தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றியின் இரகசியம்

View previous topic View next topic Go down

வெற்றியின் இரகசியம் Empty வெற்றியின் இரகசியம்

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 11:52 am

வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.

அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.

சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.

கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர மிகவும் பிரயத்தனப்பட்டான்.
சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ் அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பிறகு கேட்டார்.

“இப்போதைய இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?”

“காற்றைப் பெற போராடினேன்” என பதில் சொன்ன அந்த இளைஞனை முழுமையாக விடுவித்து விட்டு புன்னகையுடன் சாக்ரடீஸ் கூறினார்,

“இதுதான் வெற்றியின் இரகசியம்.”

நாம் அடைய வேண்டிய இலக்குகள் ஒவ்வொன்றையுமே காற்றைப் போல் அவசிய மானவையாய் உயிரைக் காக்க தேவைப்படுபவை யாய் கருத வேண்டும். என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதுமட்டு மின்றி ஒவ்வொரு சம்பவமும் அவரவர் சிந்தனைக்கு ஏற்றாற் போல் வெவ்வேறு படிப்பி னையைத் தரும்.

பதுங்கியிருந்து பாய்வதும், பொறுத்திருந்து பெறுவதுவும் போராட்டத்தின் உத்திகள்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும். எதற்கு பொறுமை தேவை, எதற்கு வேகம் தேவை என்பதில் தெளிவுதான் மிக அவசிய மானவை.

பொறுமையாய் அடக்கமாய் இருக்கி றார்கள் என்பதற்காக அறிவுகுறைந்தவர்கள் என்றோ, வலிமையற்றவர்கள் என்றோ கருதி எளிதில் அவர்களை வென்றுவிடலாம் என பிறரை யாரும் தவறாக எடைபோட்டுவிடக்கூடாது.

பொறுமையும் அடக்கமும் மிக உயர்ந்த பண்புகள். இவற்றை ஒருவர் கைக்கொள்கிறார் என்றால் அவர் அறிவுத்தெளிவு உடையவர் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் ஏதோ பெரிய சாதனைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். பெரிய சாதனைகளை செய்வதற்கு முன் பெரிதும் தேவைப்படுபவை பொறுமையும் அடக்கமும்தான் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இதனை மிக அழகாக ஔவை சொல்கிறாள்.
“அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.”

சிறிய மீன்கள் கண்ணெதிரிலேயே நீந்திச் செல்லுகின்ற போதும் மீனுக்காக வந்து ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கு அவற்றைப் பிடிக்காமல் அமைதியாய் காத்துக் கொண்டிருக்கு மாம். உறுமீனாகிய பெரிய மீன் வரும்போது கொத்திக் கொண்டு பறந்துவிடும்.

வெளிச்சம் என்பது விளக்கின் தன்மை, அளவுகளைப் பொறுத்துள்ளது. நம் விளக்கின் உள்ளீட்டுப் பொருளின் சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டால் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டே இருப்போம்.

ஒற்றை அரிசியைப் பார்க்கும்போது நமக்கு அது ஒன்றும் பெரிதாய் தெரிவதில்லை. ஆனால் அதே அரிசியின்மீது ஓர் ஓவியமோ, நம்முடைய பெயரோ எழுதியிருந்தால் சிறிய ஒற்றை அரிசியின் மதிப்பு உயர்ந்து விடுகிறது. மிகச் சிறிய பொருளையும் உயர்மதிப்பீடு செய்ய வைப்பதில் அது எதனைத் தாங்கியிருக்கிறது என்பதுதான் முடிவு செய்கிறது.

உயர உயர மேலேறும் போதுதான் ஊர் நம் கண்களுக்கு தெரிகிறது. நம் சிறகுகளின் வலிமையைப் பொறுத்தே நாம் சிகரங்களுக்கு மேலே பறக்கிறோம். இறக்கைகளின் சக்தியை அதிகப்படுத்தும் போது ஊரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நம் கண்கள் உலகைப் பார்க்கத் தொடங்குகின்றன.

அனுபவ நீரால் அடித்துச் செல்லப்படும் போது கரடுமுரடான கல்லாய் இருந்த நாம் மென்மையான கூழாங்கல்லாய் மாறிவிடுகிறோம்.

காயாக நாம் இருக்கும்வரை அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் விதை நம்மிடத்தில் பிஞ்சாகவே இருக்கிறது.

காற்று, வெயில், மழை எல்லாவற்றையும் தாங்கி கனிந்தபின்னர்தான் நம் விதைகள் சங்கிலித் தொடராய் புதியவற்றை படைக்கும் சக்தி பெறுகின்றன. கனிந்த பின் நம்மிடமிருக்கும் சுவையே அலாதிதான். காயாக இருக்கும்வரை நாம் கடினமாகவும், சுவையற்றும் இருக்கிறோம்.

வெந்நீரில் கொதிக்கும் போதுதான் தேயிலையின் நிறத்தை நாம் அறிய முடியும். கொதித்து வடிகட்டிய பின்னர்தான் தேநீர் உண்மையான சுவையைத் தரும். எடுத்து படிக்காதவரை எந்தப் புத்தகத் திற்கும் மதிப்பீடு தர முடியாது. பாதுகாப்பாய் கண்ணாடிப் பேழைக்குள் இருப்பதாய் கருதிக் கொண்டு நாம் படிக்கப்படாமலே இருந்தால் பளபளவென்ற தோற்றத்தினாலும், பாதுகாப்பாய் இருப்பத னாலும் என்ன பயன் வந்துவிடப் போகிறது?

உயர்ந்த திறமைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை மற்றவர் அறிந்து கொள்ளவில்லை, உரிய வகையில் அங்கீ கரிக்கப்படவில்லை என்ற காரணங்களுக்காக நாம் அமைதியாய் இருந்துவிட முடியுமா?


- ருக்குமணி பன்னீர்செல்வம்

http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வெற்றியின் இரகசியம் Empty Re: வெற்றியின் இரகசியம்

Post by ragu Sun Mar 16, 2014 3:11 pm

சூப்பர்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

வெற்றியின் இரகசியம் Empty Re: வெற்றியின் இரகசியம்

Post by முரளிராஜா Sun Mar 16, 2014 3:19 pm

ragu wrote:சூப்பர்
நலமா  ரகு?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றியின் இரகசியம் Empty Re: வெற்றியின் இரகசியம்

Post by sreemuky Sun Mar 16, 2014 7:27 pm

முயற்சிகளை உயிரைப்போல் நினைத்து மதித்தால் வெற்றி நிச்சயம்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

வெற்றியின் இரகசியம் Empty Re: வெற்றியின் இரகசியம்

Post by செந்தில் Sun Mar 16, 2014 7:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றியின் இரகசியம் Empty Re: வெற்றியின் இரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum