தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோபம் வேண்டாமே ...

View previous topic View next topic Go down

கோபம் வேண்டாமே ... Empty கோபம் வேண்டாமே ...

Post by முழுமுதலோன் Sun May 11, 2014 11:09 am

மனிதர்களாய் பிறந்த எல்லோருக்கும்  கோபம் வருவது வழமை . கோபப்படுவது மனித இயல்பு . நாம் கோபப்படும் போது என்ன பேசுகிறோம் என்று தெரிவதில்லை . இந்த நரம்பில்லாத நாக்கினால் ஏதாவது இடக்குமடக்காக பேசி விடுகின்றோம் . அதற்க்கு பின்பு தான் நாம் இப்படி பேசி விட்டோமே என சிந்திக்கின்றோம் .

நாம் எண்ணியது நடக்காவிட்டால் , சொல்வதை யாராவது கேட்காவிட்டால்   நமக்கு   கோபம்  வருகிறது . கோபம் தற்காலிக உணர்வு என்றாலும் அந்த நேரத்தில் செயற்பாடுகளை நாம் உணர்வதில்லை .

  கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். எதனை பேசுவது என்று அவனுக்கு புரிவதில்லை இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

ஒருவரை மற்றவர்களிடத்து அந்நியப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று கோபம் ஆகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன
 
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சி பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.

கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

அதிக கோபம் எமக்கு வரும்போது அதிக அளவு இரத்தத்தை இருதயம் பம் பண்ண வேண்டிஉள்ளது . இந்த கோபத்தால் மனமும், உடலும் தான் கெட்டு போகிறது .இந்த கோபத்தால் பணம் , பதவி, மரியாதை எல்லாமே போய் விடுகிறது .

நாம் சொல்வதை மற்றவர்கள்  மதிக்காத போதும் , நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போதும் , நாம் சொல்வது  தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போதும் , எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போதும் எமக்கு கோபம் வருகின்றது .

கோபத்தால் நாம் பல நோய்களுக்கும் ஆளாக வேண்டி  உள்ளது  .கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இதனால் மாரடைப்பு உண்டாகும் . இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு முதல் காரணம் கோபம் தான் .

சிலருக்கு கோபம் வந்தால் கையில் எது கிடைக்குதோ அதனால் எடுத்து எறிந்து விடுவார்கள் . அது கத்தியோ, மரக்குத்தியோ எதுவாக இருந்தாலும் சரி அதனால் எடுத்து அடிப்பார்கள் அல்லது எறிவார்கள். 


இந்த கோபம் வந்தால் நாம் எப்பிடி அடக்குவது ? அல்லது என்னதான் செய்யலாம் இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு  என யோசிக்கிறீர்களா அதற்க்கும் பலவழிகள் உண்டு .

தண்ணீர் குடியுங்கள் .

அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள் .

பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள் .
 
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலை படுத்துங்கள்.

கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். 

மெளனமாக இருங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள் . 

எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணுங்கள் .

முகத்தை கழுவுங்கள். அல்லது  குளியுங்கள் .
 
சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடவுங்கள் . நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள் .

இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம் .இவற்றில் ஒன்றை கடைப்பிடியுங்கள் . உங்கள் வாழ்வில் என்றுமே சந்தோசம் தான் நிலைத்து நிற்கும் . எதிலும் வெற்றி தான் 




http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கோபம் வேண்டாமே ... Empty Re: கோபம் வேண்டாமே ...

Post by நாஞ்சில் குமார் Sun May 11, 2014 4:26 pm

அற்புதமான பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கோபம் வேண்டாமே ... Empty Re: கோபம் வேண்டாமே ...

Post by முரளிராஜா Mon May 12, 2014 2:48 pm

கோபத்தை அடக்குவதை விட 
கோபம் வராமல் மனநிலையை மாற்றி கொள்வதே நல்லது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோபம் வேண்டாமே ... Empty Re: கோபம் வேண்டாமே ...

Post by ரானுஜா Mon May 12, 2014 3:52 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கோபம் வேண்டாமே ... Empty Re: கோபம் வேண்டாமே ...

Post by செந்தில் Mon May 12, 2014 7:00 pm

முரளிராஜா wrote:கோபத்தை அடக்குவதை விட 
கோபம் வராமல் மனநிலையை மாற்றி கொள்வதே நல்லது
எவ்வளவு அடித்தாலும் கோபப்படாமல் சிரிக்குற உங்க பொறுமை யாருக்கு வரும்!

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கோபம் வேண்டாமே ... Empty Re: கோபம் வேண்டாமே ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum