Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறப்பான சிந்தனை துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
சிறப்பான சிந்தனை துளிகள்
முதன்மையான பரிசு
பகைவனுக்கு --மன்னிப்பு.
நண்பனுக்கு --இதயம்
குழந்தைக்கு --நன்னடத்தை
தந்தைக்கு --மரியாதை.
தாய்க்கு --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும் --தாராள மனப்பான்மை
பகைவனுக்கு --மன்னிப்பு.
நண்பனுக்கு --இதயம்
குழந்தைக்கு --நன்னடத்தை
தந்தைக்கு --மரியாதை.
தாய்க்கு --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும் --தாராள மனப்பான்மை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறப்பான சிந்தனை துளிகள்
விளக்கம்
தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
உண்மையே பேசுபவர்கள்.
இனிமையாகப் பேசுபவர்கள்.
அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
---ஆதி சங்கரர்.
(ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)
தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
உண்மையே பேசுபவர்கள்.
இனிமையாகப் பேசுபவர்கள்.
அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
---ஆதி சங்கரர்.
(ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறப்பான சிந்தனை துளிகள்
மாக்கியவெல்லி
இத்தாலியைச் சேர்ந்த சிந்தனையாளர் மாக்கியவெல்லி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.எந்த ஆட்சியும்நிலை பெறக்கூடிய வழிவகைகள் எவை எனச் சிந்தித்தவர்.குடியரசு,முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும் என்பது மாக்கியவெல்லியின் கொள்கை.முசோலினி,ஹிட்லர்,லெனின்,ஸ்டாலின் போன்ற பலரும் மாக்கியவெல்லியை பின்பற்றியவர்கள்.அவருடைய சிந்தனைகளில் சில முத்துக்கள்;
*ஆள்பவன் தேவைக்குத் தகுந்த மாதிரி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*ஒரு அரசன் நம்பிக்கை வைப்பதிலும் செயலாற்றுவதிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போகவும் கூடாது:அதிக சந்தேகம் கொண்டு திறமையற்றவனாகவும் கூடாது.
*தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்கு குற்றம் செய்வதைக் காட்டிலும்,அச்சமுறச் செய்பவனுக்கு குறைவாகவே குற்றம் இழைப்பது மனிதர் இயல்பு. ஏனெனில் அன்பு மனிதர்களின் சுய நலத்தில் எழுவது. நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள்.அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும்.ஆனால் தண்டனை,பயத்தால் ஏற்படக் கூடியதால் எப்போதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமலிருக்கும்.
*பிறருடைய சொத்துக்களை மட்டும் பறித்துக் கொள்ளக் கூடாது.தங்கள் தந்தை இறந்ததைக் கூட எளிதாக மக்கள் மறந்து விடுவர்.ஆனால் சொத்தை இழப்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
*செழிப்பு இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலற்று சுறுசுறுப்பாகவும் ஒற்றுமையாகவும் வறுமையைத் தவிர்க்கப் போராடும் குணமுள்ளவர்கள் ஆகவும் இருப்பர் .வளமான நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலுடன் இருப்பர்.அங்கு உழைப்பைப் பெருக்க சட்டங்கள் மூலம் தான் கட்டாயப் படுத்த வேண்டும்.
*ஒரு நாட்டில் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்கும்.அதற்குப் பிறகு கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொது நலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் படியான நிலைமை ஏற்படும்.
*வதந்திக்கும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வேற்றுமை இருக்கிறது.வதந்தியை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.நேருக்கு நேர் பழி சுமத்த
வேண்டியதில்லை.எனவே வதந்தியை எளிதாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.குற்றச்சாட்டோ,பொறுப்பானவர்கள் முன்னிலையில் சான்றுகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.பொதுவாக குற்றம் சாட்ட வழியில்லாத இடங்களில் தான் வதந்தி பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
*மனிதர்கள் போராடி தேவைகளைப் பெற்றபின் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள்.
*
பெரும்பாலான மக்கள் தங்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.
*தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கக் கூடிய யாரும் அதைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உறுதியை மீறி நன்றிகெட்ட தனமாகவும் குறை கூறத் தக்க நிலையிலும் நடந்து கொள்வார்கள்.அச்சமுற்ற நிலையிலுள்ள யாரும் நம்பிக்கைக்கு அருகதை அற்றவர்களாகவே இருப்பார்கள்.
*சூழ் நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்பட்டபடி நடத்த முடியாது.அவர்கள் நியாயமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்பட மாட்டார்கள்.அவர்கள் நிம்மதியாக வாழ மற்றவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் .
*மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும் செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.
இத்தாலியைச் சேர்ந்த சிந்தனையாளர் மாக்கியவெல்லி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.எந்த ஆட்சியும்நிலை பெறக்கூடிய வழிவகைகள் எவை எனச் சிந்தித்தவர்.குடியரசு,முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும் என்பது மாக்கியவெல்லியின் கொள்கை.முசோலினி,ஹிட்லர்,லெனின்,ஸ்டாலின் போன்ற பலரும் மாக்கியவெல்லியை பின்பற்றியவர்கள்.அவருடைய சிந்தனைகளில் சில முத்துக்கள்;
*ஆள்பவன் தேவைக்குத் தகுந்த மாதிரி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*ஒரு அரசன் நம்பிக்கை வைப்பதிலும் செயலாற்றுவதிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போகவும் கூடாது:அதிக சந்தேகம் கொண்டு திறமையற்றவனாகவும் கூடாது.
*தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்கு குற்றம் செய்வதைக் காட்டிலும்,அச்சமுறச் செய்பவனுக்கு குறைவாகவே குற்றம் இழைப்பது மனிதர் இயல்பு. ஏனெனில் அன்பு மனிதர்களின் சுய நலத்தில் எழுவது. நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள்.அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும்.ஆனால் தண்டனை,பயத்தால் ஏற்படக் கூடியதால் எப்போதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமலிருக்கும்.
*பிறருடைய சொத்துக்களை மட்டும் பறித்துக் கொள்ளக் கூடாது.தங்கள் தந்தை இறந்ததைக் கூட எளிதாக மக்கள் மறந்து விடுவர்.ஆனால் சொத்தை இழப்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
*செழிப்பு இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலற்று சுறுசுறுப்பாகவும் ஒற்றுமையாகவும் வறுமையைத் தவிர்க்கப் போராடும் குணமுள்ளவர்கள் ஆகவும் இருப்பர் .வளமான நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலுடன் இருப்பர்.அங்கு உழைப்பைப் பெருக்க சட்டங்கள் மூலம் தான் கட்டாயப் படுத்த வேண்டும்.
*ஒரு நாட்டில் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்கும்.அதற்குப் பிறகு கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொது நலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் படியான நிலைமை ஏற்படும்.
*வதந்திக்கும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வேற்றுமை இருக்கிறது.வதந்தியை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.நேருக்கு நேர் பழி சுமத்த
வேண்டியதில்லை.எனவே வதந்தியை எளிதாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.குற்றச்சாட்டோ,பொறுப்பானவர்கள் முன்னிலையில் சான்றுகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.பொதுவாக குற்றம் சாட்ட வழியில்லாத இடங்களில் தான் வதந்தி பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
*மனிதர்கள் போராடி தேவைகளைப் பெற்றபின் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள்.
*
பெரும்பாலான மக்கள் தங்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.
*தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கக் கூடிய யாரும் அதைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உறுதியை மீறி நன்றிகெட்ட தனமாகவும் குறை கூறத் தக்க நிலையிலும் நடந்து கொள்வார்கள்.அச்சமுற்ற நிலையிலுள்ள யாரும் நம்பிக்கைக்கு அருகதை அற்றவர்களாகவே இருப்பார்கள்.
*சூழ் நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்பட்டபடி நடத்த முடியாது.அவர்கள் நியாயமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்பட மாட்டார்கள்.அவர்கள் நிம்மதியாக வாழ மற்றவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் .
*மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும் செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறப்பான சிந்தனை துளிகள்
முதியவர்களுக்காக
இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
செய்..
பிறர் தம் வலியும் வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.
இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
செய்..
பிறர் தம் வலியும் வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறப்பான சிந்தனை துளிகள்
அனுபவம்
அனுபவங்கள் வழி காட்ட வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.அனுபவம் சிறந்த பள்ளி.ஆனால் ஒருவன் அதில் தானே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அறுபது வயதில் ஒருவர் புரிந்து கொண்ட தத்துவங்களை முப்பது வயதுள்ள ஒருவருக்கு ஏன்புரிய வைக்கமுயற்சி செய்ய வேண்டும்?கரையில் நின்று கொண்டு மற்றவர் நீச்சல் அடிப்பதைப் பார்த்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?தண்ணீரில் குதித்து கையைக் காலை அசைத்துத் தானே நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்?பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.
http://iruvarullam.blogspot.in
அனுபவங்கள் வழி காட்ட வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.அனுபவம் சிறந்த பள்ளி.ஆனால் ஒருவன் அதில் தானே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அறுபது வயதில் ஒருவர் புரிந்து கொண்ட தத்துவங்களை முப்பது வயதுள்ள ஒருவருக்கு ஏன்புரிய வைக்கமுயற்சி செய்ய வேண்டும்?கரையில் நின்று கொண்டு மற்றவர் நீச்சல் அடிப்பதைப் பார்த்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?தண்ணீரில் குதித்து கையைக் காலை அசைத்துத் தானே நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்?பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.
http://iruvarullam.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|