Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
Page 1 of 1 • Share
வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை எளிதில் கற்கக் கூடிய திறன் பலரிடம் இருக்கும். எனவே, . வயதான பெண்களும், ஓய்வு பெற்றவர்களும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும், இருக்கின்ற மிச்ச காலத்தை பிறருக்கு பயன்படும் வகையிலும், ஓய்வுக்குப் பின்னும் எளிய முறையில் சம்பாதிக்கக் கூடிய வகையிலும் மாற்றிக்கொள்ள முடியும்.
தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் ஹிந்தி மொழி செல்வாக்குடன் விளங்குகிறது. தமிழகத்திலும் ஹிந்தி மொழி கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹிந்தி மொழி கற்பதன் மூலம் வீட்டில் இருந்து மாணவ, மாணவியருக்கு டியூஷன் எடுக்கலாம். ஹிந்தி கற்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் டியூஷன் சென்டர் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடியும். வட மாநிலத்தவர் வைத்துள்ள வியாபார ஸ்தலங்களில் ஹிந்தி கற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்கின்றனர்.
ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் வயதான காலத்தில் கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் சுயமாக சம்பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்றுக் கொடுக்கக் கூட நேரமின்றி தவிக்கின்றனர். பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலமாக ஆசிரியரை நியமித்து, தாய் மொழியை கற்றுக் கொடுத்து வருகின்றனர். எனவே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி என எந்த மொழியை கற்றுக் கொள்ள விருப்பம் கொள்கிறோமோ அந்த மொழி சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு, ஆன்-லைன் மூலமாக அவர்களின் தாய் மொழியை கற்றுக் கொடுத்து, மாதந்தோறும் வருவாய் ஈட்ட முடியும். பணத்தேவை இல்லை என்கிற முதியவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொண்டு, தங்களது பேரக் குழந்தைகளுக்கு புதிய மொழியை கற்றுக் கொடுத்த பெருமை கொள்ளலாம்.
பி.பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகள் படிக்க வயது உச்சவரம்பு கிடையாது. எனவே, இதுபோன்ற படிப்பை படிப்பதன் மூலம் ஓய்வுக்கு பின்னும் பணி வாய்ப்பு பெறலாம். சில தனியார் வங்கிகள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பி.காம்., எம்.பி.ஏ. முடித்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. எனவே, பிளஸ் 2 முடித்த முதியவர்கள் தொலைதூரக் கல்வி மூலம், இப்படிப்புகளை படித்து தேறலாம். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அரசு தேர்வில், பட்டப்படிப்பு படித்தவர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.. எனவே, வயதாகிவிட்டது என்ற கவலையை விட்டு பட்டப்படிப்பு படித்து, புதிய வேலையை தேடிக் கொள்ளலாம்.
வீட்டில் உள்ள வயதான அம்மணிகள் கேட்டரிங் கோர்ஸ் படிக்கலாம். 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான கேட்டரிங் கோர்ஸ் படித்து முடிப்பதன் மூலம் சுயமாக உணவு விடுதி வைக்கவும், ஆர்டர் எடுத்து சமையல் செய்து கொடுக்கவும் இயலும். அதேபோல, இன்டீரியர் டெக்கரேஷன் கோர்ஸ் முடிப்பவர்கள், வீடுகளின் முகப்பு முதல் உள் அலங்காரம் வரையிலான ஆலோசனையை வழங்கலாம்; பணியாளரைக் கொண்டு இன்டீரியர் டெக்கரேஷன் பணியையும் மேற்கொள்ளலாம். எனவே, வயது முதிர்வை புறம் தள்ளி வைத்துவிட்டு, சம்பாதிக்க தேவையான ஆயிரம் வழிகளில் ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.
- கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
நன்றி: தி இந்து
தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் ஹிந்தி மொழி செல்வாக்குடன் விளங்குகிறது. தமிழகத்திலும் ஹிந்தி மொழி கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹிந்தி மொழி கற்பதன் மூலம் வீட்டில் இருந்து மாணவ, மாணவியருக்கு டியூஷன் எடுக்கலாம். ஹிந்தி கற்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் டியூஷன் சென்டர் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடியும். வட மாநிலத்தவர் வைத்துள்ள வியாபார ஸ்தலங்களில் ஹிந்தி கற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்கின்றனர்.
ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் வயதான காலத்தில் கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் சுயமாக சம்பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்றுக் கொடுக்கக் கூட நேரமின்றி தவிக்கின்றனர். பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலமாக ஆசிரியரை நியமித்து, தாய் மொழியை கற்றுக் கொடுத்து வருகின்றனர். எனவே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி என எந்த மொழியை கற்றுக் கொள்ள விருப்பம் கொள்கிறோமோ அந்த மொழி சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு, ஆன்-லைன் மூலமாக அவர்களின் தாய் மொழியை கற்றுக் கொடுத்து, மாதந்தோறும் வருவாய் ஈட்ட முடியும். பணத்தேவை இல்லை என்கிற முதியவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொண்டு, தங்களது பேரக் குழந்தைகளுக்கு புதிய மொழியை கற்றுக் கொடுத்த பெருமை கொள்ளலாம்.
பி.பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகள் படிக்க வயது உச்சவரம்பு கிடையாது. எனவே, இதுபோன்ற படிப்பை படிப்பதன் மூலம் ஓய்வுக்கு பின்னும் பணி வாய்ப்பு பெறலாம். சில தனியார் வங்கிகள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பி.காம்., எம்.பி.ஏ. முடித்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. எனவே, பிளஸ் 2 முடித்த முதியவர்கள் தொலைதூரக் கல்வி மூலம், இப்படிப்புகளை படித்து தேறலாம். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அரசு தேர்வில், பட்டப்படிப்பு படித்தவர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.. எனவே, வயதாகிவிட்டது என்ற கவலையை விட்டு பட்டப்படிப்பு படித்து, புதிய வேலையை தேடிக் கொள்ளலாம்.
வீட்டில் உள்ள வயதான அம்மணிகள் கேட்டரிங் கோர்ஸ் படிக்கலாம். 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான கேட்டரிங் கோர்ஸ் படித்து முடிப்பதன் மூலம் சுயமாக உணவு விடுதி வைக்கவும், ஆர்டர் எடுத்து சமையல் செய்து கொடுக்கவும் இயலும். அதேபோல, இன்டீரியர் டெக்கரேஷன் கோர்ஸ் முடிப்பவர்கள், வீடுகளின் முகப்பு முதல் உள் அலங்காரம் வரையிலான ஆலோசனையை வழங்கலாம்; பணியாளரைக் கொண்டு இன்டீரியர் டெக்கரேஷன் பணியையும் மேற்கொள்ளலாம். எனவே, வயது முதிர்வை புறம் தள்ளி வைத்துவிட்டு, சம்பாதிக்க தேவையான ஆயிரம் வழிகளில் ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.
- கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
உபயோகமான தகவல்கள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
இன்மேலாது முடங்கி கிடக்காதிங்கசெந்தில் wrote: உபயோகமான தகவல்கள்
Similar topics
» வயதை விட தகுதியே காரணம்..
» அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்
» மூலையில் கிடக்கும் மூளைகள்
» குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?
» காதல் என்பது பட்டம் விடுவது போல் ...
» அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்
» மூலையில் கிடக்கும் மூளைகள்
» குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?
» காதல் என்பது பட்டம் விடுவது போல் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|