Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆசை என்ற ஒன்று இல்லை என்றால்
Page 1 of 1 • Share
ஆசை என்ற ஒன்று இல்லை என்றால்
ஆசை என்ற ஒன்று இல்லை என்றால் அடுத்த நிமிடத்தை நோக்கி நகர முடியாது
“ஆசை என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் உங்களால் அடுத்த நிமிடத்தை நோக்கி நகர முடியாது” என்கிறார் சத்குரு.
அதற்கு அவர் தரும் விளக்கம்.
உங்கள் ஆசையின் விளைவாகத்தான் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவையெல்லாம் உருவாக்கப்பட்டன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று இருப்பதனால்தான் எதிர்காலம் என்ற ஒன்றும் இருக்கிறது.
எதிர்காலம் பற்றிய எண்ணங்களை நீங்கள் உருவாக்கும் போதெல்லாம் கடந்த காலம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இவை இரண்டும் சமமாக வளர்ந்து நிற்காவிடில் நீங்கள் காலிடறி விழுந்துவிடக் கூடும். எனவே கடந்த காலமும் எதிர்காலமும் மாறி மாறி ஆடுகிற விளையாட்டில் நிகழ் காலம் என்கிற உண்மையைத் தவற விடுகிaர்கள்.
ஆசை என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், உங்களால் அடுத்த நிமிடத்தை நோக்கி நகர முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் இடத்திற்கே ஆசைதான் உங்களை நகர்த்தி வந்திருக்கிறது.
அதேநேரம் எப்போது நீங்கள் ஓர் ஆசையை உருவாக்கிவிட்டீர்களோ, அப்போதே எதிர்காலத்தையும் எதிர்காலம் குறித்த ஏராளமான கற்பனைகளையும் உருவாக்கிவிட்டீர்கள். இப்போது உடல் மனம் என்கிற குறுகிய எல்லைகளுக்குள் இருக்கிற யாராலும் எதிர்காலத்திற்குள் நுழைய முடியாது. ஆனால் கற்பனையை உருவாக்க முடியும். ரசம் போன கண்ணாடி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொன்றை பெரிதுபடுத்திக் காட்டும்.
கண்ணாடியில் பிம்பம் ஒவ்வொரு, திசையிலும் கோணல் மாணலாகத் தெரியும். நீங்கள் மேற்கொள்ளும் சாதனைகள் எல்லாம் மனதை சீர்ப்படுத்துவதற்காக அல்ல. மூன்று நாட்கள் தொடர்ந்து மந்திரம் ஒன்றை ஜபித்தால் மனம் தூய்மையாகும் என்று சொல்பவர்கள் உண்டு. மனம் ஒரு குப்பைக் கிடங்கு. அதில் தூய்மைக்கு இடமில்லை.
ஜென் சீடர் ஒருவருக்கு ஞானோதயத்தில் மிகுந்த வேட்கை இருந்தது. தன்னுடைய குரு எந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாரோ, அந்த மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டே இருந்தார். அப்படி ஜபம் செய்தால் சில மாதங்களிலேயே ஞானோதயம் நிகழ்ந்துவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. அவர் ஜபம் செய்வதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய குரு, செங்கல் ஒன்றை எடுத்து சப்தம் வரும் விதமாகக் கல்லில் தேய்க்கத் தொடங்கினார். அவர் மந்திர ஜபத்தில் என்ன ஒலி வருகிறதோ அதேவிதமான ஓசையை எழுப்பினார்.
சீடருக்கு கோபம் வந்துவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் கண்களைத் திறந்து குருவைப் பார்த்து கத்தினார். ‘ஏன் நீங்கள் அறிவற்ற செயலை செய்து கொண்டிருக்கிaர்கள்? நான் மந்திரத்தை தீவிரமாக ஜபித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கர்ண கொடூரமாக ஒலி எழுப்பி என் கவனத்தைக் கலைக்கப் பார்க்கிaர்கள். உங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவேன் என்று பயப்படுகிaர்களா?” என்றெல்லாம் பொரிந்து தள்ளினார்.
“நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய்?” என்று கேட்டார், குரு “என் மனதை தெளிந்த நீரோடை போல் கொண்டுவர முயற்சிக்கிறேன்” என்றார் சீடர். உடனே குரு சொன்னார், “நானும் அதுபோன்ற செயலுக்காகத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செங்கல்லை ஒரு கண்ணாடி போல் ஆக்கப்போகிறேன். இருவரும் ஒரே மாதிரிதான் முயற்சிக்கிறோம். ஆனால் என் செங்கல் கண்ணாடியின் தன்மையை நெருங்கவே இல்லை. உன் மனமும் சலனமில்லாத நிலையை நெருங்கவே இல்லை. இதனால் என்ன பயன்?” என்று கேட்டார்.
எனவே இந்த சாதனைகள் எல்லாம் எதற்காக? சாதனைகள் இல்லையென்றால் வேறு வழி கிடையாது. ஆனால் சாதனைகள் ஒருபோதும் வழியாகாது. ஆசையில்லாமல் அடுத்த நிமிடம் நோக்கி அசையமாட்டீர்கள். ஆனால் ஆசை ஒருபோதும் விடுதலையல்ல. அந்த ஏக்கத்தில் அந்த தீவிரத்தில், செங்கல்லை மாங்கு மாங்கென்று தேய்ப்பதில் திடீரென்று ஒன்றை உணர்கிaர்கள். செங்கல் தேய்ந்து போகுமே தவிர நீங்கள் தேடியது அதுவல்ல என்று உணர்கிaர்கள்.
எனவே எந்த செயல் செய்ய வேண்டும் என்பதில் இல்லை. விஷயம் செய்து கொண்டிருக்கும் செயல் என்னவோ அதை சரியாக செய்ய வேண்டும் என்பதே விஷயம். இதைப் புரிந்து கொண்டால் மனதின் தந்திரங்களைக் கடந்து வரத் தெரிந்து கொண்டால் இது மிகவும் எளிது.
நீங்கள் எதைச் செய்வதாகத் தேர்ந்தெடுத்திருக்கிaர்களோ, அதற்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். இதன் மூலமாகவே மனதின் எல்லா தந்திரங்களையும் கடந்து வர முடியும். இதன்படி மனிதர்களின் ஆசைகளை வளர்த்தெடுக்கும் காலக்கணக்குகளையும் உங்களால் உடைத்தெறிய முடியும்.
எந்த ஆசையும் இல்லாமல் எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தால் காலம் என்ற ஒன்றே மனிதர்களுக்கு இருக்காது. எனவே காலம் என்பது உங்கள் ஆசையின் பக்கவிளைவாய் உருவானதுதான். ஆசை என்ற ஒன்று இருக்கிறது. எதிர்காலம் என்ற ஒன்று இருப்பதால்தான் கடந்த காலம் என்ற ஒன்றும் இருக்கிறது. கடந்த காலமும் எதிர்காலமும் இருப்பதால்தான் நிகழ்காலத்தைத் தவற விடுகிaர்கள்.
http://padugai.com/
“ஆசை என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் உங்களால் அடுத்த நிமிடத்தை நோக்கி நகர முடியாது” என்கிறார் சத்குரு.
அதற்கு அவர் தரும் விளக்கம்.
உங்கள் ஆசையின் விளைவாகத்தான் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவையெல்லாம் உருவாக்கப்பட்டன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று இருப்பதனால்தான் எதிர்காலம் என்ற ஒன்றும் இருக்கிறது.
எதிர்காலம் பற்றிய எண்ணங்களை நீங்கள் உருவாக்கும் போதெல்லாம் கடந்த காலம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இவை இரண்டும் சமமாக வளர்ந்து நிற்காவிடில் நீங்கள் காலிடறி விழுந்துவிடக் கூடும். எனவே கடந்த காலமும் எதிர்காலமும் மாறி மாறி ஆடுகிற விளையாட்டில் நிகழ் காலம் என்கிற உண்மையைத் தவற விடுகிaர்கள்.
ஆசை என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், உங்களால் அடுத்த நிமிடத்தை நோக்கி நகர முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் இடத்திற்கே ஆசைதான் உங்களை நகர்த்தி வந்திருக்கிறது.
அதேநேரம் எப்போது நீங்கள் ஓர் ஆசையை உருவாக்கிவிட்டீர்களோ, அப்போதே எதிர்காலத்தையும் எதிர்காலம் குறித்த ஏராளமான கற்பனைகளையும் உருவாக்கிவிட்டீர்கள். இப்போது உடல் மனம் என்கிற குறுகிய எல்லைகளுக்குள் இருக்கிற யாராலும் எதிர்காலத்திற்குள் நுழைய முடியாது. ஆனால் கற்பனையை உருவாக்க முடியும். ரசம் போன கண்ணாடி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொன்றை பெரிதுபடுத்திக் காட்டும்.
கண்ணாடியில் பிம்பம் ஒவ்வொரு, திசையிலும் கோணல் மாணலாகத் தெரியும். நீங்கள் மேற்கொள்ளும் சாதனைகள் எல்லாம் மனதை சீர்ப்படுத்துவதற்காக அல்ல. மூன்று நாட்கள் தொடர்ந்து மந்திரம் ஒன்றை ஜபித்தால் மனம் தூய்மையாகும் என்று சொல்பவர்கள் உண்டு. மனம் ஒரு குப்பைக் கிடங்கு. அதில் தூய்மைக்கு இடமில்லை.
ஜென் சீடர் ஒருவருக்கு ஞானோதயத்தில் மிகுந்த வேட்கை இருந்தது. தன்னுடைய குரு எந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாரோ, அந்த மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டே இருந்தார். அப்படி ஜபம் செய்தால் சில மாதங்களிலேயே ஞானோதயம் நிகழ்ந்துவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. அவர் ஜபம் செய்வதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய குரு, செங்கல் ஒன்றை எடுத்து சப்தம் வரும் விதமாகக் கல்லில் தேய்க்கத் தொடங்கினார். அவர் மந்திர ஜபத்தில் என்ன ஒலி வருகிறதோ அதேவிதமான ஓசையை எழுப்பினார்.
சீடருக்கு கோபம் வந்துவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் கண்களைத் திறந்து குருவைப் பார்த்து கத்தினார். ‘ஏன் நீங்கள் அறிவற்ற செயலை செய்து கொண்டிருக்கிaர்கள்? நான் மந்திரத்தை தீவிரமாக ஜபித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கர்ண கொடூரமாக ஒலி எழுப்பி என் கவனத்தைக் கலைக்கப் பார்க்கிaர்கள். உங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவேன் என்று பயப்படுகிaர்களா?” என்றெல்லாம் பொரிந்து தள்ளினார்.
“நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய்?” என்று கேட்டார், குரு “என் மனதை தெளிந்த நீரோடை போல் கொண்டுவர முயற்சிக்கிறேன்” என்றார் சீடர். உடனே குரு சொன்னார், “நானும் அதுபோன்ற செயலுக்காகத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செங்கல்லை ஒரு கண்ணாடி போல் ஆக்கப்போகிறேன். இருவரும் ஒரே மாதிரிதான் முயற்சிக்கிறோம். ஆனால் என் செங்கல் கண்ணாடியின் தன்மையை நெருங்கவே இல்லை. உன் மனமும் சலனமில்லாத நிலையை நெருங்கவே இல்லை. இதனால் என்ன பயன்?” என்று கேட்டார்.
எனவே இந்த சாதனைகள் எல்லாம் எதற்காக? சாதனைகள் இல்லையென்றால் வேறு வழி கிடையாது. ஆனால் சாதனைகள் ஒருபோதும் வழியாகாது. ஆசையில்லாமல் அடுத்த நிமிடம் நோக்கி அசையமாட்டீர்கள். ஆனால் ஆசை ஒருபோதும் விடுதலையல்ல. அந்த ஏக்கத்தில் அந்த தீவிரத்தில், செங்கல்லை மாங்கு மாங்கென்று தேய்ப்பதில் திடீரென்று ஒன்றை உணர்கிaர்கள். செங்கல் தேய்ந்து போகுமே தவிர நீங்கள் தேடியது அதுவல்ல என்று உணர்கிaர்கள்.
எனவே எந்த செயல் செய்ய வேண்டும் என்பதில் இல்லை. விஷயம் செய்து கொண்டிருக்கும் செயல் என்னவோ அதை சரியாக செய்ய வேண்டும் என்பதே விஷயம். இதைப் புரிந்து கொண்டால் மனதின் தந்திரங்களைக் கடந்து வரத் தெரிந்து கொண்டால் இது மிகவும் எளிது.
நீங்கள் எதைச் செய்வதாகத் தேர்ந்தெடுத்திருக்கிaர்களோ, அதற்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். இதன் மூலமாகவே மனதின் எல்லா தந்திரங்களையும் கடந்து வர முடியும். இதன்படி மனிதர்களின் ஆசைகளை வளர்த்தெடுக்கும் காலக்கணக்குகளையும் உங்களால் உடைத்தெறிய முடியும்.
எந்த ஆசையும் இல்லாமல் எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தால் காலம் என்ற ஒன்றே மனிதர்களுக்கு இருக்காது. எனவே காலம் என்பது உங்கள் ஆசையின் பக்கவிளைவாய் உருவானதுதான். ஆசை என்ற ஒன்று இருக்கிறது. எதிர்காலம் என்ற ஒன்று இருப்பதால்தான் கடந்த காலம் என்ற ஒன்றும் இருக்கிறது. கடந்த காலமும் எதிர்காலமும் இருப்பதால்தான் நிகழ்காலத்தைத் தவற விடுகிaர்கள்.
http://padugai.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நீங்கள் குற்றவாளி இல்லை என்றால் ........
» நன்றி என்ற ஒரு சிறிய வார்த்தைக்கு ஈடான இனிப்பானது, வேறெதுவும் உலகில் இல்லை
» சமைத்தல் எளிதானது இல்லை. அது ஒரு கலை. ஈடுபாடும், உழைப்பும், அக்கறையும் ஒன்று சேர்ந்தது.
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா?
» நன்றி என்ற ஒரு சிறிய வார்த்தைக்கு ஈடான இனிப்பானது, வேறெதுவும் உலகில் இல்லை
» சமைத்தல் எளிதானது இல்லை. அது ஒரு கலை. ஈடுபாடும், உழைப்பும், அக்கறையும் ஒன்று சேர்ந்தது.
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|