தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எதிர்காலம் வளம்பெற ...

View previous topic View next topic Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty எதிர்காலம் வளம்பெற ...

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 3:28 pm

1. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். சிலர் உங்களது பலவீனத்தை அவர்களது பலமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

2. பள்ளி, கல்லூரிகளில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து முட்டாள் என்று சொல்லும் ஆசிரியரே முதல் முட்டாளாக இருப்பார்.

3. உங்களை விட்டு விலகிப்போவதால் நன்மை நிகழும் என்று சிலர் கருதினால், அவர்கள் விலகும் முன் நீங்கள் விலகிவிடுங்கள். உங்களுக்கு நன்மை நிகழும்.

4. நாகரீக வளர்ச்சி என்பது ஆடையின் அளவைக் குறைத்துக் கொள்வதல்ல. சிந்தனையின் அளவை வளர்த்துக் கொள்வது.

5. உண்மையாக வாழ்ந்து பாருங்கள். சிலருக்குப் பிடிக்கும், பலருக்குப் பிடிக்காது.

6. உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.

7. உங்கள் குழந்தையை பணக்காரனாக வளருங்கள், தவறில்லை. ஆனால் ஏழையை புரிந்துகொள்ளும் படியாக வளர்க்காவிட்டால் இந்த சமுதாயம் தவறாகிவிடும்.

8. முதுமை காலத்து கொடுமையையும், மழலை காலத்து சந்தோசத்தையும் ஒருவனா(ளா)ல் கொடுக்க முடியுமென்றால், அவனே(ளே) உங்களுக்கு உற்ற துணை.

9. உங்கள் எழுத்திற்கு எதிர்ப்பு அதிகமென்றால் அதன் பலம் அதிகமென்றே பொருள்.

10. தியாகத்திற்காக சிறை சென்று திரும்பியோர் குற்றவாளிகளாகக் பார்க்கப்பட்டனர் அன்று. குற்றத்திற்காக சிறை சென்று திரும்புவோர் தியாகிகளாகக் பார்க்கப் படுகின்றனர் இன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 3:29 pm

11. தலையா ? தன்மானமா ? என்ற நிலை வந்தால், தலையை இழக்கலாம், தன்மானத்தையல்ல.

12. உங்களைவிட்டு எளிதில் விலகிச்செல்ல நினைப்போரை எளிதில் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள்.

13. ஒரு ஆணின் உணர்வுகளையோ அல்லது ஒரு பெண்ணின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள, நாம் அந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போம் என்ற அடிப்படையை புரிந்துகொள்ள முயன்றாலேபோதும்.

14. பள்ளி, கல்லூரிகளில் பெரும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை. அது ஒட்டுமொத்தத் திறமையல்ல.

15. மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் நண்பர்கள் ஆவதில்லை. அப்படியே ஆனாலும் அது நீண்டகாலம் நிலைப்பதில்லை.

16. சில விடயங்களைப் பேசித் தீர்ப்பது நல்லது. சிலவற்றை பேசாமல் இருப்பது நல்லது.

17. உங்களை மிகைப் படுத்திக்கொள்ள மற்றவருடன் நீங்கள் உயர்ந்தவர்களும் அல்ல. உங்களைத் தாழ்த்திக்கொள்ள அவர்களைவிட நீங்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.

18. நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலே போதும், உங்களின் கருத்துக்கள் 90 சதவீத மக்களைச் சென்றடைந்துவிடும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே அந்த கருத்தின் மதிப்பிற்காகச் சென்றடையும்.

19. பள்ளி, கல்லூரிகளில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவனின் ஒட்டு மொத்த அறிவு/திறமை என்று எண்ணும் நமது சமுதாயமே, அறியாமையின் உச்சகட்ட அளவுகோள்.

20. சில தருணங்களில், ஒருவருடைய இயலாமை அவர்களின் பொறாமையாக வெளிப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 3:30 pm

21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான்.

22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.

23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும்.

25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட அதுவே காரணமாக அமையலாம்.

26. நடந்து கொண்டுவரும் மனித அழிவிற்கு பலநூறு காரணங்களை நாம் பட்டியலிடலாம். ஆனால் மூல காரணம் மனிதன் மட்டும் தான்.

27. நமது நோயைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருட்களிலும், அதை சோதனை செய்ய இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில், திரைமறைவில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களின் ரத்தக்கறை படிந்திருக்கும். அவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

28. நமது நாட்டில் நல்ல தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. தலைவர்களுக்கு மட்டுமே.

29. எவனொருவன் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதனுக்காக மட்டும் போராடுகிறானோ அவனோடு கைகோர்க்க எனது விரல்கள் காத்துக்கொண்டிருக்கும்.

30. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாக்கப்படும் உறவுகள் யாவும் நீண்டகாலம் நீடிக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 3:31 pm

31. ஒரு சமூகப் பிரச்சனைக்கு பதியம் போடுவது மேல் வர்க்கம், அதனால் வரும் விளைவுகளை தூரம் நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது நடுத்தர வர்க்கம், எதிர்த்து நின்று போராடிச்சாவது கீழ் வர்க்கம். இவ்வுலகின் எழுதப்படாத விதி இது.

32. எனது மதமும் அதன் கொள்கைகளும் மட்டுமே சிறந்தது அதை மட்டுமே கடைபிடிப்பேன் என்று கூறும் ஒரு இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில் ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடுங்கள், இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடுங்கள் என்று கேட்பதில்லை. O நெகடிவ் கொடுங்கள், B பாசிட்டிவ் கொடுங்கள் என்று ரத்த வகைகளையே கேட்கிறார்கள். இப்படியாக மனிதன்.

33. தெரியாமல் நாம் செய்த ஒரு தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது அந்தத் தவறை இரண்டாவது முறை செய்கிறோம்.

34. நல்ல கருத்துக்களைச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லுங்கள். காதிற்குள் புகுந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்கள், வெறும் காற்றில் கரைவதில் எந்தப் பயனுமில்லை.

35. நமது கூட வருபவர்களை சந்தோசத்தின் போதும், கூடவே வருபவர்களைத் துக்கத்தின் போதும் தெரிந்துகொள்ளலாம்.

36. திருமண வாழ்க்கைக்கு புற அழகுமட்டும் போதாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறோம்.

37. வாழ்வில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையையும் அடையலாம். அதனால் எவரையும் இப்போதுள்ள நிலையை வைத்து எடை போடக்கூடாது.

38. சுவற்றில் எறியப்பட்ட பந்தும் ஒடுக்கப்பட்ட இனமும் எதிர்த்தே தீரும்.

39. உலகில் எங்கெங்கு மனித அழிவுகள் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் அழிக்கப்படுபவர்கள் சாதி, மதம், இனம், மொழி என்ற ஏதோ ஒன்றில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.

40. இவ்வுலகில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு செயலும் அது செய்யப்பட்ட காரணத்திற்கும் அது உட்பட்ட சூழ்நிலைக்கும் ஏற்றவாறே வரையறுக்க வேண்டியதாய் உள்ளது.




https://www.facebook.com/savethisnature
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by நாஞ்சில் குமார் Thu May 15, 2014 10:51 pm

பயனுள்ள பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by ஸ்ரீராம் Fri May 16, 2014 3:53 pm

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by முரளிராஜா Sat May 17, 2014 9:20 am

அவசிய பகிர்வு அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எதிர்காலம் வளம்பெற ... Empty Re: எதிர்காலம் வளம்பெற ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum