தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிதி திரட்டுவது எப்படி?

View previous topic View next topic Go down

நிதி திரட்டுவது எப்படி? Empty நிதி திரட்டுவது எப்படி?

Post by நாஞ்சில் குமார் Thu May 22, 2014 10:34 pm

தொழில் செய்ய விரும்பும் முதல் தலைமுறையினர் எடுத்தவுடன் கேட்பது பணம்தான். அப்பா வசதியானவராக இருந்தால் அவரிடம் உடனே தனது தொழில் பற்றிய ஐடியாவைக் கூறி பணம் கேட்கின்றனர். அப்பா பெரும் பணக்காரராக இருந்தால் அவரும் கேட்ட தொகையை உடனடியாக கொடுத்துவிடலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் நடுத்தரவர்க் கத்தில்தான் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, கல்லூரிகளில் படிக்க வைத்து தன் மகனோ அல்லது மகளோ சொந்த காலில் நின்று கொள்ளுவார் என்று பெருமை கொள்ளும் சமயத்தில், பெற் றோர்களைச் சார்ந்து குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை அமைப்பது உகந்ததல்ல. மேலும் பெற்றோர்களே இன்றைய நிதி நெருக்கடியில் தங்களது ஓய்வு கால நிதித்தேவைகளுக்கு எவ் வாறு வழிவகை செய்வோம் என்று குழம்பியிருக்கும் நேரத்தில், இதுபோல் ஒரு வெடிகுண்டை குழந்தைகள் போடுவது முறையானதும் அல்ல.

பெற்றோர்களை விட்டால் குழந்தைகள் அடுத்து நாடுவது தங்களது மிக நெருங்கிய உற வினர்களை அல்லது நண்பர் களைத்தான். அவர்களின் நிதி நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கூட நிதி கேட்பவருக்குத் தெரியாது. இவர்கள் இருசாரரிட மும் பணம் கிடைக்கவில்லை என்றவுடன் தொழில் முனைவோர் வருத்தப்பட ஆரம்பித்து விடுவர்.

எதற்குமே சரியான அணுகு முறை என்று ஒன்று உள்ளது. பணம் இருக்கும்/ இல்லாத பெற் றோரிடமோ அல்லது உறவினரி டமோ அல்லது நண்பரிடமோ உடனடியாகப் பணம் கேட்டு அவர்களையும் தர்ம சங்கடத்திற்கு உண்டாக்கி நம்மையும் தர்ம சங்கடத்தில் உள்ளாக்கிக் கொள்வது என்பது தவறு.

பொதுவாகக் கல்லூரி முடித்த வுடன் தொழில் செய்ய விரும்பு பவர்கள், தங்களது தொழிலுக்குத் தேவையான அளவு, சிறிய மூலதனத்தை வேலையில் சேர்ந்து சம்பாதித்து சேர்ப்பதுதான் சரி யான முறையாகும். எனது ஐடியா மிகவும் சூப்பர்; பல கோடி ரூபாய் சம்பாதிக்க வாய்ப்புள்ளது; ஆகவே தொழில் ஆரம்பிக்க என்னால் சிறிது காலம்கூட காத் திருக்க முடியாது என நினைப் பவர்கள், ஸீட் கேபிட்டல் மற்றும் வெஞ்சர் கேபிட்டல் (Seed Capital & Venture Capital) நிறுவனங்களை அணுகி தங்களது ஐடியாவை செயல் வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு பணம் கேட்கலாம்.

முதல் முறையாக தொழில் துவங்க நினைப்பவர்கள் முதலில் தங்களது ஐடியாவை ஒரு ரிப் போர்ட் வடிவத்தில் கொண்டு வரவேண்டும். அந்த ரிப்போர்ட்டில் தாங்கள் செய்யப்போகும் தொழில் பற்றிய விபரங்கள், அத்தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சந்தை, அத்தொழிலின் சிறப்பம்சங்கள், அத்தொழிலை தான் செய்வதால் என்ன சிறப்பு, அத்தொழிலிலிருந்து எதிர்பார்க்கும் லாபங்கள், அடுத்த 3 அல்லது 5 வருடத்தில் ஆரம்பிக்கப்போகும் தொழில் எந்நிலையில் இருக்கும் போன்ற விவரங்கள் அனைத்தையும் ஓரிரு பக்கங்களுக்குள் விவரியுங்கள். இதை குறுகிய பிராஜக்ட் ரிப் போர்ட் (Project Report) என்றும் கூறலாம். முதலில் இந்த குறுகிய ரிப்போர்ட்டை உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் அதே சமயத்தில், முதலீடு செய்யத் திறனுள்ள நண்பர்கள் உறவினர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் அபிப்ராயம்/ கருத்து களைப் பொருத்து மற்றவர்களிடம் நீங்கள் பேசலாம். உங்களின் முதல் முயற்சி அவ்வளவு வெற்றி கரமாக இருக்காது. சிலசமயங் களில் உங்களை நம்பி யாரும் பணம் போடக்கூட முன் வரமாட் டார்கள். அதற்காகக் கவலைப் படாதீர்கள். உங்களிடம் திறமை யும் ஐடியாவும் இருக்கும் பொழுது அதை உங்களால் முடிந்த சிறிய முதலீட்டுடன் வெளிக்கொண்டுவரப் பாருங்கள். உங்கள் திறமை ஓரளவு தெரிந்து விட்டால், மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும். அதன் பிறகு அவர்களும் பணம் தர முன் வருவார்கள். நிதி திரட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்றைய உலகத்தில் சிறிய முதலீட்டில் பல தொழில்களை நீங்கள் தொடங்கலாம். உங்களது திறன் வெளிப்பட வெளிப்பட பலரும் உங்களுடன் சேர்ந்து தொழில் செய்ய முன் வருவார்கள்.

இன்று தொழில் செய்ய விரும் பும் பலரும் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு வெஞ்சர் கேபிட்டல் கிடைக்குமா அல்லது பிரை வேட் ஈக்விட்டி (Private Equity) கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் இன்றைய இந்தியாவில் சகஜமாக கிடைக் கிறது; என்றாலும் நீங்கள் நினைப் பது போல் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆரம்ப காலங்களில் நீங்கள்தான் வியர்வை சிந்த வேண்டும். ஓரளவு உங்களது ஐடியாவை நிரூபித்த பிறகு பலரும் உங்களுடன் சேர்ந்து பறக்கத் தயாராக இருப்பார்கள். அதுவரை தலைவரும் நீங்கள்தான்; வீரரும் நீங்கள்தான் என ஒரு மனித ராணுவமாகச் செயல்பட வேண்டும்.

உங்கள் தொழில் சிறிதளவேணும் வளர்ந்த பிறகு, உங்களது தொழில் வளர்ச்சிக்காக வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களை நீங்கள் நாடலாம். வங்கிசாரா நிதி நிறுவனங்களில் வட்டி சற்று அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் பிராஸஸிங்கும் சற்று விரைவாக இருக்கும். வங்கிகளிடம் வட்டிகள் குறைவாக இருக்கும் ஆனால் அவர்கள் கடன் தருவதற்கு சற்று தாமதமாகும். ஆரம்பகாலங்களில், உங்களின் சொந்தபந்தம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் பணத்துடன் ஆரம்பித்து, பிறகு சற்று கடன் வாங்கி தொழிலை உயர்த்தி, அதன் பிறகு நீங்கள் வெஞ்சர் கேபிட்டல், பிரைவேட் ஈக்விட்டி போன்ற நிறுவனங்களிடம் நிதி கேட்டு செல்லும் பொழுது உங்களைச் சற்று உயர்த்திப்பார்ப்பார்கள். அவர்கள் பணம் தரவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுசமயம் நீங்கள் உங்கள் தொழிலை இன்னும் விரிவு படுத்தலாம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்- prakala@gmail.com

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நிதி திரட்டுவது எப்படி? Empty Re: நிதி திரட்டுவது எப்படி?

Post by முரளிராஜா Fri May 23, 2014 10:01 am

பயனுள்ள கட்டுரை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நிதி திரட்டுவது எப்படி? Empty Re: நிதி திரட்டுவது எப்படி?

Post by செந்தில் Fri May 23, 2014 11:16 am

கைதட்டல் பயனுள்ள பகிர்வு,மிக்க நன்றி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நிதி திரட்டுவது எப்படி? Empty Re: நிதி திரட்டுவது எப்படி?

Post by mohaideen Fri May 23, 2014 1:44 pm

பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நிதி திரட்டுவது எப்படி? Empty Re: நிதி திரட்டுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum