Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்
Page 1 of 1 • Share
மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்
மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.
மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் நம்நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அவை மேடாக குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.
புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்கிரகித்து பூமியை மிதமான வெப்பநிலையில் வைத்திருப்பதில் மரங்களின் பங்கு முதன்மையானது.
மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ளன. பறவைகள் பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு மரங்களால் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில் மனிதனின் சுய நலனுக்காக அவை பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டும் வருகின்றன.
சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மரங்களைப் போன்று காடுகளை வளர்க்க முடியாது. காடுகளானது மரங்கள் மட்டும் அடங்கியவையல்ல. அவை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டவை. காடுகளின் இயல்பான போக்கினை மனிதனால் கொண்டுவர முடியாது.
காடுகளில் அடர்த்தியான மரங்கள் இருப்பதால் மண்வளம் அதிக அளவு பாதுகாக்கப்படுகிறது. பூமியின் மேல் விழும் மழையின் வேகத்தை, காட்டிலுள்ள தாவரங்கள் தங்கள் மீது தாங்கிக் கொள்கின்றன. மழை நேரடியாக பூமியின் மீது விழுந்தால் நிலப்பரப்பின் மேல் மண் தண்ணீரோடு அரித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும். அப்படித் தொடர்ந்து பலவீனம் அடைந்தால் நிலச்சரிவு ஏற்படும். அவை நிகழாமல் காடுகளில் உள்ள தாவரங்கள் காப்பாற்றுகின்றன. தாவரங்கள் வேர்களை நிலத்தின் உள்பரப்பி நிலத்தை கெட்டிப்படுத்துகின்றன.
சிலவகைத் தாவரங்கள் தங்களுக்கு இருக்கும் நீரை நீராவியாக வெளியேற்றுகின்றன. அது காற்றை ஈரப்பசையாக்கி வறண்ட நிலையை மாற்றுகின்றன.
இந்நிலையில் காடுகள் அழிக்கப்படும்போது அவற்றிலுள்ள விலங்குகள் அழியவும், இடம் பெயரவும் நேரிடும். வன விலங்குகள் அழிவதால் ஏராளமான இழப்புகள் ஏற்படுவது நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக யானைகள் வெளியிடும் சாணம் சிலவகை மரங்கள் வளர உதவுகிறது. அவற்றால் காடுகளில் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகி மண்ணின் வளம் அதிகரிக்கவும், சிலவகை தாவரங்கள் வளரவும் உதவுகிறது. எனவே காடுகளை இனிமேலாவது அழிக்காமல் இருப்பவற்றை பாதுகாக்கச் செய்தாலே போதுமானது.
காடுகளில் மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை பிடித்து தண்டிக்கும் அரசுதான், வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் பெரும்பாலான காடுகளை அழித்துள்ளது.
அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்பை நினைவு கூரலாம். கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சார்ந்த ஆன்மிகப் பகுதிகளிலும், இதர சுற்றுலாப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறிய கட்டடங்கள் பெருகியதும் அதற்காக அங்குள்ள இயற்கை வளங்களை அழித்ததுமே அங்கு ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.
அங்கு கட்டப்பட்டிருந்த விடுதிகள் வெள்ளம் காரணமாக சீட்டுக்கட்டுகள் போன்று சரிந்து விழுந்தன. பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். மண்ணரிப்பின் காரணமாகவே அவை நிகழ்ந்தன. ஏராளமான மரங்களை வெட்டி எறிந்துவிட்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. அதுவே முன்பு போல் மரங்கள் அடர்ந்திருந்தால் அவற்றின் வேர்கள் மண்ணை இறுகப்பற்றி நிலச்சரிவைத் தடுத்திருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்க்க முயற்சிக்க வேண்டும். இடவசதி இல்லாதவர்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்களில் வளர்க்க முயற்சிக்கலாம். குடியிருப்பு வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என பல்வேறு இடங்களில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
https://www.facebook.com/treepage?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்
அனைவரும் படிக்கவேண்டிய பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
» தமிழை நேசிப்போம், காப்போம், வளர்ப்போம்.
» மரம் வளர்ப்போம்....!
» கலாசாரம் காப்போம்
» மரங்களை காப்போம்...!
» தமிழை நேசிப்போம், காப்போம், வளர்ப்போம்.
» மரம் வளர்ப்போம்....!
» கலாசாரம் காப்போம்
» மரங்களை காப்போம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|