Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூரியனார் கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சூரியனார் கோயில்
சூரியனார் கோயில்
தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.
திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அரை கி.மீ. தொலைவிலும்,
கஞ்சனூருக்கு மேற்கே மூன்று கி.மீ. தொலைவிலும்,
ஆடுதுறைக்கு தெற்கே இரண்டு கி.மீ தொலைவிலும், இவ்வாலயம் உள்ளது.
நவ கிரஹங்களுக்கெனத் தனித்தமைந்த கோயில் என்ற சிறப்பும், தோஷ நிவர்த்திக்காகவும் ஏராளமான மக்கள் வந்து வழிபடும் சிறப்பு மிக்க ஆலயம்.
இங்கு ஒன்பது நவ கிரஹங்களும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி தீர்த்தங்கள் உருவாக்கி, நீராடி தவம் புரிந்ததால் அத் தீர்த்தங்கள் நவகிரஹ நாயகர்களின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன.
சுமார் ஐமபது அடி உயரமுள்ள ராச கோபுரம், மூன்று நிலைகளையும் ஐந்து கலசங்களைக் கொண்டுள்ளது. புராணச் செய்திகளைக் காட்டும் சுதைச் சிற்பங்கள் அழகாக கோபுரத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளன.
ஆலயத்தின் நடுவே ஸ்ரீ சூரிய பகவானும், கர்ப்பக் கிரகத்தை ஒட்டினாற் போல சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற எழுவருக்கும் தனித் தனிச் சிறு கோயில்கள் உள்ளன.
தல விருட்சம்: வெள்ளெருக்கு.
இவ்வாலயத்தில் கோள் தீர்த்த வினாயகர் ஆலயம் உள்ளது.
இவரே இத்தலத்தில் சிறப்பு மிக்கவர்.
பொதுவாக, ஜோதிட சாஸ்திரப்படி, பரிகார முறைப்படி வழிபாடு செய்கின்றனர்.
எமது குரு நாதர் எமக்கு கொடுத்த குறிப்பினை இங்கே பதிவு செய்கின்றேன்.
எமது ஆலயப் பரிகாரக் குறிப்புகளில் , நவ கிரஹங்களை வழிபடுவதும், நவ கிரஹங்களை சுற்றுவதும் தேவை இல்லை என்பது முக்கியச் செய்தியாகும்.
அப்படி இருக்க, சூரிய தோஷம், சூரிய கிரஹ பாதிப்பு நீங்க எப்படி செய்வது?
மேலும் , நவ கிரஹ நாயகர்கள் ஆலயத்தினை சுற்றிலும் இருப்பதனால், எப்படி வழிபாட்டினை பூர்த்தி செய்வது என்பதும் முக்கியமானதொரு வினா எழுவதை தவிர்க்க இயலாது.
கோள் தீர்த்த வினாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவித்து, அர்ச்சனை செய்திடுதலும், ஐந்து நெய் அகல் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் பின்னர், மும்முறை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திடுதல் வேண்டும்.
அதன் பின்னர், சூரிய பகவானிற்கு அர்ச்சனை செய்து, பத்து தீபங்கள் ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றிட வேண்டும்.தீபங்கள் சூரியனை நோக்கியவாறு இருத்தல் வேண்டும். தன்னைத்தானே ஐந்து முறை சுற்றி, கொடி மரத்தினருகே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திடுதல் வேண்டும். ஆலய வலம் வருதல் தேவையில்லை!
அதன் பின்னர் இருபது நிமிடங்கள், அமர்ந்திருக்க வேண்டும். அவ்வேளையில், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் படித்திடல் வேண்டும். இருபத்தோராம் நிமிடம், ஆலயம் விட்டு வெளியே வந்திட வேண்டும்.
அதன் பின்னர், முதியோர்களிடம், தேங்காய், வாழைப்பழங்களைக் கொடுத்திட வேண்டும். ஆண்கள் - வயதான முதியோர்கள் , ஆண் சிறுவர்கள் ( பனிரெண்டு வயதுக்குட்பட்டோர்கள் ) புதிய ஆடை தானம், அன்னமளித்தல், செய்திடுதல் வேண்டும். ஒரு தாம்பாளத் தட்டினில் ஆடை, வெற்றிலை பாக்கு, தட்சணைத் தொகை ரூ 5.50 / 11 / 51/ 101 என்றவாறு அவரவர் வசதிக்கேற்ப வைத்து - ( (பெரியோர்களுக்கும் / சிறியோர்களுக்கும்) அவர்களே தாம்பாலத் தட்டிலிருந்து எடுத்திட வேண்டும். குறைந்தது பத்து நபர்களுக்கு செய்திடுதல் அவசியம். பெரியோர்கள் என்றால் பத்து பேர்கள். சிறியோர் என்றாலும் பத்து பேர்கள். ஐந்து + ஐந்து என்று இருக்கக் கூடாது.
ஞாயிறு தினம் - காலை எட்டு மணி முதல் பதினொன்று முப்பது மணிக்குள்ளாக அனைத்தும் முடிக்கப் படவேண்டும்.
இங்ஙனம் செய்திட்ட பின், திங்கட் கிழமை அன்று திருமங்கலக்குடி பிராணவரதேசுவரரையும் மங்கள நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்திட வேண்டும். இறைவனுக்கு தேங்காய், ஆறு வாழைப்பழம், முல்லைப் பூ / மஞ்சள் சாமந்திப் பூ , கற்கண்டு (டைமண்ட்) , ஊதுபத்தி ( வெற்றிலைப் பாக்கு கூடாது) கொடுத்து இறைவன் பெயரில் அர்ச்சனை செய்திடுதலும், அதன் பிறகு நந்தியின் முன்பாக ஒன்பது நெய் அகல் தீபம் ஒரே வரிசையாகவோ /
**
***
****
இப்படி ஒரு நெய் அகல் தீபம் கொண்டு ஏற்றி, ஏற்றிய தீபத்தை முதலாவதாகவும் வைத்திட வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு கொடி மரத்தருகே நின்று ஆலயம் வந்து செல்வோருக்கு கற்கண்டு கட்டை விரல், ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூவிரல்களால் எடுத்து கற்கண்டை வினியோகம் செய்திடுதல் வேண்டும். அதன் பிறகு இடமிருந்து வலமாக மும்முறை வந்து கொடி மரத்தினடியில் விழுந்து வணங்க வேண்டும். இருபது நிமிடங்கள் அமர்ந்து, கோள் அறு பதிகம் ( வேயுறு தோளி பங்கன் .... பாடல் படிக்கவும். மும்முறை படிக்க வேண்டும்.
இருபத்தோராம் நிமிடம் அம்பாள் சன்னதி சென்று, மஞ்சள், குங்குமம், மல்லிகைப் பூ , ஊது வத்தி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்லி, அம்பாளின் பெயரில் அர்ச்சனை செய்திட வேண்டும்.
அம்மனின் வாகனத்தின் முன்பாக, அக்கு வடிவில் மூன்று நெய் தீபம் ஏற்றிட வேண்டும். ஏற்றிய பின்னர் மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
ஐந்து நிமிடம் / இருபது நிமிடம் அமர்ந்து தியானித்து , பிச்சையிடாமல், இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருச்செந்தூராண்டவருக்கு ஒரு நெய் தீபமேற்றி , தீபம் அணையும் வரை ஒருவரிடமும் பேசாமல், வெளியில் செல்லாமல், அமர்ந்து கந்தர் சஷ்டி கவசம் படித்து பரிகாரம் பூர்த்தி செய்திடல் வேண்டும்.
தங்களின் பிறந்த நட்சத்திர நாள் / சாதகமான நட்சத்திர தினத்தன்று ஏழு வயதான முதியோர்களை வீட்டிற்கு அழைத்து, இதில் நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் என இருக்க வேண்டும். ( நாம் தயாரித்த சைவ உணவினை நம் வீட்டில் அமரச் செய்து ) சாப்பிட செய்ய வேண்டும். சாப்பிட்ட பிறகு, தாம்பாளத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அதனுடன் பதினோறு ரூபாய் வைத்து அதனை அவர்கள் எடுத்துக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். இப்பரிகாரம் ஆலயம் சென்று வந்த நூற்றெட்டு நாட்களுக்குள்ளாக செய்திடுதல் அவசியம்.
இவ்வாலயம் சென்று வந்து இப்பரிகாரத்தினையும் செய்திடுவதால், சூரிய கிரக தோஷமும், பித்ரு தோஷமும் பரிபூரணமாக நீங்கி விடும்.
இதுவே எளிய பரிகார முறையாகும்.
-
http://www.krishnaalaya.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அருள்மிகு சூரியனார் திருக்கோயில்,சூரியனார்கோயில்,தஞ்சாவூர்
» நல்ல தங்காள் கோயில்
» திருவலஞ்சுழி – கோயில்
» தஞ்சை பெரிய கோயில்
» குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
» நல்ல தங்காள் கோயில்
» திருவலஞ்சுழி – கோயில்
» தஞ்சை பெரிய கோயில்
» குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|