Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மண்ணில் விளைந்த மருத்துவம்
Page 1 of 1 • Share
மண்ணில் விளைந்த மருத்துவம்
மண்ணில் விளைந்த மருத்துவம்
நல்ல மருத்துவம் எனப்படுவது நோயைப் போக்க வேண்டும்; நோய் வரும் காரணங்களைக் களைய வேண்டும்; மனத்துக்கும் மருத்துவமாக அமையவேண்டும். உடலுக்கு வன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்க வேண்டும். கூடுமானவரை பக்கவிளைவுகள் உண்டாக்காதிருக்க வேண்டும். சித்த மருத்துவம் பெரும்பாலும் இப் பண்புகளைத் தாங்கி நிற்கிறது.
நம் மண்ணின் மீது மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட ஆதிக்கம், அவர்கள் தம் பாணியை நம் மீது திணித்ததனால் ஏற்பட்ட தாக்கம், அத்துடன் நவீன மருத்துவ அறிவியலின் மிக அற்புதமான வளர்ச்சி போன்றவை நமது வழக்கமான வாழ்வியலைப் புரட்டிப் போட்டுவிட்டன. தழைத்தோங்கி நின்ற சித்த மருத்துவமும்கூட சிறிது காலம் கட்டாய ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நம் மண்ணின் உன்னத மருத்துவமான சித்த மருத்துவம் மிகப் பழமையானது.
எக்காலத்துக்கும் பொருந்துவது. இதில் பொதிந்திருக்கும் உண்மைகளை, அறிவியல் படுத்தி ஆராயும் போதெல்லாம் முழுமையாக உணர முடியும். மூலிகை மருந்துகளுக்கு அவ்வளவு வீரியம் உண்டா? உடனடி நிவாரணமும் கிடைத்திடுமா? என்பது போன்ற ஆரோக்கியமான வாதங்கள் எழுவது இயல்பே. உலகிலேயே மிகச் சிறந்த நுண்ணியிர்க்கொல்லியான பென்சிலினும் காசநோய்க்கான ஸ்ட்ரெப்டோமைசினும் மலேரியாவுக்கான குளோரோமைசிட்டினும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த பூஞ்சைகளிலிருந்து பெறப்பட்டவை என்றறியும்போது மற்ற மருத்துவத் தாவரங்களுக்கும் ஏன் வல்லமை இருக்கக்கூடாதென்ற வினா மனத்தில் எழாமலிருக்காது.
கொடுமையான கான்ஸரைக்கூட நித்யகல்யாணியிலிருந்து பெறப்படும் மருந்து கட்டுப்படுத்துகிறது எனும்போது இயற்கை போற்றுதலுக்குரியது என்கிற மதிப்பும் உயர்கிறது. மஞ்சள்காமாலையை உண்டாக்கும் வைரஸ்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கீழாநெல்லிக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்து அறிவியல்படுத்திப் பதிவு செய்துள்ளனர் இப்போது. ஆனால் எப்போதிலிருந்தோ மஞ்சள் காமாலை என்றாலே கீழாநெல்லி என வழக்கத்தில் கொண்டு வந்தவர்கள் நாம்.
சித்த மருத்துவத்தில் ஓர் அற்புதம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மூலிகையினைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருப்பின் அதுவும்கூட அதே மூலிகையின் பல்நோக்கு செயல் வன்மையால் குணமடைவது இம் மருத்துவத்தின் சிறப்பு. உதாரணமாக, மூட்டுவலி மற்றும் வீக்கத்துக்காக அமுக்கரா கிழங்கின் பொடியைப் பயன்படுத்துகிறோமென வைத்துக்கொள்வோம்.
அதே கிழங்கிற்கு, உடல் வன்மை உண்டாக்கும் ஆற்றல், குடற்புண் ஆற்றும் தன்மை, உறக்கமுண்டாக்கும் செயல், மலட்டுத்தன்மை நீக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் ஆற்றல் எனப் பல்வேறு செயல்திறன்கள் உள்ளதால், குறிப்பிட்ட மூட்டுவலி நோயாளிக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பின் அவையும் தீர்ந்துவிடும் என்பது உண்மை.
சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் செயல்படக்கூடிய மருத்துவத் தாவரங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. மனத்தூண்டு நிலைக்கும் மன அழுத்தநிலைக்கும் வல்லாரை என்கிற ஒரே மூலிகையைக் கையாளலாம்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்தைக் கொடுத்தாலும் அது முழுமையான மருந்தாக அமைந்துவிடுகிறது. ரத்தசோகை என்கிற நோய்க்கு சித்தமருந்து கொடுக்கிறோமென வைத்துக்கொள்வோம். இந்த நோய்க்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளில் அயச் (இரும்பு)செந்தூரம் இருக்கும். அத்துடன் சங்கு அல்லது சிலாசத்து அல்லது முத்துச்சிப்பி பற்பமும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்கிற மூலிகைகளும் கலந்திருக்கும். இரும்புச் சத்து முழுமையாக உட்கிரகிக்கப்படவேண்டுமெனில் உயிர்வேதியியலின்படி வைட்டமின்-சி மற்றும் கால்சியச் சத்து இருக்க வேண்டும். மேற்சொன்ன மருந்துக் கலவையில் கால்சியத்துக்காக சங்கு, சிப்பி, சிலாசத்து போன்றவைகளும், வைட்டமின்-சி க்காக நெல்லிக்காயும் உள்ளன. இரும்புச்சத்து சிலருக்கு வயிற்றுப்புண்ணை உண்டாக்கும். மேற்சொன்ன மருந்தில் சங்கு பற்பத்திற்கும், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்கும் குடற்புண் ஆற்றும் திறன் சிறப்பாவே உள்ளன.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை காயகற்ப மருந்துகள் என்பதால் உடல் திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் பயனையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும். ரத்த சோகைக்கென சாப்பிடுவதோ ஒரு மருந்து. ஆனால் கிடைக்கும் பலன்களோ பலமடங்கு. இவ்வாறு பல மருந்துகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நோயைக் குணப்படுத்துவது போன்று நோய் வருவதற்கான காரணிகளும் சித்த மருத்துவத்தால் பெரும்பாலும் வேரறுக்கப்படுகின்றன.
குடல்புண்ணுக்கு வல்லாரையை மருந்தாகக் கொடுக்கிறோமென வைத்துக்கொள்வோம். பரபரப்பான தற்போதைய வாழ்க்கைச் சூழலினால் ஏற்படும் பதற்றம் மட்டுமே குடல்புண்ணுக்குக் காரணமாக இருப்பின், பதற்றத்தைக் குறைக்கக்கூடிய பண்பு, வல்லாரைக்கு இருப்பதால் நோய்க்கான காரணத்தையும் களையமுடிகிறது.
இன்றைய அவசர உலகில் மனம் வாயிலாக உடலில் ஏற்படும் நோய்கள் பல உள்ளன. வலிப்பு, ஆஸ்த்துமா, ரத்தக்கொதிப்பு, குடற்புண், சர்க்கரை வியாதி, சரவாங்கி மூட்டுவாதம், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல நோய்களும் இப் பட்டியலில் இடம்பெறும். வல்லாரை, பிரம்மி, சங்குபுஷ்பி, வாலுளுவை, அமுக்கரா, குரோச்சாணி ஓமம் போன்ற பல மூலிகைகளும் மேற்சொன்ன விஷயத்தைக் கையாளுவதற்கு உகந்ததாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சித்த மருத்துவத்தின் சிறப்பு மருத்துவமுறையான யோகம், தியானம் ஆகியவை மனத்துக்கு நிச்சயம் நிரந்தரமாகக் கைகொடுக்கும்.
உடல் நோயானாலும், உள்ள நோயானாலும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. நோய் வராதிருக்கச் செய்ய ஏதேனும் வழிவகை உண்டா என்கிற கேள்விக்கு மிகச் சாதகமான பதில் இம் மருத்துவத்தில் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் முதுமையின் காரணமாகவும் நோய்கள் வருவது வழக்கம். நரை, திரை, மூப்பு, பிணி அணுகாதிருக்கும் காயகல்ப முறையை உலகுக்குச் சொல்வது சித்த மருத்துவமே. எலுமிச்சை, இஞ்சி, கடுக்காய், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, சேராங்கொட்டை, துளசி, பொன்னாங்கண்ணி, சிந்தில் போன்றவை கற்ப மூலிகைகளுள் சில. கருவூரார் சித்தர்கூட கற்பமூலிகைகள் 108 என்று கூறியிருக்கிறார். சித்த மருத்துவத்தில் இன்னும் ஆழமாகச் சென்று பார்ப்போமேயானால் சிறப்பான அரிய மருத்துவ முறைகளும் இருப்பதைக் காணலாம். உடல் தன்மைக்கு ஏற்ற மருந்துகள், பருவ காலங்களுக்குத் தகுந்த மருந்துகள், மருந்திற்கான உணவுக்கட்டுப்பாடு, நோய்க்கான பத்தியம் என பலதரப்பட்ட பொக்கிஷங்கள் உள்ளன. சமுதாய நோக்கு மற்றும் தடுப்பு மருத்துவம் நமது மருத்துவத்தில் இருப்பதை அறியலாம். பண்டைக்காலம் தொட்டே குழந்தைகளுக்கு உரை மாத்திரைகளை நோய்த்தடுப்பு முறை என்ற நோக்கில் கொடுத்துவந்ததைப் பலரும் அறிவோம். வழிபாட்டு முறைகளில் மூலிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சமுதாயப் பார்வை என்றல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டும்?
https://www.facebook.com/arogiyam?fref=ts
நல்ல மருத்துவம் எனப்படுவது நோயைப் போக்க வேண்டும்; நோய் வரும் காரணங்களைக் களைய வேண்டும்; மனத்துக்கும் மருத்துவமாக அமையவேண்டும். உடலுக்கு வன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்க வேண்டும். கூடுமானவரை பக்கவிளைவுகள் உண்டாக்காதிருக்க வேண்டும். சித்த மருத்துவம் பெரும்பாலும் இப் பண்புகளைத் தாங்கி நிற்கிறது.
நம் மண்ணின் மீது மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட ஆதிக்கம், அவர்கள் தம் பாணியை நம் மீது திணித்ததனால் ஏற்பட்ட தாக்கம், அத்துடன் நவீன மருத்துவ அறிவியலின் மிக அற்புதமான வளர்ச்சி போன்றவை நமது வழக்கமான வாழ்வியலைப் புரட்டிப் போட்டுவிட்டன. தழைத்தோங்கி நின்ற சித்த மருத்துவமும்கூட சிறிது காலம் கட்டாய ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நம் மண்ணின் உன்னத மருத்துவமான சித்த மருத்துவம் மிகப் பழமையானது.
எக்காலத்துக்கும் பொருந்துவது. இதில் பொதிந்திருக்கும் உண்மைகளை, அறிவியல் படுத்தி ஆராயும் போதெல்லாம் முழுமையாக உணர முடியும். மூலிகை மருந்துகளுக்கு அவ்வளவு வீரியம் உண்டா? உடனடி நிவாரணமும் கிடைத்திடுமா? என்பது போன்ற ஆரோக்கியமான வாதங்கள் எழுவது இயல்பே. உலகிலேயே மிகச் சிறந்த நுண்ணியிர்க்கொல்லியான பென்சிலினும் காசநோய்க்கான ஸ்ட்ரெப்டோமைசினும் மலேரியாவுக்கான குளோரோமைசிட்டினும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த பூஞ்சைகளிலிருந்து பெறப்பட்டவை என்றறியும்போது மற்ற மருத்துவத் தாவரங்களுக்கும் ஏன் வல்லமை இருக்கக்கூடாதென்ற வினா மனத்தில் எழாமலிருக்காது.
கொடுமையான கான்ஸரைக்கூட நித்யகல்யாணியிலிருந்து பெறப்படும் மருந்து கட்டுப்படுத்துகிறது எனும்போது இயற்கை போற்றுதலுக்குரியது என்கிற மதிப்பும் உயர்கிறது. மஞ்சள்காமாலையை உண்டாக்கும் வைரஸ்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கீழாநெல்லிக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்து அறிவியல்படுத்திப் பதிவு செய்துள்ளனர் இப்போது. ஆனால் எப்போதிலிருந்தோ மஞ்சள் காமாலை என்றாலே கீழாநெல்லி என வழக்கத்தில் கொண்டு வந்தவர்கள் நாம்.
சித்த மருத்துவத்தில் ஓர் அற்புதம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மூலிகையினைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருப்பின் அதுவும்கூட அதே மூலிகையின் பல்நோக்கு செயல் வன்மையால் குணமடைவது இம் மருத்துவத்தின் சிறப்பு. உதாரணமாக, மூட்டுவலி மற்றும் வீக்கத்துக்காக அமுக்கரா கிழங்கின் பொடியைப் பயன்படுத்துகிறோமென வைத்துக்கொள்வோம்.
அதே கிழங்கிற்கு, உடல் வன்மை உண்டாக்கும் ஆற்றல், குடற்புண் ஆற்றும் தன்மை, உறக்கமுண்டாக்கும் செயல், மலட்டுத்தன்மை நீக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் ஆற்றல் எனப் பல்வேறு செயல்திறன்கள் உள்ளதால், குறிப்பிட்ட மூட்டுவலி நோயாளிக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பின் அவையும் தீர்ந்துவிடும் என்பது உண்மை.
சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் செயல்படக்கூடிய மருத்துவத் தாவரங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. மனத்தூண்டு நிலைக்கும் மன அழுத்தநிலைக்கும் வல்லாரை என்கிற ஒரே மூலிகையைக் கையாளலாம்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்தைக் கொடுத்தாலும் அது முழுமையான மருந்தாக அமைந்துவிடுகிறது. ரத்தசோகை என்கிற நோய்க்கு சித்தமருந்து கொடுக்கிறோமென வைத்துக்கொள்வோம். இந்த நோய்க்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளில் அயச் (இரும்பு)செந்தூரம் இருக்கும். அத்துடன் சங்கு அல்லது சிலாசத்து அல்லது முத்துச்சிப்பி பற்பமும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்கிற மூலிகைகளும் கலந்திருக்கும். இரும்புச் சத்து முழுமையாக உட்கிரகிக்கப்படவேண்டுமெனில் உயிர்வேதியியலின்படி வைட்டமின்-சி மற்றும் கால்சியச் சத்து இருக்க வேண்டும். மேற்சொன்ன மருந்துக் கலவையில் கால்சியத்துக்காக சங்கு, சிப்பி, சிலாசத்து போன்றவைகளும், வைட்டமின்-சி க்காக நெல்லிக்காயும் உள்ளன. இரும்புச்சத்து சிலருக்கு வயிற்றுப்புண்ணை உண்டாக்கும். மேற்சொன்ன மருந்தில் சங்கு பற்பத்திற்கும், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்கும் குடற்புண் ஆற்றும் திறன் சிறப்பாவே உள்ளன.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை காயகற்ப மருந்துகள் என்பதால் உடல் திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் பயனையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும். ரத்த சோகைக்கென சாப்பிடுவதோ ஒரு மருந்து. ஆனால் கிடைக்கும் பலன்களோ பலமடங்கு. இவ்வாறு பல மருந்துகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நோயைக் குணப்படுத்துவது போன்று நோய் வருவதற்கான காரணிகளும் சித்த மருத்துவத்தால் பெரும்பாலும் வேரறுக்கப்படுகின்றன.
குடல்புண்ணுக்கு வல்லாரையை மருந்தாகக் கொடுக்கிறோமென வைத்துக்கொள்வோம். பரபரப்பான தற்போதைய வாழ்க்கைச் சூழலினால் ஏற்படும் பதற்றம் மட்டுமே குடல்புண்ணுக்குக் காரணமாக இருப்பின், பதற்றத்தைக் குறைக்கக்கூடிய பண்பு, வல்லாரைக்கு இருப்பதால் நோய்க்கான காரணத்தையும் களையமுடிகிறது.
இன்றைய அவசர உலகில் மனம் வாயிலாக உடலில் ஏற்படும் நோய்கள் பல உள்ளன. வலிப்பு, ஆஸ்த்துமா, ரத்தக்கொதிப்பு, குடற்புண், சர்க்கரை வியாதி, சரவாங்கி மூட்டுவாதம், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல நோய்களும் இப் பட்டியலில் இடம்பெறும். வல்லாரை, பிரம்மி, சங்குபுஷ்பி, வாலுளுவை, அமுக்கரா, குரோச்சாணி ஓமம் போன்ற பல மூலிகைகளும் மேற்சொன்ன விஷயத்தைக் கையாளுவதற்கு உகந்ததாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சித்த மருத்துவத்தின் சிறப்பு மருத்துவமுறையான யோகம், தியானம் ஆகியவை மனத்துக்கு நிச்சயம் நிரந்தரமாகக் கைகொடுக்கும்.
உடல் நோயானாலும், உள்ள நோயானாலும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. நோய் வராதிருக்கச் செய்ய ஏதேனும் வழிவகை உண்டா என்கிற கேள்விக்கு மிகச் சாதகமான பதில் இம் மருத்துவத்தில் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் முதுமையின் காரணமாகவும் நோய்கள் வருவது வழக்கம். நரை, திரை, மூப்பு, பிணி அணுகாதிருக்கும் காயகல்ப முறையை உலகுக்குச் சொல்வது சித்த மருத்துவமே. எலுமிச்சை, இஞ்சி, கடுக்காய், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, சேராங்கொட்டை, துளசி, பொன்னாங்கண்ணி, சிந்தில் போன்றவை கற்ப மூலிகைகளுள் சில. கருவூரார் சித்தர்கூட கற்பமூலிகைகள் 108 என்று கூறியிருக்கிறார். சித்த மருத்துவத்தில் இன்னும் ஆழமாகச் சென்று பார்ப்போமேயானால் சிறப்பான அரிய மருத்துவ முறைகளும் இருப்பதைக் காணலாம். உடல் தன்மைக்கு ஏற்ற மருந்துகள், பருவ காலங்களுக்குத் தகுந்த மருந்துகள், மருந்திற்கான உணவுக்கட்டுப்பாடு, நோய்க்கான பத்தியம் என பலதரப்பட்ட பொக்கிஷங்கள் உள்ளன. சமுதாய நோக்கு மற்றும் தடுப்பு மருத்துவம் நமது மருத்துவத்தில் இருப்பதை அறியலாம். பண்டைக்காலம் தொட்டே குழந்தைகளுக்கு உரை மாத்திரைகளை நோய்த்தடுப்பு முறை என்ற நோக்கில் கொடுத்துவந்ததைப் பலரும் அறிவோம். வழிபாட்டு முறைகளில் மூலிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சமுதாயப் பார்வை என்றல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டும்?
https://www.facebook.com/arogiyam?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» செடியில் விளைந்த துணி!
» எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!
» மண்ணில் தெரியுது வானம்!
» மண்ணில் சொர்க்கம் சாத்தியமே ...
» அன்பின் தேவதை-சிங்களத்து மண்ணில்
» எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!
» மண்ணில் தெரியுது வானம்!
» மண்ணில் சொர்க்கம் சாத்தியமே ...
» அன்பின் தேவதை-சிங்களத்து மண்ணில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|