Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆன்மிக சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
ஆன்மிக சிந்தனைகள்
அமைதியே இறைத்தன்மை
[color][font][url][/url]
* மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
* நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
* மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.
-சத்குரு ஜக்கி வாசுதேவ்[/font][/color]
[color][font][url][/url]
* மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
* நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
* மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.
-சத்குரு ஜக்கி வாசுதேவ்[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்
[color][font][url][/url]
* மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.
* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.
* எல்லாவற்றையும் படைத்தவன் உங்களளுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
-சத்குரு ஜக்கிவாசுதேவ்[/font][/color]
[color][font][url][/url]
* மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.
* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.
* எல்லாவற்றையும் படைத்தவன் உங்களளுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
-சத்குரு ஜக்கிவாசுதேவ்[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
முடிந்ததைச் செய்யுங்கள்
* உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று.
* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி விட்டால் அவை நிகழ்வதில்லை.
* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல் அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.
* மனம் என்பது அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம் இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.
-சத்குரு ஜக்கிவாசுதேவ்
* உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று.
* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி விட்டால் அவை நிகழ்வதில்லை.
* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல் அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.
* மனம் என்பது அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம் இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.
-சத்குரு ஜக்கிவாசுதேவ்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
உறக்கத்தை விட முக்கியமானது
* உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பது தான் முக்கியம்.
* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு என்று உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வுடன் அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்.
* இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. உங்கள் சுயஇயல்பைப் பயன்படுத்தி நீங்கள் நடை போடுவதில்லை. இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்க பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் அதன் ஆதிக்கத்தி லிருந்து விடுபடாமல் வாழ்க்கைக்கு எதிரான பல மூடத் தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.
* எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, அதைத் தான் உண்ணவேண்டும். எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து உண்ணக் கற்றுக் கொண்டால் தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள்.
* உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பது தான் முக்கியம்.
* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு என்று உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வுடன் அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்.
* இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. உங்கள் சுயஇயல்பைப் பயன்படுத்தி நீங்கள் நடை போடுவதில்லை. இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்க பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் அதன் ஆதிக்கத்தி லிருந்து விடுபடாமல் வாழ்க்கைக்கு எதிரான பல மூடத் தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.
* எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, அதைத் தான் உண்ணவேண்டும். எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து உண்ணக் கற்றுக் கொண்டால் தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
குழப்பமும் நல்லதற்கே!
[color][font][url][/url]
* கற்றுக்கொள்ளுதல் என்பது இயற்கை யாகவே மனிதனிடம் இருக்கும் குணம். இது வரை தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அது உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படி இருக்கையில், கற்றுக் கொள்ளுதல் என்பது குழந்தைகளைத் துன்பத்தில் ஆழ்த்தினால், எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்!
* ஒவ்வொரு சுற்றுப்புறமும் உங்களுக்கு எதிராக மாறும் வலிமை கொண்டதென நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியான மகிழ்ச்சியான சுற்றுப்புறத்தை நீங்கள் உருவாக்கத் தவறி விட்டால், ஒவ்வொரு நட்பும், சுற்றமும், வீடும், நாடும், நகரமும் உங்களுக்கு எதிரான ஒரு போர்க்கள மாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
* எங்கே போதனைகள் இருக்கிறதோ, அங்கே வழிபடுதலும் வணங்குதலும் தான் இருக்கிறது. எங்கே வழிமுறைகள் இருக் கிறதோ, அங்கே தான் மாற்றங்கள் நிகழச் சாத்தியம் இருக்கிறது.
* உங்கள் வாழ்வுச் சூழலில் குழப்பம் இருந்தால், அதை நல்லது எனச் சொல்வேன். குழப்பத்தின் அடிப்படை எதுவென அலசக் கிடைத்த அரிய வாய்ப்பு அது. உண்மையில் நீங்கள் யார் என்பதை விடுத்து வேறுவிதமாகக் கற்பனை செய்திருக்கும் அறியாமை தான் உங்கள் குழப்பத்தின் ஆணிவேர். ஆகவே, என்னிடம் அச்சம் கொண்டீர்கள் என்றால், அதை முழுமையாக, சாதகமாகப் பயன்படுத்தி, பிரச்னையின் மையத்துக்கு உங்களை அழைத்துச் செல்வேன்.[/font][/color]
[color][font][url][/url]
* கற்றுக்கொள்ளுதல் என்பது இயற்கை யாகவே மனிதனிடம் இருக்கும் குணம். இது வரை தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அது உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படி இருக்கையில், கற்றுக் கொள்ளுதல் என்பது குழந்தைகளைத் துன்பத்தில் ஆழ்த்தினால், எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்!
* ஒவ்வொரு சுற்றுப்புறமும் உங்களுக்கு எதிராக மாறும் வலிமை கொண்டதென நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியான மகிழ்ச்சியான சுற்றுப்புறத்தை நீங்கள் உருவாக்கத் தவறி விட்டால், ஒவ்வொரு நட்பும், சுற்றமும், வீடும், நாடும், நகரமும் உங்களுக்கு எதிரான ஒரு போர்க்கள மாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
* எங்கே போதனைகள் இருக்கிறதோ, அங்கே வழிபடுதலும் வணங்குதலும் தான் இருக்கிறது. எங்கே வழிமுறைகள் இருக் கிறதோ, அங்கே தான் மாற்றங்கள் நிகழச் சாத்தியம் இருக்கிறது.
* உங்கள் வாழ்வுச் சூழலில் குழப்பம் இருந்தால், அதை நல்லது எனச் சொல்வேன். குழப்பத்தின் அடிப்படை எதுவென அலசக் கிடைத்த அரிய வாய்ப்பு அது. உண்மையில் நீங்கள் யார் என்பதை விடுத்து வேறுவிதமாகக் கற்பனை செய்திருக்கும் அறியாமை தான் உங்கள் குழப்பத்தின் ஆணிவேர். ஆகவே, என்னிடம் அச்சம் கொண்டீர்கள் என்றால், அதை முழுமையாக, சாதகமாகப் பயன்படுத்தி, பிரச்னையின் மையத்துக்கு உங்களை அழைத்துச் செல்வேன்.[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
வாழ்வின் அழகான தருணங்கள்
* அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
* மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
* உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
* அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.
* அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
* மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
* உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
* அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
உடலும் மனமும் இணையட்டும்!
* ஆனந்தமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள். நீங்கள் எந்தச் செயலை தேர்ந்தெடுத்தாலும், அதைச் செயல் படுத்தும் போது தீவிரமாயிருங்கள். முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியை தட்டி எழுப்புங்கள். முழுஈடுபாடு கொண்டு செயலாற்றும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் ஆக்கசக்தி வெளிப்படத் தொடங்கும்.
* கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது. அதனால் திருப்பங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்.
* இளைஞர்களுக்கான தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும் என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன். எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும்.
* பொறாமையும், அச்சமும் நம்முள் உண்டாகும் போது அடுத்தவரை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறோம். பொறாமை இருக்கும் இடத்திலோ, அச்சம் இருக்கும் இடத்திலோ திறமை மழுங்கிப்போகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (முயற்சியும்) உங்களுக்காகவே என்று எண்ணுங்கள்.
* உங்கள் உடல், மனம் இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி எளிதில் நம் வசமாகும்.
http://ungalparvaiku.blogspot.in/
* ஆனந்தமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள். நீங்கள் எந்தச் செயலை தேர்ந்தெடுத்தாலும், அதைச் செயல் படுத்தும் போது தீவிரமாயிருங்கள். முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியை தட்டி எழுப்புங்கள். முழுஈடுபாடு கொண்டு செயலாற்றும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் ஆக்கசக்தி வெளிப்படத் தொடங்கும்.
* கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது. அதனால் திருப்பங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்.
* இளைஞர்களுக்கான தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும் என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன். எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும்.
* பொறாமையும், அச்சமும் நம்முள் உண்டாகும் போது அடுத்தவரை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறோம். பொறாமை இருக்கும் இடத்திலோ, அச்சம் இருக்கும் இடத்திலோ திறமை மழுங்கிப்போகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (முயற்சியும்) உங்களுக்காகவே என்று எண்ணுங்கள்.
* உங்கள் உடல், மனம் இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி எளிதில் நம் வசமாகும்.
http://ungalparvaiku.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
உங்கள் உடல், மனம் இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி எளிதில் நம் வசமாகும்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்-ரமணர்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்-ரமணர்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|