Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான்
Page 1 of 1 • Share
வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான்
வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள். கடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்பதில்லை. கவிமணிகூட "வெய்யிற்கேற்ற நிழலுண்டு' என்று நிழலையே போற்றிப் பாடினார். ஆனால் பாரதி மட்டும் விதிவிலக்கு. "வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை' என்கிறது பாரதியின் வசனக்கவிதையில் வருகிற ஒரு பசுமாடு.
இயற்கை நமக்குக் கொண்டுவருகிற எத்தனையோ இன்பங்களில் ஒன்று வெயில். நல்ல வெயில் வேளையான மதியப் பொழுதில் தெருக்கள் மோன நிலையில் மூழ்கி இருக்கும். மனிதர்கள் வெயிலை விரும்பாவிட்டாலும் மரங்களும் செடிகொடிகளும் அதிகமாகவே விரும்புகின்றன. வெயில் காலத்தில் வேப்ப மரமும் புங்க மரமும் பச்சை இலைகள் தளிர்த்து வெயிலோடு சேர்ந்து நிழலையும் பிரசவித்திருக்கும்.
வெயிலின்றி ஏது நிழல்?
ஒவ்வொரு மரத்தின் நிழலும் ஒவ்வொரு விதமான சுகம். ஆலமர நிழலில் படுத்துறங்க ஆசை கொள்ளாத மனிதனும் உண்டா? தூங்குமூஞ்சி மர நிழலின் குளிர்ச்சிக்கு இணையேது? வாதா மர நிழல், பூவரச மர நிழல் இவற்றுக்கெல்லாம் தனித்தனி வாசனைகூட உண்டு. இலுப்பை மரங்களின் நிழலில் நுழையும்போதே கம்மென்று இலுப்பம் பூக்களின் வாசனை நம் மூக்கைத் துளைக்கும். கண்மாய்க் கரைகளில் பனைமர நிழல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அதுவும் ஒரு கருப்பு-வெள்ளை ஒளிப்படம்போல் நம் கருத்தைக் கவரும்.
புதுமைப் பித்தன் ஒரு சிறுகதையில் பனை மரத்தடியில் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனின் மன ஓட்டம் எங்கெங்கோ சஞ்சரிப்பதை அழகாக எழுதியிருப்பார். இரண்டு பக்கமும் மரங்கள் வைத்த சாலைகள் முழுக்க நிழல் கம்பளம் விரித்திருக்க, அதன் வழியிலே பயணிப்பது பரமானந்தமாக இருக்கும். "பிரம்மாண்டமான மரங்களின் பிம்பங்கள் வெயிலுக்கேற்ப கார் கண்ணாடியில் தோன்றித் தோன்றி மறைந்தாலும் கண்ணாடி ஒன்றுமே ஆவதில்லை' என்று ஏறக்குறைய கவிதை போன்ற வரிகள் மனதில் பளிச்சிடும்.
வெயில் வேளையில் சில சமயம் எங்கிருந்தோ சின்னஞ்சிறு காற்று திடீரென வரும். உடம்புக்கு உள்ளே நுழைந்து ஆன்மாவையே தொட்டு ஆசுவாசப்படுத்தும் சக்தி, அந்த திடீர்க் காற்றுக்கு உண்டு. அப்போதெல்லாம் வெயில் காலம் வந்து விட்டால் வீடுகளில் புழுக்கத்தை போக்க விசிறிகள்தான் துணை. அழகான கைக்கடக்கமான பனை விசிறிகள். விசிறும்போது கொஞ்சமே கொஞ்சம் காற்று முகத்திலும் மார்பிலும் படும். ஆஹா...அதில் அப்படியொரு ஆனந்தம்.
உச்சி வெயிலில் கிராமத்து மாந்தோப்பு நிழலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு கிளைகளுக்கிடையே விட்டுவிட்டுத் தெரியும் வானத்தை ரசிப்பதற்காகவே கோடைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.
அப்பொதெல்லாம் வீட்டுத் திண்ணைகளில் ஒரு குடத்திலோ மண் பானையிலோ தண்ணீரும் டம்ளரும் வைத்திருப்பார்கள். வெயிலில் களைத்து வருபவர்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இப்படியோர் ஏற்பாடு.
ஆனால் பாவம், கோடையில் காக்கைக் குருவிகளின்பாடுதான் கஷ்டம். அவற்றுக்காக சின்ன சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி காம்பவுண்டு சுவர்களின் மீது வைத்து விட்டால் போதும். காக்கைக்கும் குருவிக்கும் தாகம் தணிந்துபோகும்.
வெகு நாள்களுக்கு முன் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. பேருந்து ஓட்டுநர் ஒருவர் நாள்தோறும் நெடுஞ்சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அருகில் தனியாக இருக்கும் ஒரு குடிசைக்குள் சென்று வருவார். காரணம் புரியாமல் விசாரித்ததில் கிடைத்த தகவல், அந்த குடிசைக்குள் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் இருக்கிறார். ஒரு தடவை பேருந்து அந்த இடத்தில் பழுதாகி நின்றபோது ஓட்டுநர் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தபோது பாட்டி தண்ணீர் வேண்டும் என்று சைகை காட்டி இருக்கிறார். ஓட்டுநர் ஒரு தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த நாளும் தண்ணீர் கொடுக்க அதுவே பழக்கமாகி விட்டது.
எப்போதோ தஞ்சாவூர் வீதியில் நான் கண்ட ஒரு காட்சி: நல்ல உச்சி வேளையில் வெயிலைப் பொருள்படுத்தாமல் காவி உடையும் தலையில் முண்டாசுமாக அன்பர் ஒருவர் சைக்கிளில் செல்கிறார். அவர் கையில் ஒரு விசிறி. வழியில் அடிக்கடி இறங்கி வெயிலில் நின்று கொண்டிருப்போரின் அருகே சென்று அவர்களுக்கு அன்பாக விசிறி விடுகிறார். காற்று வாங்குபவர்களின் முகத்தில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் நிம்மதியும்.
நான் அவரை வியப்புடன் பார்க்க, சிரித்தபடி எனக்கும் கொஞ்சம் விசிறிவிட்டுப் போனார். கோடையிலே இளைப்பாற குளிர்நிழல் தருவது மரங்கள் மட்டுமல்ல; இவரைப் போன்ற மனிதர்களும்தானே!
- By தஞ்சாவூர்க் கவிராயர்
நன்றி: தினமணி
இயற்கை நமக்குக் கொண்டுவருகிற எத்தனையோ இன்பங்களில் ஒன்று வெயில். நல்ல வெயில் வேளையான மதியப் பொழுதில் தெருக்கள் மோன நிலையில் மூழ்கி இருக்கும். மனிதர்கள் வெயிலை விரும்பாவிட்டாலும் மரங்களும் செடிகொடிகளும் அதிகமாகவே விரும்புகின்றன. வெயில் காலத்தில் வேப்ப மரமும் புங்க மரமும் பச்சை இலைகள் தளிர்த்து வெயிலோடு சேர்ந்து நிழலையும் பிரசவித்திருக்கும்.
வெயிலின்றி ஏது நிழல்?
ஒவ்வொரு மரத்தின் நிழலும் ஒவ்வொரு விதமான சுகம். ஆலமர நிழலில் படுத்துறங்க ஆசை கொள்ளாத மனிதனும் உண்டா? தூங்குமூஞ்சி மர நிழலின் குளிர்ச்சிக்கு இணையேது? வாதா மர நிழல், பூவரச மர நிழல் இவற்றுக்கெல்லாம் தனித்தனி வாசனைகூட உண்டு. இலுப்பை மரங்களின் நிழலில் நுழையும்போதே கம்மென்று இலுப்பம் பூக்களின் வாசனை நம் மூக்கைத் துளைக்கும். கண்மாய்க் கரைகளில் பனைமர நிழல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அதுவும் ஒரு கருப்பு-வெள்ளை ஒளிப்படம்போல் நம் கருத்தைக் கவரும்.
புதுமைப் பித்தன் ஒரு சிறுகதையில் பனை மரத்தடியில் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனின் மன ஓட்டம் எங்கெங்கோ சஞ்சரிப்பதை அழகாக எழுதியிருப்பார். இரண்டு பக்கமும் மரங்கள் வைத்த சாலைகள் முழுக்க நிழல் கம்பளம் விரித்திருக்க, அதன் வழியிலே பயணிப்பது பரமானந்தமாக இருக்கும். "பிரம்மாண்டமான மரங்களின் பிம்பங்கள் வெயிலுக்கேற்ப கார் கண்ணாடியில் தோன்றித் தோன்றி மறைந்தாலும் கண்ணாடி ஒன்றுமே ஆவதில்லை' என்று ஏறக்குறைய கவிதை போன்ற வரிகள் மனதில் பளிச்சிடும்.
வெயில் வேளையில் சில சமயம் எங்கிருந்தோ சின்னஞ்சிறு காற்று திடீரென வரும். உடம்புக்கு உள்ளே நுழைந்து ஆன்மாவையே தொட்டு ஆசுவாசப்படுத்தும் சக்தி, அந்த திடீர்க் காற்றுக்கு உண்டு. அப்போதெல்லாம் வெயில் காலம் வந்து விட்டால் வீடுகளில் புழுக்கத்தை போக்க விசிறிகள்தான் துணை. அழகான கைக்கடக்கமான பனை விசிறிகள். விசிறும்போது கொஞ்சமே கொஞ்சம் காற்று முகத்திலும் மார்பிலும் படும். ஆஹா...அதில் அப்படியொரு ஆனந்தம்.
உச்சி வெயிலில் கிராமத்து மாந்தோப்பு நிழலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு கிளைகளுக்கிடையே விட்டுவிட்டுத் தெரியும் வானத்தை ரசிப்பதற்காகவே கோடைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.
அப்பொதெல்லாம் வீட்டுத் திண்ணைகளில் ஒரு குடத்திலோ மண் பானையிலோ தண்ணீரும் டம்ளரும் வைத்திருப்பார்கள். வெயிலில் களைத்து வருபவர்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இப்படியோர் ஏற்பாடு.
ஆனால் பாவம், கோடையில் காக்கைக் குருவிகளின்பாடுதான் கஷ்டம். அவற்றுக்காக சின்ன சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி காம்பவுண்டு சுவர்களின் மீது வைத்து விட்டால் போதும். காக்கைக்கும் குருவிக்கும் தாகம் தணிந்துபோகும்.
வெகு நாள்களுக்கு முன் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. பேருந்து ஓட்டுநர் ஒருவர் நாள்தோறும் நெடுஞ்சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அருகில் தனியாக இருக்கும் ஒரு குடிசைக்குள் சென்று வருவார். காரணம் புரியாமல் விசாரித்ததில் கிடைத்த தகவல், அந்த குடிசைக்குள் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் இருக்கிறார். ஒரு தடவை பேருந்து அந்த இடத்தில் பழுதாகி நின்றபோது ஓட்டுநர் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தபோது பாட்டி தண்ணீர் வேண்டும் என்று சைகை காட்டி இருக்கிறார். ஓட்டுநர் ஒரு தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த நாளும் தண்ணீர் கொடுக்க அதுவே பழக்கமாகி விட்டது.
எப்போதோ தஞ்சாவூர் வீதியில் நான் கண்ட ஒரு காட்சி: நல்ல உச்சி வேளையில் வெயிலைப் பொருள்படுத்தாமல் காவி உடையும் தலையில் முண்டாசுமாக அன்பர் ஒருவர் சைக்கிளில் செல்கிறார். அவர் கையில் ஒரு விசிறி. வழியில் அடிக்கடி இறங்கி வெயிலில் நின்று கொண்டிருப்போரின் அருகே சென்று அவர்களுக்கு அன்பாக விசிறி விடுகிறார். காற்று வாங்குபவர்களின் முகத்தில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் நிம்மதியும்.
நான் அவரை வியப்புடன் பார்க்க, சிரித்தபடி எனக்கும் கொஞ்சம் விசிறிவிட்டுப் போனார். கோடையிலே இளைப்பாற குளிர்நிழல் தருவது மரங்கள் மட்டுமல்ல; இவரைப் போன்ற மனிதர்களும்தானே!
- By தஞ்சாவூர்க் கவிராயர்
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான்
தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்...
Similar topics
» எப்போதுமே நாம் விலைமதிப்பற்றவர்கள்
» எப்போதுமே சிரிப்புதான் !!!!!
» வேண்டாத 4
» வேண்டாத 4......
» எப்போதுமே இளமை வேண்டுமா? ‘கறிவேப்பிலை’ சாப்பிடுங்கள்
» எப்போதுமே சிரிப்புதான் !!!!!
» வேண்டாத 4
» வேண்டாத 4......
» எப்போதுமே இளமை வேண்டுமா? ‘கறிவேப்பிலை’ சாப்பிடுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|