தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விரதம் இருப்பது அவசியமா?

View previous topic View next topic Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty விரதம் இருப்பது அவசியமா?

Post by முழுமுதலோன் Wed Mar 26, 2014 10:59 am

விரதத்தை உபவாசம் என்று அழைப்பார்கள். விரதம் இருப்பதால் தெய்வீகத் தன்மை பெறலாம். "இறைவனின் அருகில் செல்கிறோம்' என்பதே உபவாசம் என்பதன் பொருளாகும்.

உபவாசத்தை மூன்று வகையாகச் சொல்லலாம். துளிநீர் கூட அருந்தாமல் பட்டினி இருப்பது; நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது; பால், பழம், வேக வைத்த பொருள் சாப்பிட்டு விரதம் இருப்பது. முதலாவது வகை மிகமிக உத்தமமானது. இது, அதிக உழைப்பில்லாமல் தொழில் செய்பவர்களுக்குப் பொருந்தும். கடுமையாக உழைப்பவர்களுக்கு இவ்வித உபவாசம் சற்று கடினமாகத் தெரியும். இரண்டு, மூன்றாவது வகை உபவாசத்தை மத்திமமாக எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பகலில் மட்டும் உண்டு விரதம் இருக்கக்கூடிய வகையும் உண்டு. சாந்த்ராயண விரதங்கள் சற்று மாறுபட்டவை. ஐயப்ப மலைக்குச் செல்பவர்கள் இருக்கும் விரதம் புலால் உண்ணாமை, பகலில் தூங்காமல் இருத்தல், எந்நேரமும் இறைநாமம் சொல்லுதல்- இப்படி வெவ்வேறு வகையில் விரத வழிமுறைகள் உண்டு. விரதம் இருக்கும் நாட்களில் இரண்டு வேளை குளிப்பது, துவைத்து தனியாக உள்ள துணிகளை அணிவது, தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமல் இருத்தல், விருந்து- கேளிக்கைகளைத் தவிர்த்தல், கோபத்தை விலக்குதல்- இப்படி பல நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

நாம் எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வத்தின் படம் அல்லது விக்கிரகம் அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது என்று சில வழிகள் உண்டு. அவ்வாறு பூஜிக்கும்போது பூர்வாங்க பூஜை, ப்ரதான பூஜை, உத்தராங்க பூஜை, புனர் பூஜை என்று வழிமுறைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்குரிய விசேஷ துதிகளைச் சொல்வதும் நன்மை தரும்.

எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறோமோ அந்தத் தெய்வத்திற்கு உரிய விசேஷ மலர்களாலும் நைவேத்தியங்களாலும் பூஜை செய்வது அதிக நன்மை தரும். சிலவற்றைத் தவிர்க்கவும் வேண்டும். உதாரணமாக விநாயகருக்குத் துளசியைத் தவிர்க்கலாம். அம்பாள், விஷ்ணு போன்றவர்களுக்கு அட்சதையால் அர்ச்சிப்பதைத் தவிர்க்கலாம். சிவபெருமானுக்கு தாழம்பூவைத் தவிர்க்கலாம். மகாலட்சுமிக்கு தும்பைப் பூவைத் தவிர்க்கலாம். விசேஷமான பூக்கள் என்று எடுத்துக்கொண்டால் பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் வாசனையுள்ள பூக்களால் அர்ச்சிப்பதும், வாசனையற்ற பூக்களைத் தவிர்ப்பதும் நல்லது.

மேலும், தரையில் விழுந்த பூ, அழுகிய பூ, மற்றவர்கள் தலையில் சூடிய பூ, மயானத்தின் அருகே மலர்ந்த பூ, செயற்கையான பூக்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பிள்ளையாருக்கு எருக்கம்பூ விசேஷமானதாகும். துளசி மகாவிஷ்ணுவுக்கு ப்ரியமானதாகும். தாமரைப்பூ மகாலட்சுமிக்கு ப்ரியமானதாகும். வில்வ தளங்கள் சிவபெருமானுக்கு விசேஷமானதாகும்.

இதேபோன்று நைவேத்தியம் என்று வரும்பொழுது விநாயகருக்கு கொழுக்கட்டை, துர்க்கைக்குத் தேன், அனுமனுக்கு வடைமாலை, விஷ்ணுவுக்கு சர்க்கரைப் பொங்கல், காளிக்கு திராட்சை ரசம், அம்பாளுக்கு சித்ரான்னங்கள், சந்தான கோபாலகிருஷ்ணருக்கு பால் பாயசம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முடிந்தவரை நம் சக்திக்கேற்ப விரதத்தையும், பூஜையையும், நைவேத்தியம் செய்வதையும் கடைப்பிடிக்கலாம்.





http://om6.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by முரளிராஜா Mon May 12, 2014 10:59 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by செந்தில் Mon May 12, 2014 6:05 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by முரளிராஜா Mon May 12, 2014 6:07 pm

செந்தில் wrote:அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில் விரதம் வேற நீங்க கிடக்கற பட்டினி வேற  லொள்ளு  லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by செந்தில் Mon May 12, 2014 6:09 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில் விரதம் வேற நீங்க கிடக்கற பட்டினி வேற  லொள்ளு  லொள்ளு

 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by முரளிராஜா Mon May 12, 2014 6:18 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by செந்தில் Mon May 12, 2014 7:01 pm

முரளிராஜா wrote:புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

 ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by நாஞ்சில் குமார் Tue May 13, 2014 3:17 pm

நல்ல தகவல். நன்றி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விரதம் இருப்பது அவசியமா? Empty Re: விரதம் இருப்பது அவசியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum