Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சல்யூட் பிரியா ஷேம்வாலுக்கு...
Page 1 of 1 • Share
சல்யூட் பிரியா ஷேம்வாலுக்கு...
நாட்டிற்காக எதிரியுடன் நடைபெற்ற சண்டையில் இறந்து போன இளம் ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர், கணவர் இறந்த இரண்டு வருடங்களில் கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டு அவரும் ஒரு ராணுவ அதிகாரியாகி இருக்கிறார். நடந்த சோகங்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியும் ராணுவ அதிகாரியாகி இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறையாகும்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த விழாவில் ராணுவ உடையுடன் மிடுக்கான நடையுடன் நடந்து சென்று பட்டமும், பாராட்டும் பெற்ற அந்த வைராக்கிய பெண்மணியின் பெயர் பிரியா ஷேம்வால்.
உத்ரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர், கல்லுாரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது அமீத் ஷர்மா என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். அமீத் ஷர்மா ராணுவத்தில் ராஜபுத்திர பிரிவின் தலைவராக இருந்தார். திருமணத்தால் நின்று போன படிப்பை தொடர்வதற்கு கணவர் கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகம் காரணமாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்துவிட்டு டேராடூனிலேயே கோச்சிங் கல்லுாரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். 2006ல் நடந்த இவர்களது திருமணம் காரணமாக இவர்களுக்கு குவைசா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. எல்லாம் நல்லபடியாக சந்தோஷமாக அமைதியாக போய்க் கொண்டிருந்தது இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லை பகுதியில் எதிரிகளோடு நடைபெற்ற சண்டையில் இளம் அதிகாரியான அமீத் ஷர்மா இறந்து போனார். அப்போது பிரியா ஷேம்வாலுக்கு வயது 24 தான்.
துக்கம் விசாரிக்க வந்த ராணுவஅதிகாரி, பிரியா விரும்பினால் ராணுவத்திற்கு அவரது சேவையை வழங்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்.
கணவரை காவு வாங்கிய ராணுவத்திலேயே இவரும் சேரமாட்டார்; வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக வளர்ந்துவரும் குழந்தையை பிரிந்து வாழ ஒப்புக்கொள்ள மாட்டார்; கணவரது பென்ஷனை வாங்கிக் கொண்டு ஆசிரியர் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியான வாழ்க்கையை தொடரவே பிரியா விரும்புவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் கணவரை இழந்து கொஞ்ச நாள் கூட ஆகாத நிலையில் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்பதால் இதைப்பற்றி யாருமே அவரிடம் பேசவே தயங்கினர்.
ஆனால் பிரியா தெளிவாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுத்தார் தானும் ராணுவத்தில் சேரவேண்டும் என்று. இதற்கு முக்கிய காரணம் கொஞ்ச காலமே வாழ்ந்தாலும் கணவர் நிறைய பேசியது ராணுவத்தை பற்றிதான். நாட்டுக்காக வேலை செய்வது என்பது எவ்வளவு புனிதமான பணி என்று அடிக்கடி பெருமைப்பட்டு கொள்வராம். இதை எல்லாம் யோசித்து ராணுவத்தில் சேரும் முடிவை தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்த காலகட்டத்தில் தனது பாசமான குழந்தை குவைசாவைக்கூட சந்திக்கவில்லை.
சாதாரண பிரியா ஷேம்வாலாக உள்ளே நுழைந்தவர் எல்லாம் நல்லபடியாக முடிந்து லெப்டினன்ட் பிரியா ஷேம்வாலாக பெருமையுடன் பட்டயம் பெற்றார்.
இதற்காக நடைபெற்ற அணிவகுப்பில் ராணுவ உடையுடன் மிடுக்குடன் நடந்த பிரியாவை பார்வையாளர்கள் கேலரியில் இருந்து பார்த்த அவரது அண்ணன், அம்மா, மாமியார் என்று குடும்பத்தார் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரது பாராட்டு மற்றும் வாழ்த்தை பெற்றுக்கொண்டவரை ஒரு நிமிடம் கூட பிரியாமல் கட்டிப் பிடித்தபடி இருந்தார் அவரது ஆறு வயது குழந்தை குவைசா.
இன்னும் சில நாட்களில் சேவையை தொடர நாட்டின் ஏதோ ஒரு எல்லையில் பணியாற்ற போகிறேன்,என் பெற்றோருடன் குழந்தை நன்றாக படித்துக்கொண்டு இருக்கிறாள் ஆகவே அவளை பிரிந்துதான் வேலை பார்க்கவேண்டும் பராவாயில்லை என்னைவிட, என் குழந்தையைவிட, நாடு பெரியதல்லவா என்றார்.
கை தானாக எழுந்து பிரியா ஷாம்வாலுக்கு ஒரு சல்யூட் வைத்தது.
- எல்.முருகராஜ்
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சல்யூட் பிரியா ஷேம்வாலுக்கு...
பாராட்டப்பட வேண்டியவர்.
தலை வணங்குகிறேன் சகோதரி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேட்டிக்கு சல்யூட் அடிக்கும் இளசுகள்
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
» கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியருடன் நடிகர் சித்தார்த் சந்திப்பு
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
» கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியருடன் நடிகர் சித்தார்த் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|