Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேசமே சுவாசம்!
Page 1 of 1 • Share
நேசமே சுவாசம்!
நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்?
இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு பட்டியலைத் தருவீர்கள்.
உங்களுக்குப் பிடித்த பலரும் அதில் இருப்பார்கள். உங்களின் நெருங்கிய உறவில் தொடங்கி, நட்பில், இசையில், கவிதையில், எழுத்தில், நடனத்தில், நடிப்பில், தலைமைப் பண்பில், குணத்தில், அறிவில், அன்பில், அழகில் என்று இன்னும் எத்தனையோ விதங்களில் அவரவர் மன விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் மகிழ்வைத் தரக் கூடியவர்கள், அவரவர் ஆற்றலால் நல்ல பலனைத் தரக்கூடியவர்கள் என உங்களின் நேசிப்புக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.
அவர்கள் ஏன் நம்மால் நேசிக்கப் படுகிறார்கள்?
நம்மால் செய்ய இயலாத ஒன்றை செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். அல்லது நம்மை விடவும் சிறப்பாய் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். குறிப்பிட்ட துறையில் மற்ற எல்லோரிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு தனித்த சிறப்பைப் பெற்றவர்களாய் இருப்பார்கள். சரி. அந்தப் பட்டியலில் முக்கியமான ஒருவர் இல்லையே. கவனித்திருக்கிறீர்களா?
யார் அப்படி விடுபட்டுப் போனவர்?
வேறு யார்? நீங்கள்தான்!
உங்களின் நேசத்திற்குரியோரின் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பார்த்திருக்கிறீர்களா?
பலரையும் நேசிக்கத் தெரிந்த நாம் நம்மை நேசிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் என்ன?
மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எதிர் பார்க்கின்றோம். ஏக்கப்படுகின்றோம். பல நேரங்களில் ஏமாற்றமடைந்து துன்பமடைகிறோம்.
நம்மை பிறர் நேசிப்பதும், நம்முடைய முயற்சிகளுக்கு, வெற்றிகளுக்கு, சாதனைகளுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதும் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நம்மிடமிருந்து நமக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறதா?
நாம் நம்மை நேசிப்பது உண்மையென்றால், சரியான மதிப்பீட்டோடு நம்மை பாராட்டும் முதல் நபர் நாமாய்த்தான் இருத்தல்வேண்டும்.
நம்மை நாம் நேசித்தோமென்றால், பிறரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தன்னை நேசிப்பவர்களால் மட்டுமே தன் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்பதை உணர்ந்து அமைத்துக்கொள்ள இயலும்.
யாரெல்லாம் தன்னைத்தானே நேசிப்பவர்கள் என்று பார்ப்போம்.
தன்னுடைய சாதாரணமான மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் எல்லாம் தம்மைத் தாமே நேசிப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
“நான் விரும்புகின்ற உணவுகளைச் சாப்பிடுகிறேன், எனக்குப் பிடித்தமான உடைகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிகிறேன். எனக்குப் பிடித்தமான சூழ் நிலைகளில் என்னுடைய நேரங்களைச் செலவழிக்கிறேன். என்னை நேசிப்பதால்தானே இப்படியெல்லாம் செய்யமுடிகிறது” என்று சிலர் சொல்லலாம்.
பிடித்தமான தோற்றத்தில், நிலையில் தன்னை இருத்திக் கொள்வதோ, பிடித்தமான உடையணிவதோ, பிடித்தமான உணவைச் சாப்பிடுவதோ, பிடித்தமானவர்களோடு உறவாடுவதோ மட்டுமே தன்னை நேசித்தல் ஆகிவிடாது.
கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்து, தன் புற அழகால் மட்டுமே திருப்தியுற்று தன்னையே ரசிப்பவர்கள் என்று சிலர் இருப்பார்கள். தன்னை நேசிப்பதாய் இவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள். மூப்படைந்து புறத்தோற்றம் மாற்றமடைந்து வரும்போது தன் மீதே வெறுப்படைபவர்களாக இவர்கள் மாறி விடுவார்கள்.
தன்னை நேசிப்பவர்கள்,
சுய பரிதாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
பிறர் தன்னை விரும்பவேண்டும் என்று வெறுமனே எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
பிறரின் விமர்சனங்களைக் கேட்டு கலங்கி விடமாட்டாது தன்னுடைய பணிகளிலேயே குறிக் கோளாய் இருப்பார்கள்.
பிறர் தன்னை நேசிக்கும் வண்ணம் தன் நிலையை மேன்மையுடையதாய் ஆக்கிக் கொள்வார்கள்.
தன்னை நேசிப்பவர் தவறுகளைச் செய்ய மாட்டார்.
ஒருவர் தன்னை முழுமையாய் நேசிக்கிறார் என்றால் முதலில் அவர் தன் உடல்நலத்தின் மீதுதான் முழுக்கவனம் செலுத்துவார்.
http://www.no1tamilchat.com/
இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு பட்டியலைத் தருவீர்கள்.
உங்களுக்குப் பிடித்த பலரும் அதில் இருப்பார்கள். உங்களின் நெருங்கிய உறவில் தொடங்கி, நட்பில், இசையில், கவிதையில், எழுத்தில், நடனத்தில், நடிப்பில், தலைமைப் பண்பில், குணத்தில், அறிவில், அன்பில், அழகில் என்று இன்னும் எத்தனையோ விதங்களில் அவரவர் மன விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் மகிழ்வைத் தரக் கூடியவர்கள், அவரவர் ஆற்றலால் நல்ல பலனைத் தரக்கூடியவர்கள் என உங்களின் நேசிப்புக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.
அவர்கள் ஏன் நம்மால் நேசிக்கப் படுகிறார்கள்?
நம்மால் செய்ய இயலாத ஒன்றை செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். அல்லது நம்மை விடவும் சிறப்பாய் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். குறிப்பிட்ட துறையில் மற்ற எல்லோரிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு தனித்த சிறப்பைப் பெற்றவர்களாய் இருப்பார்கள். சரி. அந்தப் பட்டியலில் முக்கியமான ஒருவர் இல்லையே. கவனித்திருக்கிறீர்களா?
யார் அப்படி விடுபட்டுப் போனவர்?
வேறு யார்? நீங்கள்தான்!
உங்களின் நேசத்திற்குரியோரின் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பார்த்திருக்கிறீர்களா?
பலரையும் நேசிக்கத் தெரிந்த நாம் நம்மை நேசிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் என்ன?
மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எதிர் பார்க்கின்றோம். ஏக்கப்படுகின்றோம். பல நேரங்களில் ஏமாற்றமடைந்து துன்பமடைகிறோம்.
நம்மை பிறர் நேசிப்பதும், நம்முடைய முயற்சிகளுக்கு, வெற்றிகளுக்கு, சாதனைகளுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதும் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நம்மிடமிருந்து நமக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறதா?
நாம் நம்மை நேசிப்பது உண்மையென்றால், சரியான மதிப்பீட்டோடு நம்மை பாராட்டும் முதல் நபர் நாமாய்த்தான் இருத்தல்வேண்டும்.
நம்மை நாம் நேசித்தோமென்றால், பிறரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தன்னை நேசிப்பவர்களால் மட்டுமே தன் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்பதை உணர்ந்து அமைத்துக்கொள்ள இயலும்.
யாரெல்லாம் தன்னைத்தானே நேசிப்பவர்கள் என்று பார்ப்போம்.
தன்னுடைய சாதாரணமான மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் எல்லாம் தம்மைத் தாமே நேசிப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
“நான் விரும்புகின்ற உணவுகளைச் சாப்பிடுகிறேன், எனக்குப் பிடித்தமான உடைகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிகிறேன். எனக்குப் பிடித்தமான சூழ் நிலைகளில் என்னுடைய நேரங்களைச் செலவழிக்கிறேன். என்னை நேசிப்பதால்தானே இப்படியெல்லாம் செய்யமுடிகிறது” என்று சிலர் சொல்லலாம்.
பிடித்தமான தோற்றத்தில், நிலையில் தன்னை இருத்திக் கொள்வதோ, பிடித்தமான உடையணிவதோ, பிடித்தமான உணவைச் சாப்பிடுவதோ, பிடித்தமானவர்களோடு உறவாடுவதோ மட்டுமே தன்னை நேசித்தல் ஆகிவிடாது.
கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்து, தன் புற அழகால் மட்டுமே திருப்தியுற்று தன்னையே ரசிப்பவர்கள் என்று சிலர் இருப்பார்கள். தன்னை நேசிப்பதாய் இவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள். மூப்படைந்து புறத்தோற்றம் மாற்றமடைந்து வரும்போது தன் மீதே வெறுப்படைபவர்களாக இவர்கள் மாறி விடுவார்கள்.
தன்னை நேசிப்பவர்கள்,
சுய பரிதாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
பிறர் தன்னை விரும்பவேண்டும் என்று வெறுமனே எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
பிறரின் விமர்சனங்களைக் கேட்டு கலங்கி விடமாட்டாது தன்னுடைய பணிகளிலேயே குறிக் கோளாய் இருப்பார்கள்.
பிறர் தன்னை நேசிக்கும் வண்ணம் தன் நிலையை மேன்மையுடையதாய் ஆக்கிக் கொள்வார்கள்.
தன்னை நேசிப்பவர் தவறுகளைச் செய்ய மாட்டார்.
ஒருவர் தன்னை முழுமையாய் நேசிக்கிறார் என்றால் முதலில் அவர் தன் உடல்நலத்தின் மீதுதான் முழுக்கவனம் செலுத்துவார்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நேசமே சுவாசம்!
» நீ தான் என் சுவாசம்..
» சுவாசம் இழந்த உயிர் நான்..!!
» காதல் என் சுவாசம் --முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்
» நீ தான் என் சுவாசம்..
» சுவாசம் இழந்த உயிர் நான்..!!
» காதல் என் சுவாசம் --முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|