தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!

View previous topic View next topic Go down

சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !! Empty சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 12:22 pm

''இந்த எலுமிச்சைக் கலர்ப் புடவையை எப்படி எடுத்த?''
'என் கணவரைப் பிழிஞ்சு தான் .' 
********
அப்பா:யாரையும் டீ போட்டுப் பேசக்கூடாது.
மகன்:சரி டா (டி)
********
ஹோட்டலில் சாப்பிட்டவர் பணம் இல்லாதலால் மாவாட்டிக் கொண்டிருந்தார்.அங்கே வந்த முதலாளி அவரைப் பார்த்து விட்டு,''நீங்கள் ஒரு எழுத்தாளரா?''எனக் கேட்டதும் அவருக்கு ஆச்சரியம்.'எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டார்.
முதலாளி சொன்னார்,''நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!''
*********
ஒரு மகளிர் அழகு நிலையம் முன் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்.அவர்கள் ஒரு வேளை உங்கள் பாட்டியாக இருக்கலாம்.
***********
''அம்மா தாயே,பிச்சை போடுங்கம்மா.''
'ஒண்ணுமில்லை,பக்கத்து வீட்டுக்குப் போப்பா.'
''பக்கத்து வீட்டுக்காரன் தாம்மா,நான்.''
***********
''சர்வர்,உங்கள் ஹோட்டல் மெது வடை நன்றாக இருக்கிறது.இந்த வடையைப் போட்டவரை பாராட்ட வேண்டும்.அவரை கூப்பிட முடியுமா?''
'அவர் சென்ற ஒரு வாரமாக லீவில் இருக்கிறார்,சார்.'
***********
''நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க,''என்று ஒருவர் தன நண்பரிடம் சலித்துக் கொண்டார்.'அப்படி என்ன நடந்து விட்டது?'என்று நண்பர் கேட்க,''நான் ரேசில் பணம் கட்டிய குதிரை,''என்றார் அவர்.
************
''எப்போதும் சந்தோசம் தரும் செயல்களையே செய்து பழக வேண்டும்.உதாரணமாக வேலை செய்கிற இடத்திலேயே பாட்டுப் பாட முயற்சி செய்யுங்கள்.''
'அது முடியாது,டாக்டர்,'
''ஏன்?''
'நான் ஒரு நாதஸ்வர வித்வான்.'
**********
''உங்க மாமியார் கீழே விழுந்தப்போ நீ தூக்கி விடலையாமே?''
'நான் என்ன செய்வது?டாக்டர் தான் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே!'
*************
ஒரு பாடகர் சொன்னார்,''புன்னகவராளி ராகம் பாடினா ,பாம்பு வரும்.நீலாம்பரி பாடினா தூக்கம் வரும்.மோகனம் பாடினா மகிழ்ச்சி வரும்.....''
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் கேட்டான்,''எந்த ராகம் பாடும் போது கல் வரும்?''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !! Empty Re: சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 12:24 pm

''என்னங்க,நூல் புடவை எடுத்துத் தந்துட்டு பட்டுப் புடவையின்னு சொல்றீங்களே?''
'பின்னே சும்மாவா?..இது அடிபட்டு,மிதிபட்டு,லோல்பட்டு,கடன்பட்டு வாங்கின புடவை ஆச்சே!'
***********
''உன் பேர் என்னப்பா?பேங்க்ல வாங்கின கடனை அடைச்சிட்டயா?''
'அடைக்கலசாமி.'
**********
''உங்கள் ஆபீசில் ஒரு மடையன் இருக்கிறான்.''
'எங்கள் ஆபீசில் இருபது பேர் இருக்கிறோம்.யாரை நீங்க சொல்றீங்க?'
**********
''உன்னைப் பார்த்தால் கோபால் ஞாபகம் வருது.''
'நான் ஒன்றும் கோபால் மாதிரி இல்லையே?'
''இல்லை,அவனும் எனக்கு நூறு ரூபாய் பாக்கி தரனும்.''
**********
''செருப்புப் போட்டாலும் முள் குத்தும்.அது எப்போ?''
'மீன் சாப்பிடும் போது.'
***********
''நான் பார்த்து எந்தக் கழுதை கழுத்தில் தாலியைக் கட்டச் சொன்னாலும்,உடனே என் பையன் கட்டிடுவான்.''
'உங்களுக்கு என்ன போச்சு?நாளைக்கு உதை வாங்கப் போவது அவன் தானே?'
*********
தங்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட ஒரு தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹோட்டலுக்குப் போனார்கள்.மேஜையில் அமர்ந்ததும் தாத்தா கேட்டார்,''இன்னொரு பாதாம் அல்வா சாப்பிடுகிறாயா?''
பாட்டி:இப்போது தானே உள்ளே நுழைந்தோம்?இன்னொரு பாதாம் அல்வா என்கிறீர்களே ?
தாத்தா: மறந்திட்டாயா?கல்யாணமான புதிதில் நாம் இருவரும் பாதாம் அல்வா சாப்பிட்டோமே?
*******
''ஒவ்வொரு சனிக்கிழமையும், என் மனைவியைப் பார்க்க மதுரைக்குப் போய்விடுவேன்.''
'அப்போ உங்க மனைவி, சனி எப்போடா வரும்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ?'
*******
கணவன்:நான் வாங்கிக் கொடுத்த புதுச் சட்டை நல்லாயிருக்கா?
மனைவி:உங்களை மாதிரியே இருக்கு.
கணவன்:என்னை மாதிரியா?எப்படி?
மனைவி:லூசா இருக்கு.
*********
''உங்க பையன்களோட பேர் என்னாங்க?''
மூத்தவன் பிரத்யுமணன்.அடுத்தவன் விஷ்வக்சேனன்.மூன்றாமவன் பேர் ஜாங்கிரி.
''அதென்னங்க ஜாங்கிரின்னு பேரு?''
'என் மனைவிதான்,முதல் இரண்டு பேரும் வாயில் '.நுழையவில்லை.மூன்றாவது பையனுக்காவது வாயில் நுழையிற மாதிரி பேர் வைக்கச் சொன்னாள்.அதனால தான் வாயில நுழையிற மாதிரி பேர் வச்சேன்.'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !! Empty Re: சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 12:25 pm

''கோழியின் வயதை எப்படிக் கண்டு பிடிப்பாய்?''
'பல்லாலதான்.'
''கோழிக்குத்தான் பல்லே இல்லையே?''
'எனக்கு இருக்குதே!'
************
''உங்க வீடு எங்கப்பா இருக்கு?''
'அரச மரத்துக்கு எதிரில் ,சார்.'
''அரச மரம் எங்கே இருக்கு?''
'எங்க வீட்டுக்கு எதிரில்,சார்.'
''சரி,உங்க வீடும் அரச மரமும் எங்கே இருக்கு?''
'எதிரும் புதிருமா இருக்கு,சார்.'
*************
''தொப்பி என்ன விலைங்க?''
'ஐம்பது ரூபாய்.'
''அடேயப்பா,செருப்பே வாங்கி விடலாம் போலிருக்கே!''
'வாங்கலாம்,ஆனால் செருப்பைத் தலையில் வைத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்களே!'
**************
நடத்துனர்:ஏனய்யா,டிக்கெட் வாங்கலியா?
பயணி:என் பெஞ்சாதிதான் வெளியே எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா.
***********
''யானை படுத்தால் குதிரை மட்டம்,ஸ்கூட்டர் படுத்தால்..?''
'ஆபீஸ் மட்டம்'
**********
வேட்டைக்காரர்:ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.
நண்பர்:ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?
வேட்டைக்காரர்:எப்படி இருக்கும்?எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!
***********
''புது வீட்டுக்கு வாசல் கால் வைக்கப் போகிறேன்.அவசியம் வரணும்.''
'அட,இதுக்கெல்லாம் நான் எதுக்குங்க?'
''அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க?ஒண்டி ஆளா அதை என்னால எடுத்து வைக்க முடியுமா,என்ன?''
************
''தோட்டத்துல காய் கறிச் செடியெல்லாம் போட்டீங்களே,என்னெல்லாம் வந்தது?''
'ஆடு வந்தது,மாடு வந்தது,எலி வந்தது,சண்டை வந்தது,அவ்வளவுதான்'
************
''என் மனைவி எப்போ சொன்னாலும்,எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா!''
'உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன்,சலிக்காமதான் செஞ்சிருப்பங்கன்னு.'
***********
''நல்லதா இரண்டு வாழைப் பழம் கொடுங்களேன்!''
(வாழைப்பழத்தைக் கையில் வாங்கியதும்,அது காய் போல் இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு)
''ஏங்க,சாப்பிடுற மாதிரி கொடுங்களேன்,''
கடைக்காரர் அவரிடமிருந்து வாங்கி முழுசாய்த் தோலை உரித்து அவரிடம்
நீட்ட,.....வந்தவர் திகைக்கிறார்.



http://iruvarullam.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !! Empty Re: சிரிப்பு வருது !!சிரிப்பு வருது !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum