தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுங்கச்சாவடிகளில் 'வேபிரிட்ஜ்' அமைத்து சோதனை

View previous topic View next topic Go down

சுங்கச்சாவடிகளில் 'வேபிரிட்ஜ்' அமைத்து சோதனை Empty சுங்கச்சாவடிகளில் 'வேபிரிட்ஜ்' அமைத்து சோதனை

Post by நாஞ்சில் குமார் Wed May 21, 2014 3:39 pm


நாடு முழுவதும், 290 சுங்கச்சாவடியில், 'வேபிரிட்ஜ்' அமைத்து, சரக்கு வாகனங்களை சோதனை செய்வது, ஜூன் 1 முதல், அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஓவர்லோடு சரக்குகளை பறிமுதல் செய்து, சுங்க கட்டணத்தை விட, 10 மடங்கு கூடுதலாக அபராதம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.3.80௦ லட்சம் லாரிகள் இது குறித்து, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது; தமிழகத்தில், 10 டன் முதல், 21 டன் சரக்கு ஏற்றும், 3.80 லட்சம் லாரிகளும், மூன்று முதல், ஏழு டன் சரக்கு ஏற்றும், 1.83 லட்சம் இலகு ரக வாகனங்களும் இயங்கி வருகின்றன. வாகனங்களில், ஓவர்லோடு ஏற்றக் கூடாது என, 10 ஆண்டாக போராடி வருகிறோம். இது தொடர்பான வழக்கில், ஓவர்லோடுக்கு, முழுமையாக தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு, 2005 நவ., 14ல், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அப்போதைய தமிழக போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங், 2007 அக்., 19ல், அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார். அதில், ஓவர்லோடு வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டபிரிவின்படி, அபராதமும், ஓவர்லோடு சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு, ரயில்வே கூட்ஸ், துறைமுக சரக்கு முனையம், தொழிற்சாலை, சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளாக, இந்த உத்தரவு அமல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டது. இதன் மூலம், பிரேக் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து சோதனைசாவடி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை போலீசார், ஓவர்லோடு பெயரில், பகல் கொள்ளை அடித்து வருகின்றனர். ஓவர்லோடு ஏற்றுவதால், சாலை, பாலம், வலுவிழந்து, 20 சதவீதம் சேதமாகிறது. வருவாய் இழப்பு ஓவர்லோடு விபத்தால், நாடு முழுவதும், கடந்தாண்டு, 1.10 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது தவிர, மற்ற வாகனங்களுக்கு, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுவதால், ஓவர்லோடு ஏற்றுவதை தடை செய்ய, மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். இதன் எதிரொலியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் (எலக்ட்ரானிக்ஸ்) அபே சங்கர் வர்மா, கடந்த, 8ம் தேதி, டில்லியில் உள்ள அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க பொது செயலருக்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'சுங்கச்சாவடி விதிப்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், எடை மேடை அமைத்து, சரக்கு வாகனங்களை சோதனை மேற்கொள்ள வேண்டும். அதில், அனுமதிக்கப்பட்ட எடைக்கு மாறாக, ஓவர்லோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பறிமுதல் செய்து, சுங்கச்சாவடி கட்டணத்தை விட, 10 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தமிழக போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் தலைமையில், சென்னையில், கடந்த, 13ல், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஓவர்லோடு அடியோடு தடுப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், சுங்கச்சாவடியில், 'வேபிரிட்ஜ்' அமைத்து, சரக்கு வாகனங்களை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், அரசுக்கு சொந்தமான, 12 சுங்கச்சாவடி, தனியாருக்கு சொந்தமான, 28 சுங்கச்சாவடி என, 40 சுங்கச்சாவடியிலும், ஜூன்,1ல் இருந்து, சரக்கு வாகனங்கள் எடை போடுவது அமலுக்கு வருகிறது. விரைவில் அமல் தற்போது, ஒரு சில சுங்கச்சாவடியில், வேபிரிட்ஜ் இருந்தும், சரக்கு வாகனங்களை எடை போடுவதில்லை. அவை உட்பட, நாடு முழுவதும், 290 சுங்கச்சாவடிகளில், சரக்கு வாகனங்களை எடை போடுவது, முழுவீச்சில் நடைமுறைக்கு வருகிறது. ஆந்திரா, கேரளா போல, தமிழகத்திலும், ஓவர்லோடு, 100 சதவீதம் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான, நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே, அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும், ஓவர்லோடு சரக்கை பறிமுதல் செய்வதால் ஏற்படும் சேதம், காலவிரயத்தை தவிர்க்கவும், லாரி உரிமையாளர்கள், வியாபாரிகளுக்கு, அறிவுறுத்தி வருகிறோம். மீறுவோர் மீது, ஜூன், 1ம் தேதி முதல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum