Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாசிப்பை நேசித்தால் வசமாகும் வாழ்க்கை
Page 1 of 1 • Share
வாசிப்பை நேசித்தால் வசமாகும் வாழ்க்கை
இன்று உலக புத்தக தினம்
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, வாழ்க்கையை அனுபவித்து, அதன்பின், புதிய வாழ்க்கையை தொடங்க முடியுமா? ஆயிரம் எழுத்தாளர்களின் ஆக்கப்பூர்வமான தகவல்களை படித்தால், ஆயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவம் கிடைக்குமே. அடுத்தவர்களின் அனுபவங்கள் தான்... ஒவ்வொருவர் வாழ்க்கையின் அரிச்சுவடி.
எழுத்துக்கள்... நேசிக்க வைக்கும், நம்மோடு பேசும், மனதை லேசாக்கும், அறிவைத் தூண்டும், ஆழமாய் யோசிக்க வைக்கும், இதயத்தை புரட்டும், இன்னதென சொல்ல முடியாத தவிப்பை உண்டாக்கும்.வாசிப்பு தான், மனிதனை செம்மைப்படுத்தும், செழுமைப்படுத்தும். 'வாசிப்பை நேசித்தால்... வசமாகும் வாழ்க்கை' என்கின்றனர், புத்தகங்களை நேசிக்கத் தெரிந்தவர்கள். இன்று உலக புத்தக தினம். தங்களை மாற்றிய, தூண்டிய எழுத்துக்களை விவரிக்கின்றனர், இவர்கள்.
வேலையைக் காதலி
எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி (28 புத்தகங்கள் எழுதியவர்): என்னைப் பாதித்த விஷயங்களை, கருத்துக்களை, எனது எழுத்துக்களில் இடம்பெறச் செய்துவிடுவேன். எழுத்தாளர் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்பு நாவலான 'தீர்க்கதரிசி' எனக்கு ஆர்வமூட்டியது. எனது, 'கண்ணா வருவாயா' புத்தகத்தில், பகவத் கீதையைப் பற்றி, நம் கடமையைப் பற்றி, இவரது எழுத்துக்களாய் சொல்லியிருக்கிறேன். 1991ல் படித்தது, இன்னமும் நினைவிருக்கிறது. 'உன் வேலை என்பது, உன் அன்பின் வெளிப்பாடு; நீ செய்யும் வேலையை உன்னால் காதலிக்க முடியவில்லை என்றால், வேண்டாவெறுப்புடன் தான் உன்னால் வேலை செய்ய முடியும் என்றால்... உன் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, கோவில் வாசலில் அமர்ந்து, பிச்சை எடு. தன் வேலையை காதலிப்பவர் போடும் பிச்சையில், உன் வயிற்றை வளர்த்துக் கொள்; அதுவே உனக்கு சிறந்த வாழ்வு,' என்று சொல்லியிருப்பார்.இந்த வரிகளின் பாதிப்பு, என்னை எல்லா விதத்திலும் செம்மைப்படுத்தி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதில் தொடங்கி, எழுத்து, சிறு உதவி செய்வது வரை, இந்த வரிகள் தான், வாழ்க்கை வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமணம் செய்யத் தூண்டியது
பேராசிரியர் இரா.மோகன்(113 புத்தகங்கள் எழுதியவர், தொகுத்தவர்): பேராசிரியர் மு.வரதராஜன் எழுதிய 'கரித்துண்டு' நாவல், என் வாழ்க்கையை மாற்றிக் காட்டியது. தெருவில் கரித்துண்டால் ஓவியம் வரையும் சாமானியனின் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல். கதாநாயகன் பெயர் மோகன், கதாநாயகி பெயர் நிர்மலா. இரண்டு பெயர்களுமே என்னை ஆழமாக பாதித்தது. இந்த பெயருடைய பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமென, மனது உருப்போட்டது. அதையே செயல்படுத்தவும் முடிந்தது. அவர், 1972ல் மதுரைக்கு வந்தபோது, கையெழுத்து வாங்கினேன். அப்போது, 'தமிழ் உன்னை வளர்த்தது... தமிழை நீயும் வளர்க்க வேண்டும்' என்று, எழுதிக் கொடுத்தார்.இந்த இரண்டு வரிகள் தான், இன்றும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன. பழமை மட்டுமின்றி, புதுமையையும் போற்றியவர் அவர். தனது புத்தகங்களுக்கு, மாணவர்களை அணிந்துரை எழுதச் சொன்ன, புதுமைக்கு சொந்தக்காரர் அவர். தலைமுறைகளை வடிவமைக்கக்கூடிய அவரது எழுத்துக்கு, தலைவணங்குகிறேன்.
மனவிரிவு தர வேண்டும்
எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன்(165 புத்தகங்கள் எழுதியவர்): ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய 'பத்தாயிரம் மைல் பயணம்' எழுத்து தான், சமீபத்தில் படித்ததில் என்னை வியக்க வைத்தது. மனிதன் வாழ்க்கையில் பயணம் எவ்வளவு தூரத்திற்கு மேம்படுத்துகிறது. ஒரே இடத்தில் அடைந்து கிடந்தால், மனிதன் மனவிரிவு இல்லாமல் போகிறான். பயணத்தின் மூலம் மற்றவர்களின் மொழி, கலாசாரம், தொன்மையான செய்திகளை பெறமுடிகிறது என்பதை சொல்லியிருப்பார். படித்தது, கேள்விப்பட்டது, அனுபவித்தது மூன்றையும் கலந்து, புத்தகமாக்கியுள்ளார். நூறு புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள், ஒரே புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.இன்னொன்று, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'நமது இந்தியா'. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னுமான பெரும்பாலான தகவல்கள், புதியவை. இரண்டு புத்தகங்களுமே, மாணவ சமுதாயத்தை மேம்படுத்தக் கூடியவை.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வாசிப்பை நேசித்தால் வசமாகும் வாழ்க்கை
உண்மைதான் தல
ஒரு 9 வருடங்களுக்கு முன்னர் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருப்பேன். இப்ப ?
ஒரு 9 வருடங்களுக்கு முன்னர் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருப்பேன். இப்ப ?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வாசிப்பை நேசித்தால் வசமாகும் வாழ்க்கை
உண்மைதான் நல்லதொரு பகிர்வு நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ்க்கை உங்கள் வசமாகும் –
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» வாழ்க்கை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|