தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

View previous topic View next topic Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by முழுமுதலோன் Sun Feb 09, 2014 9:20 am

ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.
இவ்வாறாக அவரவர் எதையெல்லாம் ஒழுக்கம் என்று புரிந்துகொண்டார்களோ அதை எல்லாம் ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் பற்றி நாம் இதுவரையில் அறிந்து கொண்ட விடயங்களைப் பற்றி சிறிது அலசிப் பார்ப்போம்.
முதலில், ஒரு மனிதனின் வாழ்க்கை எப்போதோ, எவராலோ உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டுமா என்பது பற்றிப் பார்ப்போம். மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இயற்கையின் ஒழுங்குகளை உள்வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தும் போது எமக்கு மட்டும் ஏன் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்? இந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஓட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்புடையதாக அமைக்கப்பட முடியாமைக்குக் காரணம் என்ன? ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மரபும் மனித இனத்தைக் கூறு போட்டதைத் தவிர வேறு எதைச் சாதித்திருக்கிறது? அது மட்டுமல்ல. இந்த மதங்களாலும், மரபுகளாலும் நாம் மந்தைகளாக மாறிவிட்டோமே, ஏன்?
 நாம் எப்படி மந்தைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை ஒரு காட்சியாகப் பார்ப்போம். இந்தக் காட்சியின் பாத்திரங்கள், ஒரு இடையன், ஒரு கைத்தடி, மந்தைக்கூட்டம். இங்கே கால மாற்றத்துக்கு இடமளிக்காத மதக் கோட்பாடுகளையும், மரபுகளையும் சுமந்து திரிபவன் தான் இடையன். மதமும் மரபும் உருவாக்கியுள்ள ஒழுக்க விதிகள் தான் கைத்தடி. இடையனின் வழிகாட்டலை ஆய்வுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் கூட்டம் தான் மந்தைக்கூட்டம். இடையனின் தொழில் தனது தேவைக்கு ஏற்ப மந்தைகளை மேய்ப்பதும் பின்னர் பண்ணைக்கு அழைத்துச் செல்வதும் தான். ஏற்கனவே இந்தச் சுழற்சிக்குப் பழக்கப்பட்டுள்ள மந்தைகளை மேய்ப்பது இடையனுக்கு மிகவும் சுலபம். தற்செயலாக, அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஒன்று ஏதோ ஒரு விழிப்புணர்வால் இடையனுடைய செயற்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று கேட்டாலோ அல்லது ஒரு புதிய பாதையைத் தெரிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கூட்டத்தில் இருந்து வேறுபட முயற்சித்தாலோ இடையனால் அதைத் தாங்க முடியாது. தன்னிடமுள்ள கைத்தடியால் அந்த ஒற்றைக்கு ஒரு அடி . அத்துடன் இடையனின் சுழற்சிக்குப் பழகிப் போய் அதுதான் உலகம் என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஏனையவைகூட ஆத்திரமடைந்து 'இன்னுமொரு அடி போடுங்கள்! இன்னுமொரு அடிபோடுங்கள்!!' என்று இடையனை உற்சாகப்படுத்தும், பாவம், அந்த ஒற்றைதான் என்ன செய்யும்?

மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்! எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை.
http://www.kgmaster.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty Re: மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by ஜேக் Sun Feb 09, 2014 12:39 pm

உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை.

 சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty Re: மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by rammalar Sun Feb 09, 2014 5:12 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty Re: மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by ஸ்ரீராம் Sun Feb 09, 2014 5:21 pm

பயனுள்ள பகிர்வு. சூப்பர்
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty Re: மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by kanmani singh Mon Feb 10, 2014 11:31 am

தனி மனித ஒழுக்கமே உயர்வு தரும்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்  Empty Re: மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum