தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம்

View previous topic View next topic Go down

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் Empty ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம்

Post by நாஞ்சில் குமார் Fri May 09, 2014 8:55 pm


யதுலால் மல்லிக் என்பவரின் தோட்ட வீடு தட்சிணேசுவரக் கோயிலுக்குத் தெற்கே அமைந்திருந்தது. உலவுவதற்காக அவ்வப்போது குருதேவர் அங்கு சென்று வருவதுண்டு. குருதேவரை முதன்முறை பார்த்ததிலிருந்தே, யதுலாலுக்கும் அவரது தாய்க்கும் அவர் மீது மிகுந்த பக்தி உண்டாயிற்று. அதனால் அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாதபோதுகூட, குருதேவர் சென்றால் வேலைக்காரர்கள் வரவேற்பறையைத் திறந்து அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்வார்கள்.

வரவேற்பறையின் சுவரில் அழகிய சித்திரங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, குழந்தை ஏசு தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் காட்சி. ஒருநாள் குருதேவர் அந்தச் சித்திரத்தைக் கூர்ந்து நோக்கியவாறே, ஏசுவின் சீரிய வாழ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்தச் சித்திரம் உயிர்பெற்று ஒளிர்வது போலாயிற்று. சித்திரத்திலிருந்த அந்த அற்புத அன்னை, பிள்ளை இருவரின் உடலிலிருந்தும் ஒளிக்கதிர்கள் வெளிவந்து குருதேவருள் புகுந்து அவரது மனபாவனையை அடியோடு மாற்றிவிட்டது.

பிறப்பிலிருந்து தமது உள்ளத்தில் பதிந்திருந்த இந்து நெறிமுறைகள் அனைத்தும் உள்ளத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு, வேறான ஏதோ நியமங்கள் மனத்துள் உதயமாவதை அவர் உணர்ந்தார். அவற்றைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றார். இயலாத நிலையில் அன்னையிடம், அம்மா, என்ன ? என்று கதறினார். எந்தப் பயனும் இல்லை, வேறுபட்ட அந்த எண்ண அலைகள் தீவிர வேகத்துடன் எழுந்து இந்து நியமங்களை உள்ளத்திலிருந்து ஒரேயடியாக அகற்றிவிட்டன.

இதன்பலனாக, இந்து தெய்வங்கள் மீது அவருக்கிருந்த அன்பும் பக்தியும் எங்கேயோ மறைந்து ஏசுவிடமும் அவர் காட்டிய நெறியிலும் ஆழ்ந்த நம்பிக்கையும் மதிப்பும் தோன்றின. தேவாலயத்தில் ஏசுவின் திருவுருவின் முன் கிறிஸ்தவப் பாதிரிகள் தூபமும் மெழுகுவர்த்தியும் சமர்ப்பிப்பதும் மனமுருகிப் பிரார்த்தனை செய்வதும் அவர் கண்முன் தோன்றின.

தட்சிணேசுவரக் கோயிலுக்குத் திரும்பிவந்த பின்னரும் குருதேவரின் மனம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. கோயிலுக்குச் சென்று அன்னை காளியைப் பார்ப்பதைக்கூட அடியோடு மறந்துவிட்டார். அந்தப் புதிய பாவனை அலைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அவரை ஆட்கொண்டிருந்தன. மூன்றாவது நாள் பஞ்சவடியில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணைக் கவர்கின்ற வெண்ணிறம் கொண்ட அற்புதமான தேவ மனிதர் ஒருவர் தம்மை உற்று நோக்கியபடி வருவதைக் கண்டார். அவரைப் பார்த்தவுடன் அவர் ஓர் அன்னிய நாட்டினர், அன்னிய இனத்தினர் என்பதை அறிந்துகொண்டார் சாந்தம், குடிகொண்டிருந்த அந்த தேவமனிதரின் கண்கள் அவருக்குச் சிறப்பான அழகைக் கொடுத்தன. மூக்கு சிறிது தட்டையாக இருந்தபோதிலும், அது அவரது அழகை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அமைதியான அவரது முகத்தில் மிளிர்ந்த தெய்வீக ஒளியால் கவரப்பட்ட குருதேவர் அவர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தார். அந்தத் தேவமனிதர் அதற்குள் குருதேவரை நெருங்கிவிட்டிருந்தார். அப்போது குருதேவரின் உள்ளம் ஏசு கிறிஸ்து, மனித குலத்தின் துயரைத் தீர்ப்பதற்காக தனது இதயத்தின் உதிரத்தைச் சொரிந்தாரோ மனித குலம் இழைத்த இன்னல்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டாரோ அந்த இறைமகன், உயர்ந்த ஃயோகி, அன்பு வடிவமான ஏசு கிறிஸ்து என்று கூவியது. ஏசு கிறிஸ்துவும் குருதேவரை நெருங்கி வந்து அவரைத் தழுவியபடியே அவர் உடலினுள் கலந்துவிட்டார். பரவச நிலையை அடைந்த குருதேவர் புற நினைவிழந்த நிலையில் சகுண பிரம்மத்தில் ஒன்றிவிட்டார்! இவ்வாறு ஏசுவின் காட்சி பெற்ற குருதேவர் அவர் ஓர் அவதார புருஷர் என்பதில் ஐயம் நீங்கப் பெற்றார்.

நூல் : பகவான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும்

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் Empty Re: ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம்

Post by rammalar Fri May 09, 2014 9:43 pm

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் 2dgmefq
-


ராமகிருஷ்ண பரமஹம்சர் ஏசுவின்மீதும்
நபிகள் நாயகத்தின் மீதும் பேரன்பு
கொண்டவர்.
-
இருவர் மீதும் தியானம் செய்தவர்.
மரியையின் கையில் குழந்தை ஏசு இருக்கும்
ஒரு படத்தை ஒருமுறை பார்த்தவுடனே
பரவச நிலையை அவர் எட்டியதாக ஒரு
சம்பவம் உண்டு.
-
ஏசுவையும் நபிகள் நாயகத்தையும் தான்
கனவில் கண்டதாக ராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.
-
அதில் ஏசுவைப் பற்றி வருணிக்கும்போது ஏசுவின்
மூக்கு தட்டையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்!

-
இந்த நிகழ்வை மிகைப்படுத்தி காளிதேவியை
வழிபடுவதை கூட மறக்கும் நிலைக்கு அவர்
தள்ளப்பட்டார் என கூறியிருப்பது நகைப்புக்கு
இடமளிக்கும் கருத்தாக உள்ளது

-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum