தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

View previous topic View next topic Go down

ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம். Empty ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

Post by நாஞ்சில் குமார் Fri Apr 25, 2014 10:33 pm

பழைய சினிமா ஒன்றில், ‘‘எதிர்காலம் எங்கள் கையில் இந்த தேசம் எங்கள் பையில்’’ என்று இளைஞர்கள் பாடுவதுபோல ஒரு பாடல் வரும். அது இவ்வளவு ஆண்டுகள் நிறைவேறியதோ இல்லையோ, இந்த தேர்தலில் நிச்சயமாக நிறைவேறப்போகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்போது நடந்த தேர்தல் முடிவுகள் 40 வயதுக்கு குறைந்தவர்கள் கையில்தான் இருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 2009 தேர்தலைவிட அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 2009 தேர்தலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரத்து 460 ஆகும். ஆனால் இந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 ஆக உயர்ந்து இருக்கிறது. ஆக ஒரு கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள் ஆகும். வாக்குப்போட்ட வாக்காளர்களில் 24.48 சதவீதம் பேர்கள் இந்த புதிய வாக்காளர்கள்தான். நாம் இந்த முறை கண்டிப்பாக தேர்தலில் ஓட்டுபோட வேண்டும். இது நமது ஜனநாயக கடமை. ஓட்டுப்போடுவது என்பது நமது உரிமை. இதை தவற விடக்கூடாது என்ற உணர்வில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கவும், அதில் இடம் பெற்றுள்ளோமா என்பதை உறுதிப்படுத்துவதிலும் இன்றைய இளைஞர் சமுதாயம் மேற்கொண்ட ஆர்வத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த முயற்சியில் வீடு வீடாக வந்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை சேர்க்க கடமை உணர்வோடு பணியாற்றிய தேர்தல் கமிஷனையும், இந்த பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். மொத்த வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 473 ஆகும். இதுபோல 20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சத்து 53 ஆயிரத்து 469 ஆகும். மேலும் 30 வயது முதல் 39 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 38 ஆயிரத்து 10 ஆகும். எனவே இந்த தேர்தலின் முடிவுகள் நிச்சயமாக 40 வயதுக்கு குறைவான மக்கள், யாருக்கு ஓட்டுப் போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்பதில் ஐயமேயில்லை.

இவர்களில் 30 வயதுக்கு குறைந்தவர்களின் சிந்தனை என்பது தனிப்பாதையில்தான் செல்கிறது. இவர்களை இலவசங்களாலோ, வாக்குறுதிகளாலோ ஏமாற்றிவிட முடியாது.  இவர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. எல்லா கட்சிகளும் இளைஞர்களின் ஓட்டுக்கள் எங்களுக்குத்தான் என்று சொன்னாலும் யாருக்கு அவர்கள் ஓட்டுப்போட்டார்கள் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும். ஆனால் 18 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் மிக ஆர்வமாக தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினரையே அழைத்துக்கொண்டு வந்து அதிகாலையிலேயே கியூவில் நின்று ஓட்டுப்போட்டதைப் பார்க்கும்போது, நிச்சயமாக ஜனநாயகம் இந்த இளைய சமுதாயத்தால் தழைக்கும், வாழும், வளரும் என்ற புதிய நம்பிக்கை உருவாகி இருக்கிறது. இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட முடிவு செய்து இருந்தார்களோ அவர்களுக்கே தங்கள் குடும்பத்தினரும் ஓட்டுப்போட வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வெளியே தெரியாமல் ஒரு அமைதி பிரசாரத்தையும் மேற்கொண்டார்கள். முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சொல்வார்கள். அதை ஏற்றுதான் குடும்பம் முழுவதும் ஓட்டு போட்டது. ஆனால் இந்த முறை ஏராளமான குடும்பங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தை விட அந்த வீட்டு இளைஞர்களும், இளம் பெண்களுமான புதிய தலைமுறையின் பிரசாரம்தான் மேலோங்கி இருந்தது. அவர்களின் பிரசார தாக்கம்தான் குடும்பம் முழுவதும் எதிரொலித்தது. மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கான ஒரு புதிய உற்சாகம், உத்வேகம் இருந்ததை பார்க்க முடிந்தது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தேர்தல் மிக அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நடந்ததற்காக  ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம். Empty Re: ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

Post by செந்தில் Mon Apr 28, 2014 8:28 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இது எங்கே போய் முடியுமோ? ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய பகிர்வு
» ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum