Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் நண்பன்....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
என் நண்பன்....
மூச்சு திணறுதுப்பா ” என்று சொல்லும்போதே இரும ஆரம்பித்தேன்.
சொல்பேச்சை கேட்கவே மாட்டான் என்னுடன் வேலை செய்யும் எகிப்தியன். என்னை விட சர்வீசிலும் வயதிலும் மூத்தவன்.
நல்லவன்… மனைவி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த பாழாப்போன சிகரெட்டால் எனக்கும் இவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்..
சில சமயம் வாக்குவாதம் முற்றி இனி உன்னோடு பேசமாட்டேன் என்று இருவருமே முகம் திருப்பிக்கொள்வோம்.
ஆனால் குழந்தைப்போல இவனே தன் வயதை மறந்து என்னிடம் சொல்ல வருவான். சந்தோஷம் , சோகம், கோபம் எல்லாமே என்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் அருமையான நண்பன்..
என்ன ஒரு பிரச்சனைன்னா இவனுக்கு ஆங்கிலம் அவஸ்தை சுட்டுப்போட்டாலும் வராது. என்னிடம் எதையாவது சொல்லும்போது இவன் மொழியில் பேசிக்கொண்டே தையத்தக்கா என்று பாவனையில் எப்படியாவது தான் சொல்ல நினைப்பதை சொல்லி முடித்துவிடுவான்.
நானும் இவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக ரசித்து கேட்பதும் உண்டு.
இவனிடம் எனக்கு பிடிக்காத விஷயம். எரிச்சல் தரும் விஷயம், இவனை கொல்லனும்னு தோணும் விஷயம் இவன் இடைவிடாமல் பிடிக்கும் சிகரெட் மட்டுமே.. இதைத்தவிர இவனிடம் எந்தவித கெட்ட குணங்களும் கிடையாது.
பெண்களிடம் வந்து வழிய மாட்டான் பிறரைப்போல. நேர்மையான வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுப்படுத்திக்கொள்வான். எந்த நேரத்திலும் என்ன உதவி யார் கேட்டாலும் முன்பு நிற்பான் செய்ய…
இப்படியே சில வருடங்கள் உருண்டுக்கொண்டு தான் இருந்தது.சண்டையும் சச்சரவும் அன்பும் பாசமுமாக..
தினமும் சரியா நான் டிபன் பாக்ஸ் பசியோடு திறக்கும்போது இவன் சிகரெட் புகை வாசம் வந்து எனக்கு ஹலோ சொல்லும் என்னையும் எடுத்துக்கோ என்று.. கோபமாக எடுக்கும் கவளத்தை பாக்ஸ்லயே போட்டு ஆத்திரமாக மூடுவேன் மூடியை.. அறிவுக்கெட்டவன்.. எவண்டா கண்டுப்பிடிச்சான் இந்த சிகரெட்டை… என்று எரியும் எனக்கு.
திடிர்னு ஒரு நாள் இவன் சத்தமும் காணோம். சிகரெட் புகையும் காணோம். ஹப்பா நிம்மதி இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடலாம்னு டிபன் பாக்ஸ் திறந்தால் போன். இவன் சீரியசாக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறான் மாசிவ் ஹார்ட் அட்டாக்..
ஐயோ அடிச்சு பிடிச்சு எல்லோருமாக கிளம்பி போக நினைத்தோம். ஆனால் ஆபிசில் அனுமதி இல்லை எங்களுக்கு போக..
பொறுத்திருந்து மாலை வீட்டுக்கு சென்று என் குடும்பத்தினருடன் கிளம்பி மருத்துவமனைக்கு போனோம்.
பிரக்ஞையின்றி படுக்கையில் கிடந்தான். பார்க்கவே மனம் பதறியது. எவ்ளோ திட்டினியோ என்னை.. பாரு என்ன நிலைமையில் கிடக்கிறேன் என்று என்னை கேட்பது போல் இருந்தது..
ஒருவழியாக எல்லோரின் பிரார்த்தனையாலும் டாக்டர்களின் உதவியாலும் உயிர்ப்பிழைத்து வந்து மறுபடி சேர்ந்தான் வேலையில்..
நான் சொல்லிவிட்டேன். ”ஹப்பா இனிமே என் நண்பன் புகைக்கமாட்டான் ”என்று. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் பேக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..” போடா நீ உருப்படவே மாட்டே ”என்று திட்டிவிட்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்துவிட்டேன்.
என் சீட்டருகே வந்து என்னை கேட்டான். எனக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால் உனக்கு என்ன பிரச்சனை?
”எனக்கு பிரச்சனை இந்த நாற்றம்.. உன் குடும்பத்தினருக்கு பிரச்சனை உன் ஆரோக்கியம். இதை ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே ”என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
மெல்ல நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
இப்படியே நாட்கள் கடந்தது. சண்டை மட்டும் ஓயவே இல்லை எனக்கும் அவனுக்கும்.
சில சமயம் சமாதானம். சில சமயம் இருவருமே முகம் சுணங்கி பேசுவதில்லை. எல்லாம் இந்த சிகரெட் அவஸ்தையால் தான்..
ஹெட் ஆபிசு போய் வந்த காதர் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ”உனக்கு விஷயம் தெரியுமா? இனிமே உனக்கு நிம்மதி.. சிகரெட் நாற்றம் நாளை முதல் இருக்காது..”
”ஏண்டா ”என்றேன். ”அவன் பழக்கத்தை விட்டுட்டானா என்ன ”என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். மழை தான் வரும் என்று தோணித்து எனக்கு.
”இல்ல ”என்று சொல்லி நிறுத்தினான் காதர்..
”என்னன்னு தான் சொல்லேன் ”என்று உலுக்கினேன் காதரை..
”டர்மினேட் பண்ணிட்டாங்கப்பா யூஸ்ரியை ”என்றான் காதர்.
அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன்.
”ஐயோ … இவன் ஒருத்தன் சம்பளத்தில் தான் குடும்பம் முழுவதும்..
இனி என்ன செய்வான்.. ”
இவன் முகம் பார்த்து பேச எனக்கு சங்கடமாக இருந்தது.
கடவுளே இவனை அப்புறப்படுத்தச்சொல்லி நான் வேண்டவில்லையே. இவன் சிகரெட் புகைப்பது தானே நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
மனம் ஒரே ஆராட்டம் ஆனது.. என்ன சொல்வது எப்படி சமாதானம் சொல்வது ஒன்றும் புரியாமல் வியர்க்க ஆரம்பித்தது. மனம் பதட்டத்தில்..
யூஸ்ரி சிரித்துக்கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தான்…
”கையைக்கொடு.. கடைசில நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு” என்றான்.
எனக்கு கஷ்டமாக இருந்தது அவன் செயலைப்பார்க்க..
”யூஸ்ரி சாரிப்பா.. சத்தியமா உனக்கு இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷம் இல்லை ப்ளீஸ் நம்பு ”என்றேன்.
”ஹே விடுப்பா.. ”
”வேற வேலை கிடைக்குமா ”என்றேன்.
”பைத்தியக்காரி இனி வேலை செய்ய என் உடம்பும் ஒத்துழைக்காது.. ஊர் போய் சேரவேண்டியது தான்.”
”நீ சந்தோஷமா இரு.”
”இத்தனை நாள் உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன். ”
”என் நல்லதுக்காக தான் நீ சொன்னே ஒவ்வொரு முறையும் சிகரெட் விடச்சொல்லி..”
”நான் உன் பேச்சை கேட்டிருந்தால் அட்லீஸ்ட் என் ஆரோக்கியம் நலமாக இருந்திருக்கும்” என்றான், முகமே பார்க்க பரிதாபமாக இருந்தது.
உதடு கடித்து அழுகையை அடக்கமுயன்றான். முடியாமல் கண்ணீர் உருண்டது அவன் கன்னத்தில்..
”ஆம்பிளை அழக்கூடாதுல்ல? அசிங்கம் ”என்று சொல்லிக்கொண்டு சமாளித்தான் யூஸ்ரி..
”ஆல் த வெரி பெஸ்ட் யூஸ்ரி.” என் குரல் எனக்கே கேட்கவில்லை..
மனம் உடல் எல்லாம் தளர்ந்தது போல் ஒரு நிலை எனக்கு.
”கடவுளே இப்படி ஒரு நிலையை காண வைத்துவிடாதே என்னை மீண்டும் “ என்று நினைத்துக்கொண்டே கைக்கொடுத்தேன் யூஸ்ரிக்கு.
”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும்.
உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…
கதம்ப உணர்வு தளம்
சொல்பேச்சை கேட்கவே மாட்டான் என்னுடன் வேலை செய்யும் எகிப்தியன். என்னை விட சர்வீசிலும் வயதிலும் மூத்தவன்.
நல்லவன்… மனைவி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த பாழாப்போன சிகரெட்டால் எனக்கும் இவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்..
சில சமயம் வாக்குவாதம் முற்றி இனி உன்னோடு பேசமாட்டேன் என்று இருவருமே முகம் திருப்பிக்கொள்வோம்.
ஆனால் குழந்தைப்போல இவனே தன் வயதை மறந்து என்னிடம் சொல்ல வருவான். சந்தோஷம் , சோகம், கோபம் எல்லாமே என்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் அருமையான நண்பன்..
என்ன ஒரு பிரச்சனைன்னா இவனுக்கு ஆங்கிலம் அவஸ்தை சுட்டுப்போட்டாலும் வராது. என்னிடம் எதையாவது சொல்லும்போது இவன் மொழியில் பேசிக்கொண்டே தையத்தக்கா என்று பாவனையில் எப்படியாவது தான் சொல்ல நினைப்பதை சொல்லி முடித்துவிடுவான்.
நானும் இவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக ரசித்து கேட்பதும் உண்டு.
இவனிடம் எனக்கு பிடிக்காத விஷயம். எரிச்சல் தரும் விஷயம், இவனை கொல்லனும்னு தோணும் விஷயம் இவன் இடைவிடாமல் பிடிக்கும் சிகரெட் மட்டுமே.. இதைத்தவிர இவனிடம் எந்தவித கெட்ட குணங்களும் கிடையாது.
பெண்களிடம் வந்து வழிய மாட்டான் பிறரைப்போல. நேர்மையான வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுப்படுத்திக்கொள்வான். எந்த நேரத்திலும் என்ன உதவி யார் கேட்டாலும் முன்பு நிற்பான் செய்ய…
இப்படியே சில வருடங்கள் உருண்டுக்கொண்டு தான் இருந்தது.சண்டையும் சச்சரவும் அன்பும் பாசமுமாக..
தினமும் சரியா நான் டிபன் பாக்ஸ் பசியோடு திறக்கும்போது இவன் சிகரெட் புகை வாசம் வந்து எனக்கு ஹலோ சொல்லும் என்னையும் எடுத்துக்கோ என்று.. கோபமாக எடுக்கும் கவளத்தை பாக்ஸ்லயே போட்டு ஆத்திரமாக மூடுவேன் மூடியை.. அறிவுக்கெட்டவன்.. எவண்டா கண்டுப்பிடிச்சான் இந்த சிகரெட்டை… என்று எரியும் எனக்கு.
திடிர்னு ஒரு நாள் இவன் சத்தமும் காணோம். சிகரெட் புகையும் காணோம். ஹப்பா நிம்மதி இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடலாம்னு டிபன் பாக்ஸ் திறந்தால் போன். இவன் சீரியசாக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறான் மாசிவ் ஹார்ட் அட்டாக்..
ஐயோ அடிச்சு பிடிச்சு எல்லோருமாக கிளம்பி போக நினைத்தோம். ஆனால் ஆபிசில் அனுமதி இல்லை எங்களுக்கு போக..
பொறுத்திருந்து மாலை வீட்டுக்கு சென்று என் குடும்பத்தினருடன் கிளம்பி மருத்துவமனைக்கு போனோம்.
பிரக்ஞையின்றி படுக்கையில் கிடந்தான். பார்க்கவே மனம் பதறியது. எவ்ளோ திட்டினியோ என்னை.. பாரு என்ன நிலைமையில் கிடக்கிறேன் என்று என்னை கேட்பது போல் இருந்தது..
ஒருவழியாக எல்லோரின் பிரார்த்தனையாலும் டாக்டர்களின் உதவியாலும் உயிர்ப்பிழைத்து வந்து மறுபடி சேர்ந்தான் வேலையில்..
நான் சொல்லிவிட்டேன். ”ஹப்பா இனிமே என் நண்பன் புகைக்கமாட்டான் ”என்று. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் பேக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..” போடா நீ உருப்படவே மாட்டே ”என்று திட்டிவிட்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்துவிட்டேன்.
என் சீட்டருகே வந்து என்னை கேட்டான். எனக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால் உனக்கு என்ன பிரச்சனை?
”எனக்கு பிரச்சனை இந்த நாற்றம்.. உன் குடும்பத்தினருக்கு பிரச்சனை உன் ஆரோக்கியம். இதை ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே ”என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
மெல்ல நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
இப்படியே நாட்கள் கடந்தது. சண்டை மட்டும் ஓயவே இல்லை எனக்கும் அவனுக்கும்.
சில சமயம் சமாதானம். சில சமயம் இருவருமே முகம் சுணங்கி பேசுவதில்லை. எல்லாம் இந்த சிகரெட் அவஸ்தையால் தான்..
ஹெட் ஆபிசு போய் வந்த காதர் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ”உனக்கு விஷயம் தெரியுமா? இனிமே உனக்கு நிம்மதி.. சிகரெட் நாற்றம் நாளை முதல் இருக்காது..”
”ஏண்டா ”என்றேன். ”அவன் பழக்கத்தை விட்டுட்டானா என்ன ”என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். மழை தான் வரும் என்று தோணித்து எனக்கு.
”இல்ல ”என்று சொல்லி நிறுத்தினான் காதர்..
”என்னன்னு தான் சொல்லேன் ”என்று உலுக்கினேன் காதரை..
”டர்மினேட் பண்ணிட்டாங்கப்பா யூஸ்ரியை ”என்றான் காதர்.
அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன்.
”ஐயோ … இவன் ஒருத்தன் சம்பளத்தில் தான் குடும்பம் முழுவதும்..
இனி என்ன செய்வான்.. ”
இவன் முகம் பார்த்து பேச எனக்கு சங்கடமாக இருந்தது.
கடவுளே இவனை அப்புறப்படுத்தச்சொல்லி நான் வேண்டவில்லையே. இவன் சிகரெட் புகைப்பது தானே நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
மனம் ஒரே ஆராட்டம் ஆனது.. என்ன சொல்வது எப்படி சமாதானம் சொல்வது ஒன்றும் புரியாமல் வியர்க்க ஆரம்பித்தது. மனம் பதட்டத்தில்..
யூஸ்ரி சிரித்துக்கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தான்…
”கையைக்கொடு.. கடைசில நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு” என்றான்.
எனக்கு கஷ்டமாக இருந்தது அவன் செயலைப்பார்க்க..
”யூஸ்ரி சாரிப்பா.. சத்தியமா உனக்கு இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷம் இல்லை ப்ளீஸ் நம்பு ”என்றேன்.
”ஹே விடுப்பா.. ”
”வேற வேலை கிடைக்குமா ”என்றேன்.
”பைத்தியக்காரி இனி வேலை செய்ய என் உடம்பும் ஒத்துழைக்காது.. ஊர் போய் சேரவேண்டியது தான்.”
”நீ சந்தோஷமா இரு.”
”இத்தனை நாள் உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன். ”
”என் நல்லதுக்காக தான் நீ சொன்னே ஒவ்வொரு முறையும் சிகரெட் விடச்சொல்லி..”
”நான் உன் பேச்சை கேட்டிருந்தால் அட்லீஸ்ட் என் ஆரோக்கியம் நலமாக இருந்திருக்கும்” என்றான், முகமே பார்க்க பரிதாபமாக இருந்தது.
உதடு கடித்து அழுகையை அடக்கமுயன்றான். முடியாமல் கண்ணீர் உருண்டது அவன் கன்னத்தில்..
”ஆம்பிளை அழக்கூடாதுல்ல? அசிங்கம் ”என்று சொல்லிக்கொண்டு சமாளித்தான் யூஸ்ரி..
”ஆல் த வெரி பெஸ்ட் யூஸ்ரி.” என் குரல் எனக்கே கேட்கவில்லை..
மனம் உடல் எல்லாம் தளர்ந்தது போல் ஒரு நிலை எனக்கு.
”கடவுளே இப்படி ஒரு நிலையை காண வைத்துவிடாதே என்னை மீண்டும் “ என்று நினைத்துக்கொண்டே கைக்கொடுத்தேன் யூஸ்ரிக்கு.
”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும்.
உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…
கதம்ப உணர்வு தளம்
Similar topics
» நண்பன்
» என் நண்பன்..
» கண்ணாடி என் நண்பன்
» நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்
» நண்பன் எப்படி...?
» என் நண்பன்..
» கண்ணாடி என் நண்பன்
» நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்
» நண்பன் எப்படி...?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|