தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருப்தியின்மை என்னும் நெருப்பு

View previous topic View next topic Go down

திருப்தியின்மை என்னும் நெருப்பு  Empty திருப்தியின்மை என்னும் நெருப்பு

Post by நாஞ்சில் குமார் Thu May 15, 2014 10:14 pm



எத்தனையோ தவறான செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்,சந்திக்கிறோம். இவர்கள் இப்படிப் பாவம் செய்யக் காரணம் என்ன? மனிதர்கள் சக மனிதர்களுக்கெதிராக எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்தக் காரணம் என்ன?

இந்தக் கேள்வி அர்ஜுனனின் மனதிலும் வந்தது. பகவான் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

‘கிருஷ்ணா ! மனிதன் பாவம் செய்வதை நோக்கி ஏன் இழுக்கப் படுகிறான்?’ (கீதை 3.36)

‘அர்ஜுனா ! காமம், க்ரோதம் இவைகளே மனிதன் பாவம் செய்வதற்குக் காரணம். நெருப்பைப் புகை மூடுவதுபோலவும், கண்ணாடியை அழுக்கு மூடுவது போலவும், கருவை கர்ப்பப் பை மூடுவதுபோலவும், காமத்தாலும் கோபத்தாலும் அறிவு மறைக்கப்படுகிறது. காமம் என்பது ‘அறிஞனுக்கு சத்ரு. போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு. இந்த்ரியங்கள், மனம் , புத்தி இவை காமத்தின் இருப்பிடங்கள். (கீதை - 3 - 38,39,40).

மகாகவி பாரதியும் இதைக் கூறுகிறார்.

பாரதி சொல்கிறார் .“மனம்தான் சத்ரு. வேறு நமக்குப் பகையே கிடையாது.

நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது. மனம் தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள். கிழிப்போம் வாருங்கள். வேட்டையாடுவோம் வாருங்கள்.”

மகாபாரத்த்தில் இதுபற்றிய ஒரு கதை வருகிறது.

சுக்கிராச்சார்யார் தனது மகள் தேவயானியின் விருப்பத்துக்கிணங்க யயாதி மகாராஜாவைத் திருமணம் செய்து வைத்தார். யயாதி மகாராஜாவின் மனமோ, தேவயானியின் தோழி சர்மிஷ்டையிடம் சென்றது. தேவயானியை யயாதி மகாராஜாவுடன் அனுப்பும்போது, சுக்ராச்சார்யார் சொன்னார். ‘மன்னா ! என் மகளுடன் இன்ப நிறைவுடன் வாழ்வாயாக. அவளது தாதியாக வரும் சர்மிஷ்டையையும் கௌரவமாக நடத்து. ஆயினும் அவளுடன் தனித்து உரையாடாதே. உடல் இன்பத்தையும் நாடாதே. தவறினால் உன்னை நீ இழப்பாய்’!

ஆனால் ‘அடங்காத ஆசை போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு அல்லவா?’. யயாதி தேவயானியின் மூலமாகவும் குழந்தைகளைப் பெற்றான். சர்மிஷ்டை மூலமாகவும் குழந்தைகளைப் பெற்றான். எவ்வளவு காலம் உண்மையை மறைக்க முடியும்? சர்மிஷ்டையின் குழந்தைகளுக்கும் யயாதியே தந்தை என்று தெரிந்ததும் தேவயானி கொதித்தெழுந்தாள். தந்தை சுக்கிராச்சார்யாருக்குத் தகவல் தெரிந்தது.

“மன்னா ! தர்மம் அறிந்த நீ , ஒழுக்கம் குன்றி, ஆசை என்ற நெருப்பின் வயப்பட்டு , உன்னை இழந்தாய். அதர்மம் செய்துவிட்டாய். உன்னை மூப்பு வந்து பீடிக்கட்டும்” என்று சாபம் விட்டார்.

யயாதியை உடனே இளமை அகன்று மூப்பு பீடித்தது. யயாதி மன்னித்துவிடும்படி கெஞ்சினான்.

“உன்னைப் பீடித்துள்ள இந்த மூப்பை உன் புதல்வர்களில் எவன் தனது இளமையை உனக்குத் தருவானோ, அவனிடம் நீ மாற்றிக்கொள்ளலாம். அவனே உனது ராஜ்யத்துக்கும் வாரிசாக ஆகட்டும்.” என்றார் சுக்கிராச்சாரியார்.

இளமையில் மூப்பு

சர்மிஷ்டைக்குப் பிறந்த புரூ என்ற மகன் தந்தையின் கிழத்தனத்தைப் பெற்றுக்கொண்டு, அவனது இளமையை அவருக்குக் கொடுத்துவிடுகிறான். புரூ மூப்படைந்தான். யயாதி அவனுடைய இளமை நலன்களைப் பெற்று எழில்மிக்க வாலிபனாக மாறினான். ஆயிரம் ஆண்டுகள் இன்பங்களை அனுபவித்தான். மகனிடம் வந்தான். “மகனே ! ஆயிரம் ஆண்டுகள் இன்பத்தில் திளைத்தும் , ஆசை அடங்கவே இல்லை. அனுபவிக்க, அனுபவிக்க , ஆசைகள் விருத்தி அடைகின்றன. நெய்யை ஊற்ற ஊற்ற நெருப்பு அதிகமாக எரிவதுபோல, ஆசைகளும் அனுபவிக்க அனுபவிக்க அதிகம்தான் ஆகின்றன. எவ்வளவு அனுபவித்தாலும் பெண்ணும், பொன்னும், ஒருவனுக்குத் திருப்தியை உண்டாக்காது. அடங்காத ஆசை போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு என நான் புரிந்துகொண்டுவிட்டேன்.” எனச் சொல்லித் தனது ‘இளமையை’ பூருவுக்குத் திரும்பத்தந்துவிட்டு , தனது கிழத்தன்மையைப் பெற்றுக் கொள்கிறான். மகனுக்குப் பட்டம் சூட்டி விட்டு , தவம் செய்யப் புறப்பட்டுப் போய்விடுகிறான்.

நமக்கு இந்தப் புராண நிகழ்ச்சி புலப்படுத்துவது, ஆசை என்பது ‘போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு’ என்பதைத்தான். தந்தையே தனது வெட்கத்தை விட்டு மகனிடம் இளமையைக்கூடக் கேட்கவைக்கும்.

அப்படியானால், ஆசைப்படுவதே தவறா! ஆசைதானே மனிதன் முன்னேறுவதற்கு அடித்தளமாக இருக்கிறது. திட்டம், முயற்சி , சிந்தனை, உழைப்பு , பலன் இப்படியே தானே மனித வாழ்க்கையும் , மனித இனமும் முன்னேறிச் செல்கிறது.

உண்மை தர்மமான ஆசைகள் தவறாகக் கருதப்படுவதில்லை. பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், தர்மத்துக்கு விரோதமில்லாத ஆசையும் நானே (தெய்வீகமே) என்கிறார்.

மகாகவி பாரதி, எது தர்மத்துக்கு விரோதமில்லாத தெய்வீக ஆசை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்:

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி !...

கடமையாவன - தன்னைக் கட்டுதல்

பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்

அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே

தன்னையாளும் சமர்த்தெனக் கருள்வாய்

மணக்குள வினாயகா ! வான்மறைத்தலைவா!

தன்னைத்தான் ஆளுந்தன்மைதான் பெற்றிடில்

எல்லாப் பயன்களும் தாமே எய்தும்

அசையா நெஞ்சம் அருள்வாய் !

‘தன்னைத்தான் ஆளும் தன்மையே, நான்கு புருஷார்த்த பலன்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற பயன்களை நமக்குத் தரும். அவை ‘போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பாக’ இருக்காது. ஏனெனில், அறம் சார்ந்த ஆசைகளாக ஆகிவிடுகின்றன.

அறம் சார்ந்த ஆசைகளுக்காகத் திட்டமிடுதலும் , முயற்சிப்பதும், வென்றடைவதும் அனுபவிப்பதும்தான் மனித குலத்துக்கு தர்மம். அதுவே தெய்விகம்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

திருப்தியின்மை என்னும் நெருப்பு  Empty Re: திருப்தியின்மை என்னும் நெருப்பு

Post by செந்தில் Fri May 16, 2014 12:08 pm

பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum