தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கியத்தின் வழிகாட்டி........

View previous topic View next topic Go down

ஆரோக்கியத்தின் வழிகாட்டி........ Empty ஆரோக்கியத்தின் வழிகாட்டி........

Post by முழுமுதலோன் Sat Mar 08, 2014 11:10 am

சிறந்த உணவு முறை


             உணவை மருந்தாக்கி உண்டால் அதுவே ஆரோக்கியத்தின் வழிகாட்டி.  இதையே சித்தர்கள் உணவே மருந்து மருந்தே உணவு  என்றனர்.

உணவை முறையாக உண்பதன் மூலம்  மூலமே நோயில்லா வாழ்வு வாழலாம் என்பதை சித்தர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

இன்று உணவு என்பது பகட்டுக்காக உண்பது போல் ஆகிவிட்டது.  நாவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சத்தான உணவு என்பது  தற்போது சத்து மாத்திரைகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன.

பழங்காலத்தில் நம் முன்னோர்களின் உணவு முறை இயற்கை சார்ந்து, சமச்சீர் உணவாக இருந்தது.  ஆனால் இன்று சம அளவு சத்தான உணவு சாப்பிடுவதற்கு நாம் பயிற்சி முகாம் சென்று கற்கும் நிலை வந்துவிட்டது.

இன்றைய இளயை தலைமுறையினருக்கு அவசரம் என்பதுதான் தாரக மந்திரமாக உள்ளது.  உணவில் அவசரம், செயலில் அவசரம் என அவசரமாகவே எல்லாவற்றையும் செய்து அவசரமாகவே நோயின் பாதிப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

எப்போதும் பரபரப்பு என்பதால் உணவு என்பது ஏதோ பசிக்காக உண்பதுபோல் ஆகிவிட்டது.  இதனால் இன்று 40 வயதைத் தாண்டினாலே ஏதோ ஒரு நோயின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் உள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.

 ஆனால் அத்தகைய செல்வம் இன்று வாழும் மக்கள் அனைவருக்குமே எட்டாக்கனியாக உள்ளது.

இந்நிலை மாற  நல்ல உணவு முறையில் சத்தான உணவுகளை உண்ணும் முறை பற்றி சித்தர்கள்கூறிய  அறிவுரைகளைக் காண்போம்.  


முதலில் உணவு உண்ணும் முறையில் தவிர்க்க வேண்டிய முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இரவில் தாமதமாக உணவு உண்பது,  

கடினமான உணவுகளை உண்பது, 

அவசர அவசரமாக உண்பது.  

பொதுவாக இரவு உணவு என்பது அரை வயிறுக்குத்தான் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும்.

இரைப்பைக்கு ஓய்வு அவசியம்.  இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உணவு செரித்துவிட்டால் அது நல்ல நித்திரைக்கு வழிவகுக்கும்.

இரவு உணவு எளிதில் சீரணக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும்.  அதிக காரம், அதிக புளிப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தயிர், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்கவேண்டும்.  கீரைகளை மதிய உணவில் சேர்ப்பது நல்லது.  ஆனால் இரவு உணவில் சேர்த்தால் செரியாமை உண்டாகும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் சுக்கு சேர்த்து அருந்த வேண்டும்.  அல்லது 5 பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து கலந்து பாலில் சாப்பிடுவது  நல்லது.

  அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது.  உணவை நன்கு  மெல்லாமல் விழுங்கவும் கூடாது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழிக்கேற்ப, உணவை  நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

உணவை மென்று சாப்பிட்டால்தான் உணவுக் குழாய் நெடுகிலும் செரிமான ரசங்கள்  சுரந்து செரிமான சக்தியை அதிகரிக்கும்.  வாயுத் தொந்தரவுகள் ஏற்படாது.  

டீ, காபி அருந்துவதைத் தவிர்த்தல் நல்லது.

தேயிலை, காபி பானங்கள் நம் நாட்டின் பழக்கமல்ல.  அவை மேலை நாடுகளின் இறக்குமதி.  நம் நாடு வெப்பமிகுந்த நாடு.  இங்கு காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானம் அருந்துவது நல்லது.  மாலையில் சுக்கு மல்லி கலந்த பானம் சிறந்தது.  இரவு கடுக்காய் கஷாயம் அருந்துவது நல்லது.   இதையே,

காலையில் இஞ்சி

கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் 

என பிரித்துக் கூறியுள்ளனர்.  இதனைக் கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையாக வாழலாம் என்றனர் சித்தர்கள்.

காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது.  பல சமையங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன.  இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலுக்கு சூட்டை அளிக்குமே தவிர, சத்துக்களைத் தருவதில்லை.



http://www.nakkheeran.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கியத்தின் வழிகாட்டி........ Empty Re: ஆரோக்கியத்தின் வழிகாட்டி........

Post by முரளிராஜா Sat Mar 08, 2014 4:31 pm

சூப்பர்  சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியத்தின் வழிகாட்டி........ Empty Re: ஆரோக்கியத்தின் வழிகாட்டி........

Post by sreemuky Sat Mar 08, 2014 5:12 pm

முடிந்தவரை பின்பற்றுவோமே...

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஆரோக்கியத்தின் வழிகாட்டி........ Empty Re: ஆரோக்கியத்தின் வழிகாட்டி........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum