Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லாத்தூர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
நல்லாத்தூர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
நல்லாத்தூர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
மூலவர் : பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : நல்லாத்தூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருநாவுக்கரசர் (வைப்புத்தலம்)
திருவிழா:
மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம்
தல சிறப்பு:
இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர் -605 106, கடலூர் மாவட்டம்.
போன்:
+91- 413 - 269 9422, 94427 86351.
பொது தகவல்:
இங்குள்ள தல விநாயகர் சுந்தர விநாயகர். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், ருக்மிணி பாமாவுடன் வேணு கோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில், கடலூர் கலெக்டராக இருந்த பகோடா என்பவரது மகள் தனக்கு பார்வை வேண்டி இத்தல இறைவனை பூஜித்தாள். பலன் கிடைத்ததும் மிகப்பெரிய மணியை கோயிலுக்கு அளித்தாள். இந்த மணியின் ஓசை நீண்ட தூரம் கேட்கும்.
பிரார்த்தனை
கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
அம்மனின் பாதத்தின் கீழ் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
முருகனுக்கு முக்கியத்துவம்: சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனுக்கு எதிரில் தான் கொடி மரம் இருக்கிறது. கந்தசஷ்டி தான் பிரம்மோற்ஸவ விழாவாகும். இங்குள்ள சுந்தர விநாயகர் பெயருக்கேற்றாற்போல் அழகாக விளங்குகிறார். முகத்தில் பருக்கள், வடுக்கள் உள்ளவர்கள், இவருக்கு சந்தனகாப்பு செய்து வழிபடுகிறார்கள். மகா மண்டபத்தில் "கர்ண விதாயினி' என்னும் பெயரில் சரஸ்வதியைப் போல் வீணை வாசிக்கும் தோற்றத்தில் ஒரு சிற்பம் உள்ளது. இவளை வணங்கி கல்வியில் விருத்தியடையலாம். துவாரபாலகர்களை எந்தக் கோயிலிலாவது வலம் வர முடியுமா? இங்கே அப்படி ஒரு அமைப்பு இருப்பது சிறப்பு.
மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தி இங்கு அருள்பாலிக்கிறார். எனவே ஆயுள் விருத்திக்கான யாகங்களும், பூஜைகளும் நடத்தலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் "மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்' நடக்கிறது. இத்தலம் "வட திருக்கடையூர்' என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு:
பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாக பார்க்கின்ற சிவ லிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் அக்னி திகள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மூலவருக்கு கீழே நவக்கிரக யந்திரமும், வெளியே நந்தி மண்டபமும் உள்ளது. இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து பலனடைகின்றனர். பிதுர் தோஷத்துக்கும் ஏற்ற தலம் இது. ராஜகோபுரம் திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் 3 நிலை, 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது.
நன்றி தினமலர்
மூலவர் : பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : நல்லாத்தூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருநாவுக்கரசர் (வைப்புத்தலம்)
திருவிழா:
மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம்
தல சிறப்பு:
இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர் -605 106, கடலூர் மாவட்டம்.
போன்:
+91- 413 - 269 9422, 94427 86351.
பொது தகவல்:
இங்குள்ள தல விநாயகர் சுந்தர விநாயகர். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், ருக்மிணி பாமாவுடன் வேணு கோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில், கடலூர் கலெக்டராக இருந்த பகோடா என்பவரது மகள் தனக்கு பார்வை வேண்டி இத்தல இறைவனை பூஜித்தாள். பலன் கிடைத்ததும் மிகப்பெரிய மணியை கோயிலுக்கு அளித்தாள். இந்த மணியின் ஓசை நீண்ட தூரம் கேட்கும்.
பிரார்த்தனை
கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
அம்மனின் பாதத்தின் கீழ் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
முருகனுக்கு முக்கியத்துவம்: சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முருகனுக்கு எதிரில் தான் கொடி மரம் இருக்கிறது. கந்தசஷ்டி தான் பிரம்மோற்ஸவ விழாவாகும். இங்குள்ள சுந்தர விநாயகர் பெயருக்கேற்றாற்போல் அழகாக விளங்குகிறார். முகத்தில் பருக்கள், வடுக்கள் உள்ளவர்கள், இவருக்கு சந்தனகாப்பு செய்து வழிபடுகிறார்கள். மகா மண்டபத்தில் "கர்ண விதாயினி' என்னும் பெயரில் சரஸ்வதியைப் போல் வீணை வாசிக்கும் தோற்றத்தில் ஒரு சிற்பம் உள்ளது. இவளை வணங்கி கல்வியில் விருத்தியடையலாம். துவாரபாலகர்களை எந்தக் கோயிலிலாவது வலம் வர முடியுமா? இங்கே அப்படி ஒரு அமைப்பு இருப்பது சிறப்பு.
மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தி இங்கு அருள்பாலிக்கிறார். எனவே ஆயுள் விருத்திக்கான யாகங்களும், பூஜைகளும் நடத்தலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் "மகா மிருத்யுஞ்ஜய ஹோமம்' நடக்கிறது. இத்தலம் "வட திருக்கடையூர்' என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு:
பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாக பார்க்கின்ற சிவ லிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் அக்னி திகள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மூலவருக்கு கீழே நவக்கிரக யந்திரமும், வெளியே நந்தி மண்டபமும் உள்ளது. இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து பலனடைகின்றனர். பிதுர் தோஷத்துக்கும் ஏற்ற தலம் இது. ராஜகோபுரம் திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் 3 நிலை, 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நல்லாத்தூர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
நல்லதொரு தலம்.
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆண்டான்கோவில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» கண்ணங்குடி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், கடலூர்
» கண்ணங்குடி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், கடலூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|