Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கள் குடிக்கலாம்
Page 1 of 1 • Share
கள் குடிக்கலாம்
கள் குடிப்பதை அக்கால மக்கள் தவறாகக் கருதவில்லை என்பதை தமிழ் இலக்கியம் (நற்றிணை, புறம்) வழி அறியமுடிகிறது. தென்னங்கள், பனங்கள்ளையே அக்காலத்தில் "கள்' என்றனர் போலும். கபிலர் போன்ற புலவர்களும் அதைப் பாராட்டிப் பேசியுள்ளர். ஊர் வளத்தைப் பற்றிக் கூறும்போது கள் மிகுதியைச் சேர்த்துப் பேசியுள்ளர்.
""இன் கருங்கள்ளின் இழையணி
நெடுந்தேர்க்
கொற்றச் சோழர்'' (நற்றிணை-10)
நன்கு புளித்த கள், "தேள் கடுப்பன்ன கடுமையுடையதாகும்' எனப் பாடினர். உள்நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மது வகைகளையும் அருந்தியுள்ளனர்.
""யவனர் நன்கலம் தந்த
தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்
தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர்மடுப்ப
மகிழ்சிறந்து''
என்று புறம்-56-வது பாடல் கூறுகிறது. வள்ளல்கள் இறந்தபோது புலவர்கள் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாடல்களில் அவர்கள் இரவலர்க்குக் கள்ளை வழங்கியது பாராட்டப்படுகிறது. அதியமான், கள் குறைவாக இருந்தால் அதை ஒüவையாருக்கும், இரவலர்க்கும் கொடுப்பானாம்; தான் சிறிதும் உண்ண மாட்டானாம். மிகுதியாக இருந்தால், தானும் உண்டு புலவரின் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருப்பான் என்கிறது புறப்பாடல் 125.
உண்டாட்டு
கள் உண்டு களிக்கும் விழாவுக்கு "உண்டாட்டு' என்று பெயர். மன்னன் வீரர்களுக்குத் தன் கையால் கள் வழங்கினான் என்றும், ஒüவையார், வீரன் ஒருவனைச் சுட்டிக்காட்டி முதலில் அவனுக்குக் கள் வழங்கச் சொன்னார் என்றும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு சங்ககாலம் தொட்டு கள் உண்ணும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது.
பண்டைத் தமிழரிடம் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்கள் இன்றுள்ள தமிழரிடையே காணப்படவில்லை. ஆனால், தீய பழக்கத்தை மட்டும் தவறாமல் - விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இப்பழக்கம் பண்டை காலம்தொட்டு இருப்பதனால் நாமும் கள் அருந்தவேண்டும் என்பதில்லை. திருவள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி, மதிமயக்கும் குடியால் வரும் தீங்கைக் கூறும் "கள்ளுண்ணாமை' அதிகாரத்தைப் பலமுறை படித்து,
""துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்'' (926)
என்ற தீமைக்கு அஞ்சி வாழப் பழகுவோமாக!
தினமணி
""இன் கருங்கள்ளின் இழையணி
நெடுந்தேர்க்
கொற்றச் சோழர்'' (நற்றிணை-10)
நன்கு புளித்த கள், "தேள் கடுப்பன்ன கடுமையுடையதாகும்' எனப் பாடினர். உள்நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மது வகைகளையும் அருந்தியுள்ளனர்.
""யவனர் நன்கலம் தந்த
தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்
தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர்மடுப்ப
மகிழ்சிறந்து''
என்று புறம்-56-வது பாடல் கூறுகிறது. வள்ளல்கள் இறந்தபோது புலவர்கள் வருந்திப் பாடிய கையறு நிலைப்பாடல்களில் அவர்கள் இரவலர்க்குக் கள்ளை வழங்கியது பாராட்டப்படுகிறது. அதியமான், கள் குறைவாக இருந்தால் அதை ஒüவையாருக்கும், இரவலர்க்கும் கொடுப்பானாம்; தான் சிறிதும் உண்ண மாட்டானாம். மிகுதியாக இருந்தால், தானும் உண்டு புலவரின் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருப்பான் என்கிறது புறப்பாடல் 125.
உண்டாட்டு
கள் உண்டு களிக்கும் விழாவுக்கு "உண்டாட்டு' என்று பெயர். மன்னன் வீரர்களுக்குத் தன் கையால் கள் வழங்கினான் என்றும், ஒüவையார், வீரன் ஒருவனைச் சுட்டிக்காட்டி முதலில் அவனுக்குக் கள் வழங்கச் சொன்னார் என்றும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு சங்ககாலம் தொட்டு கள் உண்ணும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது.
பண்டைத் தமிழரிடம் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்கள் இன்றுள்ள தமிழரிடையே காணப்படவில்லை. ஆனால், தீய பழக்கத்தை மட்டும் தவறாமல் - விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இப்பழக்கம் பண்டை காலம்தொட்டு இருப்பதனால் நாமும் கள் அருந்தவேண்டும் என்பதில்லை. திருவள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி, மதிமயக்கும் குடியால் வரும் தீங்கைக் கூறும் "கள்ளுண்ணாமை' அதிகாரத்தைப் பலமுறை படித்து,
""துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்'' (926)
என்ற தீமைக்கு அஞ்சி வாழப் பழகுவோமாக!
தினமணி
Re: கள் குடிக்கலாம்
கள் குடிக்கலாம் ஆனா குடிக்கக்கூடாது..சூர்யா wrote:இப்ப நான் என்ன செய்யனும் அதை முதல்ல சொல்லுங்க
Re: கள் குடிக்கலாம்
ஜெயம் wrote:ஏன் முழிக்கிறிங்க சிவா?
நீங்க கள் குடிக்கலாம்னு சொல்லுரிங்க நான் கேரளா ல இருக்கான் இங்க கள் குடிச்சுட்டு பைக் ஓட்டுனா போலீஸ் பிடுசுக்கரங்க அந்த நேரத்துல நீங்க தான் குடிக்க சொன்னிங்கன்னு சொன்ன விட்டுடுவாங்கலான்னு யோசிச்சன் அண்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|