தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இயற்கை உணவே இனிய உணவு

View previous topic View next topic Go down

இயற்கை உணவே இனிய உணவு Empty இயற்கை உணவே இனிய உணவு

Post by முழுமுதலோன் Wed Apr 09, 2014 10:13 am

இயற்கை உணவு
ஆதி மனிதனின் உணவில் பெரும்பகுதி சமைக்கப்படாத காய்களும், கிழங்குகளும், பழங்களுமாக இருந்த காரணத்தால் அவனால் நோய்கள் அதிகமின்றி வாழ முடிந்தது. செயற்கைச் சர்க்கரைப் பொருள் சிறிதுமின்றி அவன் வாழப் பெரிதும் துணை புரிந்தவை பல வகையான பழங்களே. பழங்கள் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதுடன் உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனையும் தருகின்றன. உலகெங்கும் பழங்கள் விரும்பி உண்ணப்படுகின்றன என்றாலும் மேலை நாட்டினர் பழங்களின் பயனும் திறனும் அறிந்து அவற்றைத் தங்கள் அன்றாட உணவில் இன்றியமையாத ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டுள்ளனர்.


"உணவு வகைகளில் எளிதாகச் செரிக்கப்படுவனவும், உடனடி சக்தியளிப்பனவுமான பழங்கள் தான் சிறந்தவை. தினசரி உணவில் மூன்றில் ஒரு பங்கு பழங்களாக இருப்பது நல்லது" என்று Food என்னும் தமது நூலில் ராபர்ட் மெக்காரிசன் என்னும் உணவியலார் கூறுகிறார். உடலுறுப்புகள் எளிதாகச் செயல்படச் செய்வதிலும் உடல் வனப்பைப் பாதுகாப்பதிலும், வாழ்நாட்களை உயர்த்துவதிலும் பழங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன எனவும் கூறுகிறார்.


பழங்கள் உடலுக்குச் சிறப்பான நோய் எதிர்ப்பு திறனைத் தருவதற்கு அவற்றில் மிகுந்து காணப்படுகின்ற விட்டமின் 'சி' யும், கால்ஷியமும் காரணம் ஆகும். நெல்லிக்காயும், கொய்யாப்பழமும், ஆரஞ்சுப் பழமும், தக்காளியும் நிறைந்த அளவில் விட்டமின் 'சி' யைத் தருகின்றன. மஞ்சள் நிறமுள்ள மாம்பழம் அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு, தக்காளி போன்ற பழங்களில் விட்டமின் 'சி' யுடன் பீட்டா கரோட்டின் என்னும் உயிர்ச்சத்தும் காணப்படுகிறது. இது விட்டமின் 'ஏ' யின் முன்னோடியாகும். இந்த பீட்டா கரோட்டின் மூப்படைவதைத் தாமதப்படுத்துகிறது. புற்றுநோயைத் தடுக்கிறது. ஏப்ரிக்காட், பீச் என்ற பழ வகைகளிலும் பீட்டா கரோடின் நிறைந்த அளவில் காணப்படுகிறது. கிஸ்மிஸ், அத்தி, பேரீச்சம்பழம் போன்ற உலர்ந்த பழங்களும் உடலுக்கு வலு தருவதுடன் மலம் எளிதாகக் கழியவும் உதவுகின்றன.


மனிதரது ஜீரண உறுப்புகள் எளிதில் செரிக்கவல்ல வடிவில் கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம் போன்ற கனிமப் பொருட்களும், புரதமும், மாவுச்சத்தும், நொதிப் பொருட்களும் (Enzymes) பழங்களில் அடங்கியுள்ளன. பழங்களின் சுவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி இயல்புடன் செயல்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இனிப்பு தசைக்கு வலுவும், உடனடி சக்தியும் அளிக்கிறது. புளிப்பு கொழுப்பைப் பராமரிக்கிறது. கார்ப்பு (காரம்) இரத்தத்தைப் பெருக்கி வீரியத்தை உண்டாக்குகிறது. உவர்ப்பு எலும்பை வளர்க்கிறது. துவர்ப்பு வயிற்றிலும் குடலிலும் நோய் வராது தடுக்கிறது. கைப்பு (கசப்பு) குடலைத் தூய்மைப்படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. ஆல்கலைன் வகை உப்புக்கள் பழங்களில் அதிகம் உள்ளதால் அவை இரத்தத்தைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், திரவ நிலையிலும் இருக்க உதவுகின்றன.


மேலை நாடுகளில் சில மருத்துவ மனைகளில் பழங்களைக் கொண்டே சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. தொண்டைப் புற்று நோயினால் துயருற்ற ஒருவருக்கு ஒன்றைரை ஆண்டுகள் தனி ஆரஞ்சுப்பழச்சாற்றை மட்டும் சிறுகச் சிறுகக் கொடுத்து வந்த போது வேறெந்த மருத்துவமும் இன்றி அவரது நோய் குணமானது என்று Dr. Helen Jeans என்பவர் தம்முடைய About Tropical Fruits என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.


நன்கு பழுத்த மாதுளம் பழச்சாறு உடலுக்கு வலுவும் புத்துணர்ச்சியும் தந்து செரிவுறுப்பு நோய்களைத் தீர்க்க வல்லது என்றும் இதய நோயினர்க்கு ஏற்ற இனிய உணவாகவும் பயன்படுகிறது என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதோ அது தொடர்பான ஒரு சித்தர் பாடல்.


"வாய் நீருறல், கசப்பு, வாந்தி, விக்கல் மந்தமிக
தாய் வெப்ப நெஞ்செரிவு காதடைப்பு - ஓயா
மயக்கமும் தீர்த்து விடும் மாதுளம் பழத்தால்
தயக்கமறத் தேன் மொழியே சாற்று"


உணவின் ஒரு பகுதியாகப் பழங்களை உட்கொள்வது என்ற நிலை மாறிப் பழங்களே உணவு என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தொரு சூழலில் இந்தியர்கள் தமது மூன்று வேளை உணவில் ஒரு வேளையாகிலும் பழ உணவு உட்கொள்ள முயல வேண்டும். இந்தியர்களது உணவில் கனிமச் சத்து மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் பழங்கள் உண்ண வேண்டியது கட்டாயமாகிறது. இருப்பினும் இங்கு பழங்களின் விலை ஏறுமாறாக இருப்பதால் எல்லோராலும் அவற்றை வாங்கி உண்ண முடியவில்லை என்பது நிதர்சனமான ஒரு உண்மையாகும்.


பழங்கள் என்று குறிப்பிடப்படும் போது பெரும்பான்மையான மக்கள் மனதில் தோன்றுவது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, சப்போட்டா, திராட்சை போன்ற பழங்களே மா, பலா, வாழை, கொய்யா, இலந்தை, நெல்லி, பப்பாளி போன்ற பழங்களை மறந்து விடுகிறோம். நாரத்தையும், வெள்ளரியும், பப்பாளியும், விளாம்பழமும், கொய்யாவும் இல்லையா? அதனதன் பருவகாலத்தில் அவை குறைந்த விலையில் கிடைக்கத் தானே செய்கின்றன. வாழைப்பழத்தில் (நாட்டுப் பழமும், பூவன் பழமும், பச்சை பழமும்) பல வகைகள் இங்கு பயிரிடப்பட்டு விற்பனைக்கு வருகின்றனவே. உணவகங்களில் விற்கப்படும் பிற உணவு வகைகளோடு ஒப்பிடும் போது பழங்களின் விலை இயல்பாகத்தானே உள்ளது. இனியாகிலும் இயற்கை தரும் இனிய கனிகளை உணவு என மதித்து உண்ணத் தொடங்குவோம்.


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum