Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.திருவரங்கம்,ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.திருவரங்கம்,ஈரோடு
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.திருவரங்கம்,ஈரோடு
மூலவர் : அரங்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருவரங்கம்
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி, பிரம்மோற்சவம்
தல சிறப்பு:
கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் திருவரங்கம் ஈரோடு.
பொது தகவல்:
கோயிலின் முன்புறம் மண்டபத்தோடு கூடிய தீபஸ்தம்பம் உள்ளது. அதன் அடிப்பக்கம் கருடாழ்வார், அனுமன், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
சகல பாக்கியமும் கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்து துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் உயர்ந்து காணப்படுகிறது. அதன் வழியாகச் சென்று கொடி மரம் கடந்தால், முதலில் வருவது வாத்திய மண்டபம், அடுத்து சிறியதும் பெரியதுமாக இரண்டு பலிபீடங்கள் உள்ளன. வெளி பிராகாரத்தில் தென் மேற்குப் பக்கம் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானை வணங்கிவிட்டு, அடுத்து சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர், விஷ்வக்சேனரை தரிசிக்கிறோம்.
ஆலயத்தின் பின்புறம் கமலவல்லித் தாயார் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள தாயாரை வழிபட்ட பிறகு அருகிலேயே ஆண்டாள் திருக்கல்யாண மண்டபத்தை அடையலாம். இங்கு சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கிழக்குப் பிராகாரத்தில் நான்கு சிற்பத் தூண்களோடு கூடிய ஒரு மண்டபத்தில் பெரிய திருவடிகளை வணங்கலாம். வாத்திய மண்டபத்தின் வட மேற்கில் தெற்கு நோக்கி காட்சி தரும் ஆண்டாளை வணங்கிவிட்டு கருவறை செல்கிறோம். அனந்த சயனனின் திருமுடியின் அருகில் ஸ்ரீதேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். அருகில் துவார பாலகர்களான ஜய விஜயர்களும், அபயம் அளிக்கும் நிலையில் உள்ள அவரது இடது கையில் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளனர். வலக்கையில் கதாயுதம் உள்ளது. அதன் அருகில் அரங்கநாதரை பிரதிஷ்டை செய்த துர்வாச முனிவர் காட்சி தருகிறார். உள் திருச்சுற்றில் பதினாறு தூண்களைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம், அதில் அழகிய தெய்வீகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வாத்திய மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. கருட மண்டபம் இருபத்து நான்கு அழகிய சிற்பத்தூண்களைக் கொண்டது. கருட மண்டபத்தின் பின்புறம் நர்த்தனக் கண்ணன், அனுமன் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் ஜய, விஜயர் என்ற இரு துவார பாலகர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய தூண்கள் உள்ளன. கிழக்குத் தூணில், தவழ்ந்து செல்லும் குழந்தைக் கண்ணன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய ஊஞ்சலும் உள்ளது. கருடாழ்வார் வணங்கிவிட்டு வெளி பிராகாரம் வந்தால் ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
தல வரலாறு:
கி.பி 922 ஆம் ஆண்டு, முதல் பிராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
நன்றி தினமலர்
மூலவர் : அரங்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருவரங்கம்
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி, பிரம்மோற்சவம்
தல சிறப்பு:
கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் திருவரங்கம் ஈரோடு.
பொது தகவல்:
கோயிலின் முன்புறம் மண்டபத்தோடு கூடிய தீபஸ்தம்பம் உள்ளது. அதன் அடிப்பக்கம் கருடாழ்வார், அனுமன், சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
சகல பாக்கியமும் கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்து துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் உயர்ந்து காணப்படுகிறது. அதன் வழியாகச் சென்று கொடி மரம் கடந்தால், முதலில் வருவது வாத்திய மண்டபம், அடுத்து சிறியதும் பெரியதுமாக இரண்டு பலிபீடங்கள் உள்ளன. வெளி பிராகாரத்தில் தென் மேற்குப் பக்கம் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானை வணங்கிவிட்டு, அடுத்து சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர், விஷ்வக்சேனரை தரிசிக்கிறோம்.
ஆலயத்தின் பின்புறம் கமலவல்லித் தாயார் சன்னதி அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள தாயாரை வழிபட்ட பிறகு அருகிலேயே ஆண்டாள் திருக்கல்யாண மண்டபத்தை அடையலாம். இங்கு சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கிழக்குப் பிராகாரத்தில் நான்கு சிற்பத் தூண்களோடு கூடிய ஒரு மண்டபத்தில் பெரிய திருவடிகளை வணங்கலாம். வாத்திய மண்டபத்தின் வட மேற்கில் தெற்கு நோக்கி காட்சி தரும் ஆண்டாளை வணங்கிவிட்டு கருவறை செல்கிறோம். அனந்த சயனனின் திருமுடியின் அருகில் ஸ்ரீதேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். அருகில் துவார பாலகர்களான ஜய விஜயர்களும், அபயம் அளிக்கும் நிலையில் உள்ள அவரது இடது கையில் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளனர். வலக்கையில் கதாயுதம் உள்ளது. அதன் அருகில் அரங்கநாதரை பிரதிஷ்டை செய்த துர்வாச முனிவர் காட்சி தருகிறார். உள் திருச்சுற்றில் பதினாறு தூண்களைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம், அதில் அழகிய தெய்வீகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வாத்திய மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் வேணுகோபாலர் சன்னதி உள்ளது. கருட மண்டபம் இருபத்து நான்கு அழகிய சிற்பத்தூண்களைக் கொண்டது. கருட மண்டபத்தின் பின்புறம் நர்த்தனக் கண்ணன், அனுமன் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் ஜய, விஜயர் என்ற இரு துவார பாலகர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய தூண்கள் உள்ளன. கிழக்குத் தூணில், தவழ்ந்து செல்லும் குழந்தைக் கண்ணன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய ஊஞ்சலும் உள்ளது. கருடாழ்வார் வணங்கிவிட்டு வெளி பிராகாரம் வந்தால் ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
தல வரலாறு:
கி.பி 922 ஆம் ஆண்டு, முதல் பிராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கொங்கு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் சோழர் கோயில் இதுவே.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» ஆதிதிருவரங்கம்-அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» ஆதிதிருவரங்கம்-அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|