Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எச்சரிக்கை!! நண்பர்களிடமிருந்தே!!
Page 1 of 1 • Share
எச்சரிக்கை!! நண்பர்களிடமிருந்தே!!
சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள்.!
வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான நண்பர்களைச் சந்திக்கிறோம். பிறகு அவர்களிடம் நாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி சிந்திக்கிறோம். பாடமும் பெறுகிறோம்.
எல்லா நட்பும் ஒரே வகையானதல்ல. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது (குறள்788)
வள்ளுவர் வகுத்த வாழ்வியலில், ஒருவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும்போது, உடனே ஓடோடி தானியங்கிபோல் உதவுவதுதான் அவ்வகை_ முதல்வகை. கைம்மாறு கருதாத நட்பு.
அத்தகைய நண்பர்களே மறக்கப்படக்கூடிய, இழக்கக் கூடாத நண்பர்கள் ஆவார்கள்.
மற்றொரு வகையாளர்கள், பயன் கருதிப் பழகுவார்கள். நம்மிடமிருந்து சதா, சர்வகாலமும் எதை எதையோ எதிர்பார்த்து_கணக்குப் போட்டுப் பழகும் பண்பாளர்கள்.
ஒரு சிறு ஏமாற்றம் அவர்களுக்கு என்றாலும் அவர்கள் மெல்ல மெல்ல காணாமற் போவார்கள்.
அந்த அற்றகுளத்து அறுநீர்ப்பறவைகள்! அவர்களைப் புரிந்தும் கூட, தாட்சண்யத்திற்காக அவர்களை நாமே கத்தரித்துவிடாமல், அவர்களது முகமன் கண்டுகூட முகம் சுளிக்காமல் பழகித் தொலைப்பது உண்டு.
அவர்களது பல பரிந்துரைகளை நாம் ஏற்று செயல்படுத்தி அவர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தியிருந்தால்கூட பத்து நடந்து, பதினொன்றாவது நடக்க இயலாமல்போனால், நடந்த பத்தை மறந்து, நடக்காத பதினொன்று பற்றியே அலுத்து அங்கலாய்ப்பார்கள் அவர்கள்!
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்து சிறப்புடன் ஆட்சி புரிந்து வரலாறு படைத்த பனகல்அரசர் (Raja of Panagal) அவர்கள் கூறுவாராம்!
‘‘For every 10 recommendations I get nine enemies and one doubtful friend’’ 10 பேர் பரிந்துரைகளுக்கு என்னிடத்தில் வரும்போது, ஒன்பது பேர்கள் எதிரிகளாகவும், பயன் அடைந்த ஒருவர் சந்தேகத்திற்குரிய நண்பராகவும் தொடருவார்களாம்!
கிடைக்காத 9 பேர் எதிரிகளாகிறார்கள் என்பதை விட, அவரது கூற்றில் ரசிக்க வேண்டியது கிடைத்த 10ஆவது நண்பர்கூட, கிடைத்த பிறகு இது இவரால்தான் நடந்தது என்று சொல்லிவிட முடியுமா? சந்தேகத்துடன் நட்பு பாராட்டுவதோடு, கிடைத்தபிறகு அவரது தகுதி திறமை, அறிவாற்றல் இவைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூட நினைப்பார்!
சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள். ( ஒரு வகையில் அது நிம்மதி_ நமக்கும் விடுதலைதான்!)
நட்பு பலருக்கு ஒருவழிப் பாதைதான்; ஒரு சிலருக்கு மட்டுமே அது இருவழிப்பாதைகள் ஆகும்.
ஒரு நண்பர் பரிந்துரைகளைச் சொல்லி, அது நடக்காதபோது, அதன்பிறகு நம்மிடம் நடந்து கொள்வதைப் பொறுத்தே அவர் பண்புள்ளவரா? இல்லையா என்பதை அந்த அளவுகோல் கொண்டு அளக்கமுடியும்.
எனவே எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்_ சரியான நண்பர்கள் தேர்வைப் பற்றியே கவலைப்பட்டு வாழுங்கள்!
http://www.friendstamilchat.com/
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள்.!
வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான நண்பர்களைச் சந்திக்கிறோம். பிறகு அவர்களிடம் நாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி சிந்திக்கிறோம். பாடமும் பெறுகிறோம்.
எல்லா நட்பும் ஒரே வகையானதல்ல. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது (குறள்788)
வள்ளுவர் வகுத்த வாழ்வியலில், ஒருவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும்போது, உடனே ஓடோடி தானியங்கிபோல் உதவுவதுதான் அவ்வகை_ முதல்வகை. கைம்மாறு கருதாத நட்பு.
அத்தகைய நண்பர்களே மறக்கப்படக்கூடிய, இழக்கக் கூடாத நண்பர்கள் ஆவார்கள்.
மற்றொரு வகையாளர்கள், பயன் கருதிப் பழகுவார்கள். நம்மிடமிருந்து சதா, சர்வகாலமும் எதை எதையோ எதிர்பார்த்து_கணக்குப் போட்டுப் பழகும் பண்பாளர்கள்.
ஒரு சிறு ஏமாற்றம் அவர்களுக்கு என்றாலும் அவர்கள் மெல்ல மெல்ல காணாமற் போவார்கள்.
அந்த அற்றகுளத்து அறுநீர்ப்பறவைகள்! அவர்களைப் புரிந்தும் கூட, தாட்சண்யத்திற்காக அவர்களை நாமே கத்தரித்துவிடாமல், அவர்களது முகமன் கண்டுகூட முகம் சுளிக்காமல் பழகித் தொலைப்பது உண்டு.
அவர்களது பல பரிந்துரைகளை நாம் ஏற்று செயல்படுத்தி அவர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தியிருந்தால்கூட பத்து நடந்து, பதினொன்றாவது நடக்க இயலாமல்போனால், நடந்த பத்தை மறந்து, நடக்காத பதினொன்று பற்றியே அலுத்து அங்கலாய்ப்பார்கள் அவர்கள்!
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்து சிறப்புடன் ஆட்சி புரிந்து வரலாறு படைத்த பனகல்அரசர் (Raja of Panagal) அவர்கள் கூறுவாராம்!
‘‘For every 10 recommendations I get nine enemies and one doubtful friend’’ 10 பேர் பரிந்துரைகளுக்கு என்னிடத்தில் வரும்போது, ஒன்பது பேர்கள் எதிரிகளாகவும், பயன் அடைந்த ஒருவர் சந்தேகத்திற்குரிய நண்பராகவும் தொடருவார்களாம்!
கிடைக்காத 9 பேர் எதிரிகளாகிறார்கள் என்பதை விட, அவரது கூற்றில் ரசிக்க வேண்டியது கிடைத்த 10ஆவது நண்பர்கூட, கிடைத்த பிறகு இது இவரால்தான் நடந்தது என்று சொல்லிவிட முடியுமா? சந்தேகத்துடன் நட்பு பாராட்டுவதோடு, கிடைத்தபிறகு அவரது தகுதி திறமை, அறிவாற்றல் இவைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூட நினைப்பார்!
சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள். ( ஒரு வகையில் அது நிம்மதி_ நமக்கும் விடுதலைதான்!)
நட்பு பலருக்கு ஒருவழிப் பாதைதான்; ஒரு சிலருக்கு மட்டுமே அது இருவழிப்பாதைகள் ஆகும்.
ஒரு நண்பர் பரிந்துரைகளைச் சொல்லி, அது நடக்காதபோது, அதன்பிறகு நம்மிடம் நடந்து கொள்வதைப் பொறுத்தே அவர் பண்புள்ளவரா? இல்லையா என்பதை அந்த அளவுகோல் கொண்டு அளக்கமுடியும்.
எனவே எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்_ சரியான நண்பர்கள் தேர்வைப் பற்றியே கவலைப்பட்டு வாழுங்கள்!
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எச்சரிக்கை!! நண்பர்களிடமிருந்தே!!
எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்_ சரியான நண்பர்கள் தேர்வைப் பற்றியே கவலைப்பட்டு வாழுங்கள்!
உண்மையான வரிகள்..
உண்மையான வரிகள்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|