Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்றைய சிந்தனை துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
இன்றைய சிந்தனை துளிகள்
நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அவர்கள் ஒருவரை ஒருவரே வெறுக்கிறார்கள்.பொறாமையாலும்,பகைமையாலுமே வாழ்கிறார்கள்.அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.நீ அதை எடுத்துக்காட்டி அவர்களைக் குறை கூறத் தொடங்கினால் உடனே அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.உன்னை அழித்தே விடுவார்கள்.
**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப் படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப் படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய சிந்தனை துளிகள்
சொத்து சேர சேர ஒரு குடும்பத்தில் கலகம் உண்டாகும்.செல்வம் சேர சேர ஒரு ஜாதியில் பிளவு உண்டாகும்.அதிகாரம் வளர வளர ஒரு மதம் தன மரியாதை இழக்கும்.
**********
கர்வம் கொண்டவன் எல்லோரையும் தூஷிப்பான்.எல்லா நேரமும் தூஷிப்பான்.கர்வம் கொண்டவன் கடவுள் நிந்தனை செய்யவும் தயங்க மாட்டான்.
**********
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டை வெறும் கர்வக் கொப்பளிப்பாக மாற்றிவிட்டார்கள்.அலட்டலாய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சகட்டமாக இறை வழிபாடு ஆகிவிட்டது.அதனால்தான் மற்ற மதத்தினர் மீது ஆத்திரம் வருகிறது.
**********
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீதுதான்.
**********
கர்வப்படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும்.பொய் சொல்லாதே என்று மனசுக்குக் கட்டளை போட்டால் அது பொய் சொல்லும். கர்வப்படு என்று விட்டுவிட்டு,கர்வப்படுவதை வேடிக்கை பார்த்தா,நம்ம கர்வம் நம்ம எதிர்க்கே வெட்கப்பட்டு நம்மையே விட்டுட்டு ஓடிடும்.
**********
உதறி விடுவோமே என்று பயந்துதானே உரிமை கொண்டாடுகிறாய்.கலவரம் தானே உறவுக்குக் காரணம்?அதீத பயம் தானே குழு மனப்பான்மை?
**********
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல.அகந்தையைத் துறப்பதே துறவு.மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
**********
ஆசை,ஆங்காரம்,அதைரியம் மூன்றும் புத்தியை அலுப்படைய வைக்கும்.உடம்பிலுள்ள சுரப்பிகளை தேவையில்லாமல் வேலை வாங்கும்.அதனால் தூக்கம்,கனவு,மயக்கம்,வியாதி ஏற்படும்.ஆசையற்று இருப்பவருக்கு வியாதியில்லை.தூக்கமும் ஒரு வித நோயே.
**********
**********
கர்வம் கொண்டவன் எல்லோரையும் தூஷிப்பான்.எல்லா நேரமும் தூஷிப்பான்.கர்வம் கொண்டவன் கடவுள் நிந்தனை செய்யவும் தயங்க மாட்டான்.
**********
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டை வெறும் கர்வக் கொப்பளிப்பாக மாற்றிவிட்டார்கள்.அலட்டலாய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சகட்டமாக இறை வழிபாடு ஆகிவிட்டது.அதனால்தான் மற்ற மதத்தினர் மீது ஆத்திரம் வருகிறது.
**********
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீதுதான்.
**********
கர்வப்படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும்.பொய் சொல்லாதே என்று மனசுக்குக் கட்டளை போட்டால் அது பொய் சொல்லும். கர்வப்படு என்று விட்டுவிட்டு,கர்வப்படுவதை வேடிக்கை பார்த்தா,நம்ம கர்வம் நம்ம எதிர்க்கே வெட்கப்பட்டு நம்மையே விட்டுட்டு ஓடிடும்.
**********
உதறி விடுவோமே என்று பயந்துதானே உரிமை கொண்டாடுகிறாய்.கலவரம் தானே உறவுக்குக் காரணம்?அதீத பயம் தானே குழு மனப்பான்மை?
**********
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல.அகந்தையைத் துறப்பதே துறவு.மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
**********
ஆசை,ஆங்காரம்,அதைரியம் மூன்றும் புத்தியை அலுப்படைய வைக்கும்.உடம்பிலுள்ள சுரப்பிகளை தேவையில்லாமல் வேலை வாங்கும்.அதனால் தூக்கம்,கனவு,மயக்கம்,வியாதி ஏற்படும்.ஆசையற்று இருப்பவருக்கு வியாதியில்லை.தூக்கமும் ஒரு வித நோயே.
**********
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய சிந்தனை துளிகள்
திரும்பத்திரும்ப ஒரே எண்ணம்மனதில் வட்டமடித்துக் கொண்டிருப்பதை முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறோம்.இதிலிருந்து விடுபட ஒரே வழி,மனதின் பிரச்சினைகளை உங்கள் சொந்தப் பிரச்சினையாக நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.உலகம் ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி.பல பொருட்கள் அங்கேயிருந்தாலும் ஒரு சில தான் உங்களுக்கு தேவையானவை.
**********
உலகில் பிரச்சினை என்று ஒன்றும் கிடையாது.உங்களால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளைப் பிரச்சினைகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள்.சூழ்நிலை எப்படியிருந்தாலும் அதை உங்கள் முன்னேற்றத்திற்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.ஏதாவது ஒரு அனுபவம் கசப்பாகத் தோன்றினால் ,அது அந்த அனுபவத்தின் ருசியில்ல.அந்த சூழ்நிலையை நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள் என்று பொருள்.ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதைத் துரத்தி விட முடியாது.என்ன செய்தால் குறைவான பாதிப்பு ஏற்படும் என்று கவனித்து செயல் படுங்கள்.பிரச்சினையா,இல்லையா என்பது நிகழ்வில் இல்லை.அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
**********
சலிப்பு,உற்சாகமின்மை,விரக்தி இந்த மூன்றும் வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை.உலகில் எந்த உயிர் சக்திக்கும் இவை ஏற்படுவது கிடையாது.மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும்,எரிச்சலும் நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.வாழ்க்கை என்பதே உற்சாகம்தான்.ஒரு முடிவைக் கண்டு அது தோல்வி என எரிச்சல் கொள்ளக் கூடாது.
**********
இன்றைய மனிதனுக்கு யார் மீதும் முழு நம்பிக்கை இல்லை.எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சந்தேகங்கள் பெருகப் பெருக மனிதனுக்கு வாழ்க்கை பற்றிய தைரியம் குறைந்து போகிறது.சந்தேகங்கள் ஒரு மனிதனின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும்.அடுத்தவர் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள் தான் ஒரு கட்டத்தில் குற்றவாளியாகிறார்கள்.அவர்களது சந்தேகம் தான் வன்முறையாக உருவாகிறது.மனித வாழ்வு வளம் பெறசந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
**********
http://iruvarullam.blogspot.in
**********
உலகில் பிரச்சினை என்று ஒன்றும் கிடையாது.உங்களால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளைப் பிரச்சினைகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள்.சூழ்நிலை எப்படியிருந்தாலும் அதை உங்கள் முன்னேற்றத்திற்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.ஏதாவது ஒரு அனுபவம் கசப்பாகத் தோன்றினால் ,அது அந்த அனுபவத்தின் ருசியில்ல.அந்த சூழ்நிலையை நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள் என்று பொருள்.ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதைத் துரத்தி விட முடியாது.என்ன செய்தால் குறைவான பாதிப்பு ஏற்படும் என்று கவனித்து செயல் படுங்கள்.பிரச்சினையா,இல்லையா என்பது நிகழ்வில் இல்லை.அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
**********
சலிப்பு,உற்சாகமின்மை,விரக்தி இந்த மூன்றும் வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை.உலகில் எந்த உயிர் சக்திக்கும் இவை ஏற்படுவது கிடையாது.மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும்,எரிச்சலும் நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.வாழ்க்கை என்பதே உற்சாகம்தான்.ஒரு முடிவைக் கண்டு அது தோல்வி என எரிச்சல் கொள்ளக் கூடாது.
**********
இன்றைய மனிதனுக்கு யார் மீதும் முழு நம்பிக்கை இல்லை.எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சந்தேகங்கள் பெருகப் பெருக மனிதனுக்கு வாழ்க்கை பற்றிய தைரியம் குறைந்து போகிறது.சந்தேகங்கள் ஒரு மனிதனின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும்.அடுத்தவர் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள் தான் ஒரு கட்டத்தில் குற்றவாளியாகிறார்கள்.அவர்களது சந்தேகம் தான் வன்முறையாக உருவாகிறது.மனித வாழ்வு வளம் பெறசந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
**********
http://iruvarullam.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய சிந்தனை துளிகள்
பிரச்சினையா,இல்லையா என்பது நிகழ்வில் இல்லை.அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது
.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இன்றைய சிந்தனை களம்
» இன்றைய சிந்தனை துளிகள்
» இன்றைய சிந்தனை துளிகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனை துளிகள்
» இன்றைய ரமலான் சிந்தனை
» இன்றைய சிந்தனை துளிகள்
» இன்றைய சிந்தனை துளிகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனை துளிகள்
» இன்றைய ரமலான் சிந்தனை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|