Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்
Page 1 of 1 • Share
விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்
ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches).
கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவை பாலூட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி உணவாகக் கொள்ளும். மனித ரத்தத்தையும் விட்டுவைப்பதில்லை. இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது வலி ஏதும் தெரியாதிருக்க இதன் எச்சிலில் இருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம், கடிக்கின்ற இடத்தை மரத்துப் போகச் செய்துவிடும்.
அதனால் அட்டை நம்மைக் கடிக்கும்போது நமக்கு எவ்வித வலியும் தெரியாது. அது கடித்து நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி முடித்தவுடன்தான், உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும். உடனே பயத்தில் அதை அகற்ற முற்படுவோம். அதுபோன்ற நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். வெறும் கையால் அட்டையைப் பிடித்து இழுத்துவிட முடியும்.
அதைவிடவும் பாதுகாப்பான முறைகள் பல உண்டு. குறிப்பாக வனத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், வனங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளும் அறிவியலாளர்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவோர் இதுபோன்ற நேரத்தில், அட்டை கடித்த இடத்தில் உப்பு, டெட்டால், சோப்பு, எலுமிச்சைச் சாறு, மூக்குப்பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவினால், அட்டை தானே கீழே விழுந்துவிடும்.
உடம்பில் கடித்த அட்டையை இப்படி அகற்றியவுடன், கடித்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி, அங்கே ஒரு band-aidயை ஓட்டிவிடலாம். பொதுவாக அட்டை கடித்த இடத்தில் ஏற்பட்ட புண் ஆறும்போது அரிப்பு ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் அந்த இடத்தில் சொரியக்கூடாது. சிலருக்கு அட்டை கடியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற நபர்கள் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது.
சிகிச்சை தேவை
அட்டை கடியை எந்தச் சிகிச்சையும் இன்றி அப்படியே விட்டுவிட்டால், கடித்த புண் ஆறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அது மட்டுமல்லாமல் கடித்த இடத்தில் ஏற்பட்ட தழும்பு எளிதில் மறையாது. அதனால்தான் வனத்துறை அலுவலர்கள் இதுபோன்ற காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, Hunter’s shoe என்று சொல்லப்படக்கூடிய shoeவை அணிவதுடன், அதற்கும் மேலே காக்கி நிறத்தில் பட்டியையும் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள் (இது 4 அங்குல அகலமும், 2 அடி நீளமும் கொண்ட ஒரு தடிமனான காக்கி துணி). இதை அணிவதால், அட்டைகள் உடல் பகுதியை அணுக முடியாது. அப்படி ஒருவேளை அட்டைகள் கால் மீது ஏற முற்பட்டாலும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.
இந்த அட்டைகள் கேரள மாநிலத்தில் ஒரு சில நோய்களைக் குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில வெளிநாடுகளில் முதுமை யடைவதைத் தடுப்பதற்காகவும், ‘வெரிகோஸ் வெய்ன்’ என்று சொல்லப்படும் நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தவும் இந்த அட்டைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
- வ. சுந்தர ராஜு, முன்னாள் இந்திய வனப் பணி அலுவலர் தொடர்புக்கு: sundarifs.raju@gmail.com
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்
பகிர்வுக்கு நன்றி
அட்டையை உப்பு போட்டு கொன்ற அனுபவம் உண்டு
அட்டையை உப்பு போட்டு கொன்ற அனுபவம் உண்டு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கழுத்தை நெரிக்கும் வங்கி கடன் அட்டைகள்
» விந்தை நிகழ்வுகள்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» விந்தை மிகு வியப்பான நிகழ்ச்சிகள்
» பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்
» விந்தை நிகழ்வுகள்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» விந்தை மிகு வியப்பான நிகழ்ச்சிகள்
» பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|