Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓஷோ -நகைச்சுவை
Page 1 of 1 • Share
ஓஷோ -நகைச்சுவை
உலகில் சிறந்தவர்
******************
பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,''உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,''உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே
.
எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த நகரம் எது?''மாணவர்கள் அனைவரும் பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள்,''பாரிஸ் நகரம்தான்சிறந்த நகரம்.'' ''பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?''என்று ஆசிரியர் கேட்கே,மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால்,அதுதான் சிறந்த இடம் என்றனர்.
''நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறைஎது?''என்று ஆசிரியர் கேட்க,அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.அடுத்து பேராசிரியர்,''அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?''என்று கேட்க,''நீங்கள்தான்,''என்று கூறினர். இப்போது பேராசிரியர்,நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம் கேட்டார்,''அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?''
nanri;iruvarullam
******************
பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,''உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,''உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே
.
எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த நகரம் எது?''மாணவர்கள் அனைவரும் பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள்,''பாரிஸ் நகரம்தான்சிறந்த நகரம்.'' ''பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?''என்று ஆசிரியர் கேட்கே,மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால்,அதுதான் சிறந்த இடம் என்றனர்.
''நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறைஎது?''என்று ஆசிரியர் கேட்க,அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.அடுத்து பேராசிரியர்,''அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?''என்று கேட்க,''நீங்கள்தான்,''என்று கூறினர். இப்போது பேராசிரியர்,நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம் கேட்டார்,''அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?''
nanri;iruvarullam
Re: ஓஷோ -நகைச்சுவை
தவறான காரியம்
***************
ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.
அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான் .அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை.உடனே விறுவிறுவென்று போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.
அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?
***************
ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.
அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான் .அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை.உடனே விறுவிறுவென்று போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.
அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?
Re: ஓஷோ -நகைச்சுவை
பறக்க முடியுமா?
**************
கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு பெரிய ஹோட்டலின் பத்தாவது மாடியில் விருந்து நடைபெற்றது.விருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர்.
மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர்,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில் இருந்ததை உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.
அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய்.உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தோம்.
''உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக் கேட்டார்.நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''
**************
கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு பெரிய ஹோட்டலின் பத்தாவது மாடியில் விருந்து நடைபெற்றது.விருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர்.
மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர்,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில் இருந்ததை உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.
அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய்.உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தோம்.
''உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக் கேட்டார்.நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''
Re: ஓஷோ -நகைச்சுவை
கால்பந்து
**********
யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.
உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின் தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''பூச்சித்தலைவன் சொன்னது,'
'அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''
**********
யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.
உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின் தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''பூச்சித்தலைவன் சொன்னது,'
'அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''
Re: ஓஷோ -நகைச்சுவை
முன் ஜாக்கிரதை
****************
ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''
****************
ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''
Re: ஓஷோ -நகைச்சுவை
முன் ஜாக்கிரதை
****************
ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.
சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''
****************
ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.
சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''
Re: ஓஷோ -நகைச்சுவை
விற்பனையாளன்
*************************
இடம் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த நிலம் நீண்ட நாட்களாக வாங்க ஆள் இல்லாமல் இருந்தது.அதன் உரிமையாளர் என்ன செய்வது என்று யோசிக்கையில் ஒரு விற்பனையாளன்,தான் அந்த இடத்தை விற்றுத் தருவதாகச் சொன்னான்.
அவனும் எப்படியோ பேசி ஒருஆளிடம் நிலத்தை விற்றுவிட்டான்.உரிமையாளருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.
பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.
அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.''வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு.'என்ன விளையாடுகிறீர்களா?
இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே கட்டப்பட்ட முதல் வீடாக இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு
கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்.''வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை
உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்.''இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.
நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..
நன்றி ; இருவர் உள்ளம் தளம்
*************************
இடம் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த நிலம் நீண்ட நாட்களாக வாங்க ஆள் இல்லாமல் இருந்தது.அதன் உரிமையாளர் என்ன செய்வது என்று யோசிக்கையில் ஒரு விற்பனையாளன்,தான் அந்த இடத்தை விற்றுத் தருவதாகச் சொன்னான்.
அவனும் எப்படியோ பேசி ஒருஆளிடம் நிலத்தை விற்றுவிட்டான்.உரிமையாளருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.
பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.
அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.''வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு.'என்ன விளையாடுகிறீர்களா?
இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே கட்டப்பட்ட முதல் வீடாக இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு
கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்.''வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை
உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்.''இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.
நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..
நன்றி ; இருவர் உள்ளம் தளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|