Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரத்த குழாய் அடைப்பிற்கு இரண்டாவது பைபாஸ் வெற்றி
Page 1 of 1 • Share
ரத்த குழாய் அடைப்பிற்கு இரண்டாவது பைபாஸ் வெற்றி
ரத்தக் குழாய் அடைப்பால் கால் பாதிப்பு 2-வது பைபாஸில் குணமான தொழிலாளி
சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சாதனை
பீடி, சிகரெட் பழக்கத்தால் கூலித் தொழிலாளியின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு சென்னை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யில் 2 பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து ரத்த ஓட்டத்தை டாக்டர்கள் சரிசெய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வர் சேகர் (49). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (42). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள னர். 2011-ம் ஆண்டு செப்டம்பரில் சேகரின் கால்களில் வலி ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் உள்ள ரத்தக் குழாய் மற்றும் அங்கிருந்து கால்களுக்கு பிரியும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. கால்களுக்கு ரத்தம் செல்லாததால், வலி ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜிப்மரில் முதல் பைபாஸ்
இதையடுத்து, அவருக்கு 2011 அக்டோபரில் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்டி ருந்த ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாயை டாக்டர்கள் பொருத்தினர். அதன் பிறகு, அவரது கால்களில் ரத்த ஓட்டம் சீரானது. வலி சரியானதால், மீண்டும் கட்டிட வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
6 மாதங்களில் மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். கால் வலியோடு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் சேகர். நாளுக்கு நாள் வலி அதிகமானதால் அதிக தூரம் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பன்னோக்கு மருத்துவமனையில்..
இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத் தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேகர் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என அவரது மனைவியிடம் தெரிவித்தனர்.
ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார், துணைத் தலைவர் டாக்டர் பக்தவச் சலம், டாக்டர் அருணகிரி, மயக்க டாக்டர்கள் ஜெயராமன், மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் புதிதாக செயற்கை ரத்தக் குழாயை பொருத்தினர். அடுத்த படியாக இடது காலில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்தனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் ஜெயக்குமார், பக்தவச்சலம் கூறியதாவது: அவருக்கு ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்ட ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாய் வைத்தனர். அதன் பிறகும் பீடி, சிகரெட் பழக்கத்தை அவர் நிறுத்தவில்லை. அதனாலேயே ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் பைபாஸ் செய்வது மிகவும் சிக்கலானது. அதை சவாலாக எடுத்து செய்தோம்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு, அவரது கால்களுக்கு ரத்த ஓட்டம் சீரானது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் நன்றாக நடக்கலாம். கால்களில் வலி இருக்காது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
பீடி, சிகரெட் பிடித்தால் புற்றுநோய் மட்டுமல்ல, ரத்தக் குழாய் அடைப்பும் ஏற்படும். இது பலருக்கு தெரிவதில்லை.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
நன்றி: தி இந்து - தமிழ் பதிப்பு
சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சாதனை
பீடி, சிகரெட் பழக்கத்தால் கூலித் தொழிலாளியின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கால்களுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு சென்னை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யில் 2 பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து ரத்த ஓட்டத்தை டாக்டர்கள் சரிசெய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வர் சேகர் (49). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (42). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள னர். 2011-ம் ஆண்டு செப்டம்பரில் சேகரின் கால்களில் வலி ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் உள்ள ரத்தக் குழாய் மற்றும் அங்கிருந்து கால்களுக்கு பிரியும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. கால்களுக்கு ரத்தம் செல்லாததால், வலி ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜிப்மரில் முதல் பைபாஸ்
இதையடுத்து, அவருக்கு 2011 அக்டோபரில் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்டி ருந்த ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாயை டாக்டர்கள் பொருத்தினர். அதன் பிறகு, அவரது கால்களில் ரத்த ஓட்டம் சீரானது. வலி சரியானதால், மீண்டும் கட்டிட வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
6 மாதங்களில் மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். கால் வலியோடு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் சேகர். நாளுக்கு நாள் வலி அதிகமானதால் அதிக தூரம் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பன்னோக்கு மருத்துவமனையில்..
இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத் தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேகர் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என அவரது மனைவியிடம் தெரிவித்தனர்.
ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார், துணைத் தலைவர் டாக்டர் பக்தவச் சலம், டாக்டர் அருணகிரி, மயக்க டாக்டர்கள் ஜெயராமன், மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் புதிதாக செயற்கை ரத்தக் குழாயை பொருத்தினர். அடுத்த படியாக இடது காலில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்தனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் ஜெயக்குமார், பக்தவச்சலம் கூறியதாவது: அவருக்கு ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு ஏற்பட்ட ரத்தக் குழாயை அகற்றிவிட்டு, செயற்கை ரத்தக் குழாய் வைத்தனர். அதன் பிறகும் பீடி, சிகரெட் பழக்கத்தை அவர் நிறுத்தவில்லை. அதனாலேயே ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் பைபாஸ் செய்வது மிகவும் சிக்கலானது. அதை சவாலாக எடுத்து செய்தோம்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு, அவரது கால்களுக்கு ரத்த ஓட்டம் சீரானது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் நன்றாக நடக்கலாம். கால்களில் வலி இருக்காது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
பீடி, சிகரெட் பிடித்தால் புற்றுநோய் மட்டுமல்ல, ரத்தக் குழாய் அடைப்பும் ஏற்படும். இது பலருக்கு தெரிவதில்லை.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
நன்றி: தி இந்து - தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ரத்த குழாய் அடைப்பு நீங்க என்ன செய்வது?
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» உணவுக் குழாய் பிரச்னைகள்
» பைபாஸ் சர்ஜரி
» ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» உணவுக் குழாய் பிரச்னைகள்
» பைபாஸ் சர்ஜரி
» ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|