Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளைச் சமாளிக்க திணறுகிறீர்களா?
Page 1 of 1 • Share
குழந்தைகளைச் சமாளிக்க திணறுகிறீர்களா?
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது.
கற்றலும் குணநலமும்
குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து பெறப்படும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலனைத் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் ‘இவனை டிவி பார்க்கவிட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ எனக் குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம். நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பதே இதன் பின்னணிக் காரணம்.
கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணி நேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஒரே மாதத்தில் கறிக்குத் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றன.
இதனால் குழந்தை வளர்ப்பைப் பற்றி கருத்தரங்கம் நடத்திச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
பெற்றோரின் பங்கு
ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே பெரிய விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒரு காரின் ஸ்டியரிங்கை சிறிது திருப்பினாலே அந்தக் கார் முழுவதுமாகத் திரும்புவது போலத்தான், ‘Behaviour Therapy’ என்றழைக்கப்படும் நடத்தை சீர்திருத்தப் பயிற்சிகள். இவை குழந்தைகளிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பின் சூட்சுமம்
செய்த தவறைக் குழந்தையையே திருத்தும்படி செய்தால், அதே தவறைத் திரும்பச் செய்யும் வாய்ப்பு நாளடைவில் குறையும். உதாரணமாக வேண்டுமென்றே ஒரு பொருளைக் கீழே கொட்டினால், அதை அந்தக் குழந்தையையே திரும்ப அள்ளச் சொல்லலாம்.
சர்க்கஸில் டால்பின் பந்து விளையாடுவதை டிவியில் பார்த்திருப்போம். ஆனால், நன்றாகப் பந்தைக் கையாண்டுவிட்டுத் தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன் ஒவ்வொரு முறைக்கும் இடைப்பட்ட நொடிப் பொழுதில் பயிற்சியாளர் வீசும் மீன் துண்டை, அது சுவைப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதில்தான் இந்த நடத்தைப் பயிற்சியின் சூட்சுமமே இருக்கிறது. ஒரு விலங்கையே பயிற்சியின் மூலம் மாற்ற முடியும் என்றால், நிச்சயமாகக் குழந்தை வளர்ப்பிலும் இது நல்ல பலனைத் தரும். என்ன, கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.
பிஹேவியரிசம் என்ற கொள்கையை முன் வைத்த ஜான் வாட்சன் என்ற அறிஞர் 1926-ல் ஒரு சவால் விடுத்தார். "வேறுபட்ட திறமைகளைக் கொண்ட ஒரு டஜன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள். ஒவ்வொருவரையும் நான் விரும்பியபடி மாற்றி காட்டுகிறேன்; டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக, தொழிலதிபராக; ஏன் திருடனாக, பிச்சைக்காரனாகக்கூட" என்று கூறினார். அதனால் நினைத்தபடி குழந்தைகளை நல்ல முறையில் மாற்ற, இதை முயற்சித்துத்தான் பாருங்களேன்!
-கட்டுரையாளர்,
மனநல மருத்துவர்.
(தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com)
நன்றி: தி இந்து
கற்றலும் குணநலமும்
குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து பெறப்படும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலனைத் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் ‘இவனை டிவி பார்க்கவிட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ எனக் குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம். நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பதே இதன் பின்னணிக் காரணம்.
கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணி நேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஒரே மாதத்தில் கறிக்குத் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றன.
இதனால் குழந்தை வளர்ப்பைப் பற்றி கருத்தரங்கம் நடத்திச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
பெற்றோரின் பங்கு
ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே பெரிய விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஒரு காரின் ஸ்டியரிங்கை சிறிது திருப்பினாலே அந்தக் கார் முழுவதுமாகத் திரும்புவது போலத்தான், ‘Behaviour Therapy’ என்றழைக்கப்படும் நடத்தை சீர்திருத்தப் பயிற்சிகள். இவை குழந்தைகளிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பின் சூட்சுமம்
செய்த தவறைக் குழந்தையையே திருத்தும்படி செய்தால், அதே தவறைத் திரும்பச் செய்யும் வாய்ப்பு நாளடைவில் குறையும். உதாரணமாக வேண்டுமென்றே ஒரு பொருளைக் கீழே கொட்டினால், அதை அந்தக் குழந்தையையே திரும்ப அள்ளச் சொல்லலாம்.
சர்க்கஸில் டால்பின் பந்து விளையாடுவதை டிவியில் பார்த்திருப்போம். ஆனால், நன்றாகப் பந்தைக் கையாண்டுவிட்டுத் தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன் ஒவ்வொரு முறைக்கும் இடைப்பட்ட நொடிப் பொழுதில் பயிற்சியாளர் வீசும் மீன் துண்டை, அது சுவைப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதில்தான் இந்த நடத்தைப் பயிற்சியின் சூட்சுமமே இருக்கிறது. ஒரு விலங்கையே பயிற்சியின் மூலம் மாற்ற முடியும் என்றால், நிச்சயமாகக் குழந்தை வளர்ப்பிலும் இது நல்ல பலனைத் தரும். என்ன, கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.
பிஹேவியரிசம் என்ற கொள்கையை முன் வைத்த ஜான் வாட்சன் என்ற அறிஞர் 1926-ல் ஒரு சவால் விடுத்தார். "வேறுபட்ட திறமைகளைக் கொண்ட ஒரு டஜன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள். ஒவ்வொருவரையும் நான் விரும்பியபடி மாற்றி காட்டுகிறேன்; டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக, தொழிலதிபராக; ஏன் திருடனாக, பிச்சைக்காரனாகக்கூட" என்று கூறினார். அதனால் நினைத்தபடி குழந்தைகளை நல்ல முறையில் மாற்ற, இதை முயற்சித்துத்தான் பாருங்களேன்!
-கட்டுரையாளர்,
மனநல மருத்துவர்.
(தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com)
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குழந்தைகளைச் சமாளிக்க திணறுகிறீர்களா?
அவசியமான பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மேலதிகாரியை எளிதில் சமாளிக்க
» குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க
» தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
» தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
» குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க..
» குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க
» தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
» தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
» குடும்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|