ந்த வாலிபர் வந்தார்.அவரைப்பார்த்தவுடன்,''அழகுள்ள துரை ஆறடி'' என்று புலவர் ஆளுக்கேற்ற மாதிரி பாடி கை தட்டலைப் பெற்றார்.
**********
பாடகர் கர்னாடகசங்கீதம் ஒன்றைப் பாடி ஆரம்பித்த போது,எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்.காரணம் வேறொன்றுமில்லை.''தூது போனாயே,''என்னும் வரியை,''தூ தூ போ நாயே,'' என்று இழுத்துப் பாடியதால் வந்த வினை.
**********
கடற்கரையில் சிறுவன் அப்பாவிடம் கேட்கிறான்,''அப்பா அவர்யார்?'' 'அவரா,கடலை விற்பவர்.'
''அப்போ,இவ்வளவு பெரிய கடல் அவருக்கு சொந்தமா?''
*********
''வரவர எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது.''
'அன்னைக்கு நான் தூரத்தில் போய்க் கொண்டிருந்தேன்.என்னை சரியாய் அடையாளம் தெரிந்து கூப்பிட்டாயே?'
''போகும் போது தானே,எனக்கு வரவரத்தான் கண்ணு தெரியலேன்னு சொன்னேன்.''
**********
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
**********
**********
பாடகர் கர்னாடகசங்கீதம் ஒன்றைப் பாடி ஆரம்பித்த போது,எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்.காரணம் வேறொன்றுமில்லை.''தூது போனாயே,''என்னும் வரியை,''தூ தூ போ நாயே,'' என்று இழுத்துப் பாடியதால் வந்த வினை.
**********
கடற்கரையில் சிறுவன் அப்பாவிடம் கேட்கிறான்,''அப்பா அவர்யார்?'' 'அவரா,கடலை விற்பவர்.'
''அப்போ,இவ்வளவு பெரிய கடல் அவருக்கு சொந்தமா?''
*********
''வரவர எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது.''
'அன்னைக்கு நான் தூரத்தில் போய்க் கொண்டிருந்தேன்.என்னை சரியாய் அடையாளம் தெரிந்து கூப்பிட்டாயே?'
''போகும் போது தானே,எனக்கு வரவரத்தான் கண்ணு தெரியலேன்னு சொன்னேன்.''
**********
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
**********
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
முருகா!
தின்றே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரியவர் சாகும் தருவாயில் இருந்தார்.அவர் எந்த கோவிலுக்கும் போனதில்லை.சாகும் நிலையில் மெதுவாக உதட்டை அசைத்து,''மு.........''என்றார்.உறவினர்களுக்கு மகிழ்ச்சி.'அப்படித்தான், முருகன் பெயரைச் சொல்லுங்கள்.'என்றனர்.பெரியவர் கொஞ்சம் சத்தமாக ,''முருக .....''என்றார்.''சபாஷ்,மூன்று எழுத்து வந்து விட்டது.இன்னும் ஒரே எழுத்து தான்,சொல்லுங்கள்.''என்றனர் உறவினர்கள்.பரபரப்புடன் பெரியவர் தன பலம் முழுவதையும் திரட்டி,''முருகமுருக ஒரு தோசை வேண்டும்,''என்றார்.உறவினர்கள் முகத்தில் அசடு வழிந்தது.
தின்றே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரியவர் சாகும் தருவாயில் இருந்தார்.அவர் எந்த கோவிலுக்கும் போனதில்லை.சாகும் நிலையில் மெதுவாக உதட்டை அசைத்து,''மு.........''என்றார்.உறவினர்களுக்கு மகிழ்ச்சி.'அப்படித்தான், முருகன் பெயரைச் சொல்லுங்கள்.'என்றனர்.பெரியவர் கொஞ்சம் சத்தமாக ,''முருக .....''என்றார்.''சபாஷ்,மூன்று எழுத்து வந்து விட்டது.இன்னும் ஒரே எழுத்து தான்,சொல்லுங்கள்.''என்றனர் உறவினர்கள்.பரபரப்புடன் பெரியவர் தன பலம் முழுவதையும் திரட்டி,''முருகமுருக ஒரு தோசை வேண்டும்,''என்றார்.உறவினர்கள் முகத்தில் அசடு வழிந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
சகிப்புத்தன்மை
ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
-----தென்கச்சி சுவாமிநாதன்.
ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
-----தென்கச்சி சுவாமிநாதன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
''புல்லைத்தின்றால் கண் நன்றாகத் தெரியும்.''
'எப்படிச் சொல்கிறாய்?'
''பாரேன்,எந்த மாடாவது கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கா?''
********
ஒரு நேர்முக சோதனையில்:
தேர்வர்:இரண்டும் இரண்டும்எவளவு?
முதல்வர்:நான்கு,சார்.
தேர்வர்:சரி நீங்கள் போகலாம் .(அடுத்தவரிடம்)இரண்டும் இரண்டும் எவ்வளவு?
இரண்டாமவர்:நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான்.
இரண்டாமவருக்கு வேலை கிடைத்தது.
**********
''என்ன பிரமாதமான பாடகர்!அவர் குரல் அரங்கை நிரப்பி விட்டதே!''
'ஆமாம்,அந்த குரலுக்கு இடம் கொடுப்பதற்காக நம்மில் பலர் அரங்கிலிருந்து வெளியில் வரும்படி ஆகி விட்டதே!'
***********
ஒருவன் தனது கழுதையின் மீது நிறைய சுமை ஏற்றிச் சென்று கொண்டிருந்தான்.கழுதை அங்கங்கே நின்று கொண்டது.அவன் அதை நன்கு அடித்தான்.அதைப் பார்த்த ஒருவர் ,''கழுதையை ஏனப்பா இப்படி அடிக்கிறாய்?என்று கேட்டார்.அவன் பதில் சொல்ல வில்லை.அவன் ஒவ்வொருமுறை அடிக்கும் போதும் ஒவ்வொருவராக அடிக்க வேண்டாம் என்றனர்.அவன் அவர்கள் முன்னாலேயே திடீரென மண்டியிட்டு,'என்னை நீ மன்னிக்க வேண்டும்.உனக்கு சிபாரிசு செய்ய உன் உறவினர் இத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது.'என்று கழுதையிடம் சொன்னான்.
*************
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக் கடினமாக இருந்தது. இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.பைலட்டால் நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச் சொன்னார்.அந்த பைத்தியம் சொன்னார்,''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.அவ்வளவுதான்.''
************
'எப்படிச் சொல்கிறாய்?'
''பாரேன்,எந்த மாடாவது கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கா?''
********
ஒரு நேர்முக சோதனையில்:
தேர்வர்:இரண்டும் இரண்டும்எவளவு?
முதல்வர்:நான்கு,சார்.
தேர்வர்:சரி நீங்கள் போகலாம் .(அடுத்தவரிடம்)இரண்டும் இரண்டும் எவ்வளவு?
இரண்டாமவர்:நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான்.
இரண்டாமவருக்கு வேலை கிடைத்தது.
**********
''என்ன பிரமாதமான பாடகர்!அவர் குரல் அரங்கை நிரப்பி விட்டதே!''
'ஆமாம்,அந்த குரலுக்கு இடம் கொடுப்பதற்காக நம்மில் பலர் அரங்கிலிருந்து வெளியில் வரும்படி ஆகி விட்டதே!'
***********
ஒருவன் தனது கழுதையின் மீது நிறைய சுமை ஏற்றிச் சென்று கொண்டிருந்தான்.கழுதை அங்கங்கே நின்று கொண்டது.அவன் அதை நன்கு அடித்தான்.அதைப் பார்த்த ஒருவர் ,''கழுதையை ஏனப்பா இப்படி அடிக்கிறாய்?என்று கேட்டார்.அவன் பதில் சொல்ல வில்லை.அவன் ஒவ்வொருமுறை அடிக்கும் போதும் ஒவ்வொருவராக அடிக்க வேண்டாம் என்றனர்.அவன் அவர்கள் முன்னாலேயே திடீரென மண்டியிட்டு,'என்னை நீ மன்னிக்க வேண்டும்.உனக்கு சிபாரிசு செய்ய உன் உறவினர் இத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது.'என்று கழுதையிடம் சொன்னான்.
*************
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக் கடினமாக இருந்தது. இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.பைலட்டால் நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச் சொன்னார்.அந்த பைத்தியம் சொன்னார்,''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.அவ்வளவுதான்.''
************
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
ஒரு தந்தை தன ஐந்து பிள்ளைகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் பெயரை வைத்தார்.அவர்கள் போல் இவர்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவர் ஆசை.ஆண்டுகள் பல கழிந்தபின்,நண்பர் ஒருவர்,தந்தையின் ஆசை நிறைவேறியதா எனக் கேட்டார். தந்தை சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொண்டனர்.'''அப்படியா,மகிழ்ச்சி'என்றார் நண்பர்.
தந்தை சொன்னார்,'ஆமாம் சொத்து பூராத்தையும் சூதாட்டத்திலேயே விட்டுட்டாங்க.'
************
ஒரு பெண்:என்னய்யா,போன தடவை நீ எடுத்த போட்டோவெல்லாம் அழகாய் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று உனக்கு?இப்போ எடுத்த போட்டோ சகிக்கலையே?
புகைப்படக்காரர்:உண்மை தான் அம்மா.போன தடவை நான் புகைப்படம் எடுத்த போதுஎனக்கு பதினைந்து வருடம் குறைவாக இருந்தது.இன்று எனக்கு வயதாகி விட்டது பாருங்கள்!அது தான் காரணம்.
***********
சேகரும் சோமுவும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்.திடீரென பத்தடி தூரத்தில் ஒரு புலி!சேகர் ஓடுவதற்குத் தயாரானான்.''புலியை விட உன்னால் வேகமாக ஓட முடியும் என்று நம்புகிறாயா?என்று கேட்டான் சோமு.'அது அவசியமில்லை.உன்னைவிட வேகமாக ஓடினால் போதுமே!'என்றான்.
*********
மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார்கள்,இல்லையா?இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லாம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.
கணவன்:பேஷ்,பேஷ்!
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு.
********
மாமியார்:ஏண்டி,மருமகளே!நீ வாங்கி வந்த கற்பூரத்தில் வாசனையே இல்லையே?
மருமகள்:கழுதைக்கு எப்படி மாமி கற்பூர வாசனை தெரியும்?
*********
புதிதாக அமைச்சர் பதவி ஏற்றார் ஒருவர்.அவர் பயன்படுத்த ஒரு கார் அளிக்கப் பட்டிருந்தது.அவர் அந்தக் காரின் டிரைவரிடம்,''நீங்கள் சிறிது நேரம் ஓய்வுஎடுங்கள்.நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.''என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த டிரைவர்,'நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்.ஏனெனில் இது கார்.நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல.கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு.'என்றார்
http://iruvarullam.blogspot.in
தந்தை சொன்னார்,'ஆமாம் சொத்து பூராத்தையும் சூதாட்டத்திலேயே விட்டுட்டாங்க.'
************
ஒரு பெண்:என்னய்யா,போன தடவை நீ எடுத்த போட்டோவெல்லாம் அழகாய் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று உனக்கு?இப்போ எடுத்த போட்டோ சகிக்கலையே?
புகைப்படக்காரர்:உண்மை தான் அம்மா.போன தடவை நான் புகைப்படம் எடுத்த போதுஎனக்கு பதினைந்து வருடம் குறைவாக இருந்தது.இன்று எனக்கு வயதாகி விட்டது பாருங்கள்!அது தான் காரணம்.
***********
சேகரும் சோமுவும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்.திடீரென பத்தடி தூரத்தில் ஒரு புலி!சேகர் ஓடுவதற்குத் தயாரானான்.''புலியை விட உன்னால் வேகமாக ஓட முடியும் என்று நம்புகிறாயா?என்று கேட்டான் சோமு.'அது அவசியமில்லை.உன்னைவிட வேகமாக ஓடினால் போதுமே!'என்றான்.
*********
மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார்கள்,இல்லையா?இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லாம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.
கணவன்:பேஷ்,பேஷ்!
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு.
********
மாமியார்:ஏண்டி,மருமகளே!நீ வாங்கி வந்த கற்பூரத்தில் வாசனையே இல்லையே?
மருமகள்:கழுதைக்கு எப்படி மாமி கற்பூர வாசனை தெரியும்?
*********
புதிதாக அமைச்சர் பதவி ஏற்றார் ஒருவர்.அவர் பயன்படுத்த ஒரு கார் அளிக்கப் பட்டிருந்தது.அவர் அந்தக் காரின் டிரைவரிடம்,''நீங்கள் சிறிது நேரம் ஓய்வுஎடுங்கள்.நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.''என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த டிரைவர்,'நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்.ஏனெனில் இது கார்.நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல.கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு.'என்றார்
http://iruvarullam.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|