Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
Page 1 of 1 • Share
வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
[You must be registered and logged in to see this image.]
''இப்போதெல்லாம் போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும் மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்''
இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.
குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.
சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.
இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.
லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.
கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.
எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.
நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.
நன்றி: பாபநாசம் பக்கம்
''இப்போதெல்லாம் போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும் மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்''
இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.
குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.
சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.
இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.
லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.
கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.
எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.
நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.
நன்றி: பாபநாசம் பக்கம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
மிக பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
Re: வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
நல்ல பயனுள்ள தகவல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» உபயோகமான தகவல்கள்
» முத்துக்கள் பத்து ! -- உபயோகமான தகவல்கள்,
» தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! உபயோகமான தகவல்கள்!
» தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது? — உபயோகமான தகவல்கள் !!
» உபயோகமான தளம்!!!
» முத்துக்கள் பத்து ! -- உபயோகமான தகவல்கள்,
» தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! உபயோகமான தகவல்கள்!
» தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது? — உபயோகமான தகவல்கள் !!
» உபயோகமான தளம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|