தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்!

View previous topic View next topic Go down

பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்! Empty பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்!

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 10:37 am

பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்! 23-murder-22-300

கோவை: கோவையில் நேற்று காதல் தோல்வியால் ஒரு பயங்கரச் செயலை செய்து விட்டார் ஒரு வாலிபர். காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து சரமாரியாக குத்திக் கொலை செய்த அந்த வாலிபர், அதைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயாரையும் சரமாரியாக குத்தினார். பின்னர் தன் மீதும், மாணவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து மாய்ந்து போனார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கரச் செயலால் கோவையே பதறிப் போய் விட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீமாகக் கொண்டவர் ராஜீவ் மேனன். தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தோடு கோவையில் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஷீத்தல், ஸ்ருதி மேனன் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

ஷீத்தல் திருமணமாகி கணவருடன் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். ஷீத்தல் பல் டாக்டர் ஆவார். ஸ்ருதி கோவையில் முதுநிலை பிசினஸ் படிப்பு படித்து வந்தார்.

ஸ்ருதிக்கும், அஜீம் என்ற 21 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தவர்கள். இதனால் காதல் வந்தது. ஆனால் திடீரென தனது காதலை கைவிட்டுள்ளார் ஸ்ருதி. அஜீமை பார்க்கக் கூட மறுக்க ஆரம்பித்தார். திடீரென தனது காதலை ஸ்ருதி நிராகரித்ததால் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் அஜீம். இதுகுறித்து ஸ்ருதியுடன் கேட்டபோது மதப் பிரச்சினை வரும் என்பதால் மறுப்பதாக கூறியுள்ளார் ஸ்ருதி.

ஆனால் காதலை ஸ்ருதி நிராகரித்ததால் ஏமாற்றமடைந்த அஜீம் நேற்று மாலை ஸ்ருதி வீட்டுக்குத் தனது காரில் வந்தார். அவரை என்ன என்று லதா கேட்டபோது, பாடம் தொடர்பாக ஸ்ருதியைப் பார்க்க வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து லதா வீட்டுக்குள் அனுமதித்தார்.

பிறகு ஸ்ருதி அறைக்குப் போன அஜீம், அங்கு காதல் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது கோபத்தின் உச்சிக்குப் போன அஜீம், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஸ்ருதியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பிணமானார்.
மகள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் லதா. அவரைப் பார்த்த அஜீம், கோபாவேசத்துடன் அவரையும் சரமாரியாக குத்தினார். அவரிடமிருந்து தப்பிக்க லதா வீட்டு வாசலுக்கு ஓடி வந்தார். ஆனால் விடாமல் குத்தினார் அஜீம். இதில் லதா நிலை குலைந்து கீழே விழுந்தார்.

பின்னர் உள்ளே போன அஜீம், வெறி தணியாமல் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஸ்ருதி மீது ஊற்றினார், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீயுடன் ஸ்ருதி மீது விழுந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். இதில் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் அஜீம்.

அஜீமும், ஸ்ருதியும் கரிக்கட்டை போலாகி வி்ட்டார்கள். சம்பவம் நடந்தபோது வீட்டில் ராஜீவ் மேனனின் தந்தை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் வேகமாக வர முடியவில்லை. தட்டுத் தடுமாறி அவர் வந்து பார்த்தபோது பேத்தி கரிக்கட்டை போல பிணமாகக் கிடப்பதையும், மருமகள் வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும் பார்த்து பதறிப் போனார். வெளியில் வந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரை குரல் கொடுத்துக் கூப்பிட்டார். அவர்வந்து பார்த்து அதிர்ந்து போய் போலீஸுக்குப் போன் செய்தார்.

போலீஸார் விரைந்து வந்து லதாவை முதலில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. கரிக்கட்டை போலக் கிடந்த ஸ்ருதி, அஜீம் உடல்களையும் அப்புறப்படுத்தினர். இருவரது உடல்களும் பிரிக்க முடியாத அளவுக்கு கருகி, ஒட்டிப் போய்க் கிடந்தது.
மாலையில் நடந்த இந்த பயங்கரச் சம்பவத்தால் கோவை நகரமே பரபரப்பாகி விட்டது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்! Empty Re: பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்!

Post by செந்தில் Sun Sep 23, 2012 5:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி மன நோயாளியாக இருப்பானோ? அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்! Empty Re: பயங்கரம்... காதலியைக் கொன்று, தாயையும் குத்தி, தன்னையும் தீவைத்து எரித்து மாய்ந்த வாலிபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum