Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பசுமைக்கு பஞ்சமில்லாத செம்மொழி பூங்கா
Page 1 of 1 • Share
பசுமைக்கு பஞ்சமில்லாத செம்மொழி பூங்கா
சென்னை: சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நாம் தப்பிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டு ஜெமினி மேம்பாலத்தை கடக்கும்போது நம் கண் முன்னே செம்மொழி பூங்கா தோன்றுகிறது. அண்ணா சாலையின் மைய பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் இயற்கை கொடை விரித்திருப்பதை பார்த்து மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். அதே மகிழ்ச்சியுடன் ரூ.15 கொடுத்து டிக்கெட்டை பெற்றுக்கொண்டு உள்ளே நுழையும் நம்மை பூக்கள் சிரித்த முகத்துடன் வரவேற்கின்றன. பூக்களுடன் சேர்ந்து தாவரங்களும் இணைக்கப்பட்ட கதம்பமான செங்குத்து வடிவில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது தென்னிந்தியாவுக்கே புதிதான செங்குத்து தோட்டம் என்ற தகவல் நம்மை பிரமிக்க வைக்கிறது. சிங்கோனியம், பிலோடென்ரான், பெரணி, மணி பிளாண்ட் உள்ளிட்ட 30 வகையான தாவரங்களை கொண்டு செங்குத்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செங்குத்து தோட்டத்தின் அழகை ரசித்தபடி நாம் நடந்து செல்லும் வழியெங்கும் இரு புறமும் கொரிய புல் தோட்டம் காணப்படுகிறது. இது மட்டுமின்றி வழியெங்கும் நீண்ட நெடிய மரங்கள் நிமிர்ந்து நின்று நம்மை வரவேற்கின்றன. காற்றின் சுகமான தாலாட்டோடு தவழ்ந்து செல்லும் நாம் சிறிது தூரத்திலேயே ஒரு அலாதியான நறுமணத்தை உணர்கிறோம். அருகில் சென்றபோது பவள மல்லிகை, பாரிஜாதம், ரோஜா, செண்பகம் உள்ளிட்ட வாசனை மிக்க மலர்களை தரும் தாவரங்கள் அடங்கிய நறுமண தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
நறுமண தோட்டத்தின் வாசனை முழுவதையும் முகர்ந்தபடி நாம் அடுத்து அடைவது மூலிகை தோட்டம். அழகை வெளிப்படுத்தும் தாவரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மருத்துவ குணத்தை வெளிப்படுத்தும் இன்சுலின் செடி, துளசி, வசம்பு முதலான தாவரங்கள் நிரம்பிய மூலிகை தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலிகையின் முக்கியத்துவத்தை பற்றி சிந்தித்தபடி நகர்ந்து செல்லும் நம்மை அரவணைக்கிறது போன்சாய் தோட்டம். இங்கு போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட மாதுளை, கொய்யா, ஆல், எலுமிச்சை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. வன பகுதியிலிருப்பதை போன்று உணர்ந்து சற்று நகர்ந்து செல்லும் நம் கண்களை கவரும் வகையில் மஞ்சள் மலர்கள், மஞ்சள் மரங்கள் உள்ளடக்கிய மஞ்சள் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூங்காவிற்கு சவால் விடும் வகையில் கலர் கலராக பட்டாம் பூச்சிகள் தங்களது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு பட்டாம் பூச்சியை சிரமப்பட்டு நிறுத்தி விசாரித்தபோது இது தங்களுக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்கா என்று அலட்டிக் கொண்டது.
அழகான பட்டாம் பூச்சிகளுடன் நமக்கு ஏன் வம்பு என்று நகர்ந்து செல்லும் நாம் நீரோடையை அடைகிறோம். அந்த நீரோடை ஓரமாக நடந்து செல்லும் நமக்கு போட்டியாக வாத்துகள் நீரில் மிதந்து செல்கின்றன. பசுமைக்கு பஞ்சமில்லாத இப்பூங்காவில் கள்ளி, கற்றாழை போன்ற பாலைவன தாவரங்கள் கொண்ட கடின பூங்காவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் ஊஞ்சல், சர்க்கஸ் உள்ளிட்டவை அடங்கிய சிறுவர் பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் ரசித்தபடி நாம் வெளியில் செல்ல திரும்பும் போது மாலை 6 மணியாகிவிடுகிறது. அப்போது வண்ண விளக்குகளால் பூங்காவே ஜொலிக்கின்றது. பூங்காவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான தாவரங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு தாவரங்களின் தோற்றங்களும் நமக்கு புதிதாக இருக்கிறது. மொத்ததில் இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தி வரும் சென்னை வாசிகளுக்கு இப்பூங்காவை சுற்றி பார்க்கும் அனுபவம் நிச்சயம் பசுமையான நினைவுகளாகவே அமையும்.
நன்றி: தினகரன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பசுமைக்கு பஞ்சமில்லாத செம்மொழி பூங்கா
பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» செம்மொழி நினைவாக கோவை மத்திய சிறைச்சாலையில் பூங்கா
» பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|