Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
“உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
Page 1 of 1 • Share
“உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
மனிதனின் தன்மைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவன் ஒரே மாதரியாக நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் இல்லை.
ஆனால் அடிப்படையான நிலைகளில் அவன் எப்போதும் ஒரே மாரதிரியாக, உறுதியாக நடந்துகொள்ள வேண்டும்.
அப்போது தான் அவன் உண்மையா மனிதனாக்க் கருதப்படுவான். இல்லாவிட்டால் தன் பெண்டு பிள்ளைளடத்திலேயே மதிப்பிழந்து போவான்; சர்ந்த்ப்பவாதி என்று இகழப்படுவான்.
உறுதி
மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான, முதன்மையான குணங்களி மன உஉதியம் ஒன்று. ஒருவன் தான் வகுத்துக்கொண்ட கொள்களைகளில் உறுதியாக நிற்க வேண்டும்.
நடு நிலைமையாக நடந்து கொள்வதில், சொன்ன சொல் மாறாமல் இருப்பதில், பிறர் பொருளை மட்டுமல்ல, அரசாங்கப் பொருள்களையும் கவராமல் இருப்பதில், வரிகளை ஏமாற்றாமல் இருப்பதில், வாய்ப்புக் கிடைத்தாலும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளாது இருப்பதில், எளியவர்கள் என்று எரிந்து விழுவதோ, வலியவர்கள் என்று அஞ்சி நடப்பதோ இல்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியான நிலையில் நடந்து கொள்வதில், துன்பத்தையே அனுபிக்க நேர்ந்தாலும் கொண் கொள்களையலிருந்து மாறாமல் இருப்பதி உறுதியாக இருக்க வேண்டும்.
இது தன் உரிமையை நிலை நாட்டுவது மட்டுமல, மனிதகுல உரிமை வழி நடப்பதில் கடமையைச் செய்வதில் உறுதியாக இருப்பதாகும்.
அவர் சொல்கிறாரே. இவர் சொல்கிறாரே என்று கொள்கைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. என்ன பாதிப்பு நேர்ந்தாலம் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவன்தான் மனிதன்.
பிடிவாதம்
உறுதி வேறு. பிடிவாதம் வேறு. உறுதி என்பது நல்ல செயல்களில் அழுத்தமாக நிற்பது. பிடிவாதம் என்பது தன் விருப்பத்தை, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள குழந்தைகள் போல அடம் பிடிப்பது.
எடுத்துக்காட்டாக இதைக்கூறலாம். நாம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திப்பதும்கூட. ஒரு குறுகிய வழியில் இரண்டு பேருந்துகள் எதிர் எதிர் திசையில் வருகின்றன. யாரேனும் ஒருவர் பின் நோக்கிப் போனால்தான் அடுத்து நகரவே முடியும்.
ஆனால், இந்த ஓட்டுநர்கள் இருவரும் பிடிவாதமாக, நான் பின் நோக்கிப் போகமாட்டேன் என்று இருவரும் வண்டியைப் போட்டுவிட்டார்கள் என்றால் இது பிடிவாதம். இது நல்லது அல்ல, யாரேனும் ஒருவர்போனால்தான் காரியங்கள்நடைபெறும். இங்கே உறுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கேதான் விட்டுக்கொடுக்க வேண்டும்.
அறிஞர் பெர்னாட்ஷா
அறிஞர் பெர்னாட்ஷாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சியை சொல்லுவார்கள். ஒரு குறுகிய பாலத்தில் அறிஞர் பெர்னாட்ஷா நடந்து செகிறார். எதிர் திசையில் ஒரு மனிதர் வருகிறார். பாலம் மிகவும் குறுகியது. இரண்டு பேரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள்.
யாரேனும் ஒருவர் கொஞ்சம் ஒதுங்கினால் தான்மற்றவர் அந்த இடத்தைக் கடந்து செல்ல முடியம். எதிரே வந்தவர் கேட்டார், “வழி விடுங்கள் நான் போகறேன்” என்று. பெர்னாட்ஷா “முட்டாள்களுக்கெல்லாம் நான் வழி விடுவதில்லை” என்றா தன் பிடிவாத குணத்தோடு.
எதிரே வந்தவர் மிகவும் அமைதியாக முட்டாள்களுக்கு நான் வழிவிடுவது உண்டு. நீங்கள் போங்கள்” என்று சிரித்துக்கொண்டே ஒதுங்கி வழிவிட்டார். இந்த நிகழ்ச்சி, எத்தகைய அறிஞராக இருந்தாலும் பிடிவாதம் இருப்பின் அது அவமாத்தயே கொண்டு வந்து சேர்க்கும் என்பதையே காட்டுகிறது.
பெண்ணினம்
இந்தப் பிடிவாத குணம் உள்ளவர்கள் சரியோ தவறோ தான் பிடித்ததற்கு மூன்று கால் என்பது போல கடந்த கொள்வதிலேயே பெரும்பாலும் வாழ்க்கையில் தோல்வியைக் காணுகின்றார்கள்.
இராவணன் சீதையைச்சிறை எடுத்தது தவறு. என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தபோதும் தவறான மான உணர்ச்சியின் காரணமாக எழுந்த பிடிவாதமே அழிவுக்குக் காரணமாக இருந்தது.
பொதுவாக பெண்ணினம் சின்னச்சின்ன காரியங்களில் பிடிவாதம் காட்டுவதன் காரணமாகவே அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியாமல் போகிறது. மாறாக நல்ல செயல்களுக்காக மன உறுதியோடு நின்றால் மாபெரும் வெற்றி பெறலாம். பெண்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
முரட்டுதனம்
இது பிடிவாத்த்தின் அடுத்த கட்டம், பிடிவாதம் உள்ளவர்கள் வாயால் பேசுவார்கள். முரட்டுத்தனம் உள்ளவர்கள் கையால் பேசுவார்கள். பிடிவாதமான பெண்களுக்கு முரட்டுதனமான கணவர்கள் வாய்ப்பார்கள் என்பது பொது மொழி.
முரட்டுத்தனத்தை நாகரிகம் இல்லாத, பண்பாடு வளராத இடங்களில்மிகச்சுலபமாக்க் காணலாம். பேசிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று கைகளைக் கலக்க விட்டுவிடுவார்கள். நடுத்தெருக்களில், தண்ணீர்க்குழாயடிகளில் இதை நாள்தோறும் காணலாம்.
சில சமயங்களில்மக்கள் மன்றங்களில் இத்தகைய கைகலப்புகளும் வீச்சுகளும் நடக்கிறது என்றால் அங்கே பிடிவாத்த்திற்கும் மேற்பட்ட நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள்.
பாண்டவரகளை, கௌரவர்கள் வஞ்சகத்தால் வெல்லப்பார்த்தார்கள். முடியாதபோதெல்லாம் அவர்கள் இருந்த மாளிகைக்கு நெருப்பு வைப்பது போன்ற முரட்டுத்தனமான செயல்களையும் செய்தார்கள். முடிவு என்ன ஆயிற்று?
இவ்வாறு, அடிபடையான கொகளைகளில் மனிதன் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறாமல் உறுதியாக இருந்தால் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தாலும் இறுதியில் அவன் வெற்றி பெறுகிறான். பிடிவாதம் பிடித்தால் அப்போது வெற்றி போலத்தோன்றினாலும் முடிவு தோல்வியாக அமைந்து விடுகின்றது.
மரட்டுத்தனமோ தோல்இயை மட்டும் இல்லாமல் அழிவையும் உண்டாக்கி விடுகிறது. தான்மட்டுமல்லதன்னச் சார்ந்தவர்களையும் அம்முரட்டுத்தனம் அழித்துவிடுகிறது.
அதனால்தான் பாரதி “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா” என்று அழைத்தார். குறைந்தது நமக்கு நாம், உண்மையாக நடந்து கொள்வதில் உறுதியாக நிற்போம். உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
maalaimalar
ஆனால் அடிப்படையான நிலைகளில் அவன் எப்போதும் ஒரே மாரதிரியாக, உறுதியாக நடந்துகொள்ள வேண்டும்.
அப்போது தான் அவன் உண்மையா மனிதனாக்க் கருதப்படுவான். இல்லாவிட்டால் தன் பெண்டு பிள்ளைளடத்திலேயே மதிப்பிழந்து போவான்; சர்ந்த்ப்பவாதி என்று இகழப்படுவான்.
உறுதி
மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான, முதன்மையான குணங்களி மன உஉதியம் ஒன்று. ஒருவன் தான் வகுத்துக்கொண்ட கொள்களைகளில் உறுதியாக நிற்க வேண்டும்.
நடு நிலைமையாக நடந்து கொள்வதில், சொன்ன சொல் மாறாமல் இருப்பதில், பிறர் பொருளை மட்டுமல்ல, அரசாங்கப் பொருள்களையும் கவராமல் இருப்பதில், வரிகளை ஏமாற்றாமல் இருப்பதில், வாய்ப்புக் கிடைத்தாலும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளாது இருப்பதில், எளியவர்கள் என்று எரிந்து விழுவதோ, வலியவர்கள் என்று அஞ்சி நடப்பதோ இல்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியான நிலையில் நடந்து கொள்வதில், துன்பத்தையே அனுபிக்க நேர்ந்தாலும் கொண் கொள்களையலிருந்து மாறாமல் இருப்பதி உறுதியாக இருக்க வேண்டும்.
இது தன் உரிமையை நிலை நாட்டுவது மட்டுமல, மனிதகுல உரிமை வழி நடப்பதில் கடமையைச் செய்வதில் உறுதியாக இருப்பதாகும்.
அவர் சொல்கிறாரே. இவர் சொல்கிறாரே என்று கொள்கைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. என்ன பாதிப்பு நேர்ந்தாலம் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவன்தான் மனிதன்.
பிடிவாதம்
உறுதி வேறு. பிடிவாதம் வேறு. உறுதி என்பது நல்ல செயல்களில் அழுத்தமாக நிற்பது. பிடிவாதம் என்பது தன் விருப்பத்தை, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள குழந்தைகள் போல அடம் பிடிப்பது.
எடுத்துக்காட்டாக இதைக்கூறலாம். நாம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திப்பதும்கூட. ஒரு குறுகிய வழியில் இரண்டு பேருந்துகள் எதிர் எதிர் திசையில் வருகின்றன. யாரேனும் ஒருவர் பின் நோக்கிப் போனால்தான் அடுத்து நகரவே முடியும்.
ஆனால், இந்த ஓட்டுநர்கள் இருவரும் பிடிவாதமாக, நான் பின் நோக்கிப் போகமாட்டேன் என்று இருவரும் வண்டியைப் போட்டுவிட்டார்கள் என்றால் இது பிடிவாதம். இது நல்லது அல்ல, யாரேனும் ஒருவர்போனால்தான் காரியங்கள்நடைபெறும். இங்கே உறுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கேதான் விட்டுக்கொடுக்க வேண்டும்.
அறிஞர் பெர்னாட்ஷா
அறிஞர் பெர்னாட்ஷாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சியை சொல்லுவார்கள். ஒரு குறுகிய பாலத்தில் அறிஞர் பெர்னாட்ஷா நடந்து செகிறார். எதிர் திசையில் ஒரு மனிதர் வருகிறார். பாலம் மிகவும் குறுகியது. இரண்டு பேரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள்.
யாரேனும் ஒருவர் கொஞ்சம் ஒதுங்கினால் தான்மற்றவர் அந்த இடத்தைக் கடந்து செல்ல முடியம். எதிரே வந்தவர் கேட்டார், “வழி விடுங்கள் நான் போகறேன்” என்று. பெர்னாட்ஷா “முட்டாள்களுக்கெல்லாம் நான் வழி விடுவதில்லை” என்றா தன் பிடிவாத குணத்தோடு.
எதிரே வந்தவர் மிகவும் அமைதியாக முட்டாள்களுக்கு நான் வழிவிடுவது உண்டு. நீங்கள் போங்கள்” என்று சிரித்துக்கொண்டே ஒதுங்கி வழிவிட்டார். இந்த நிகழ்ச்சி, எத்தகைய அறிஞராக இருந்தாலும் பிடிவாதம் இருப்பின் அது அவமாத்தயே கொண்டு வந்து சேர்க்கும் என்பதையே காட்டுகிறது.
பெண்ணினம்
இந்தப் பிடிவாத குணம் உள்ளவர்கள் சரியோ தவறோ தான் பிடித்ததற்கு மூன்று கால் என்பது போல கடந்த கொள்வதிலேயே பெரும்பாலும் வாழ்க்கையில் தோல்வியைக் காணுகின்றார்கள்.
இராவணன் சீதையைச்சிறை எடுத்தது தவறு. என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தபோதும் தவறான மான உணர்ச்சியின் காரணமாக எழுந்த பிடிவாதமே அழிவுக்குக் காரணமாக இருந்தது.
பொதுவாக பெண்ணினம் சின்னச்சின்ன காரியங்களில் பிடிவாதம் காட்டுவதன் காரணமாகவே அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியாமல் போகிறது. மாறாக நல்ல செயல்களுக்காக மன உறுதியோடு நின்றால் மாபெரும் வெற்றி பெறலாம். பெண்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
முரட்டுதனம்
இது பிடிவாத்த்தின் அடுத்த கட்டம், பிடிவாதம் உள்ளவர்கள் வாயால் பேசுவார்கள். முரட்டுத்தனம் உள்ளவர்கள் கையால் பேசுவார்கள். பிடிவாதமான பெண்களுக்கு முரட்டுதனமான கணவர்கள் வாய்ப்பார்கள் என்பது பொது மொழி.
முரட்டுத்தனத்தை நாகரிகம் இல்லாத, பண்பாடு வளராத இடங்களில்மிகச்சுலபமாக்க் காணலாம். பேசிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று கைகளைக் கலக்க விட்டுவிடுவார்கள். நடுத்தெருக்களில், தண்ணீர்க்குழாயடிகளில் இதை நாள்தோறும் காணலாம்.
சில சமயங்களில்மக்கள் மன்றங்களில் இத்தகைய கைகலப்புகளும் வீச்சுகளும் நடக்கிறது என்றால் அங்கே பிடிவாத்த்திற்கும் மேற்பட்ட நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள்.
பாண்டவரகளை, கௌரவர்கள் வஞ்சகத்தால் வெல்லப்பார்த்தார்கள். முடியாதபோதெல்லாம் அவர்கள் இருந்த மாளிகைக்கு நெருப்பு வைப்பது போன்ற முரட்டுத்தனமான செயல்களையும் செய்தார்கள். முடிவு என்ன ஆயிற்று?
இவ்வாறு, அடிபடையான கொகளைகளில் மனிதன் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறாமல் உறுதியாக இருந்தால் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தாலும் இறுதியில் அவன் வெற்றி பெறுகிறான். பிடிவாதம் பிடித்தால் அப்போது வெற்றி போலத்தோன்றினாலும் முடிவு தோல்வியாக அமைந்து விடுகின்றது.
மரட்டுத்தனமோ தோல்இயை மட்டும் இல்லாமல் அழிவையும் உண்டாக்கி விடுகிறது. தான்மட்டுமல்லதன்னச் சார்ந்தவர்களையும் அம்முரட்டுத்தனம் அழித்துவிடுகிறது.
அதனால்தான் பாரதி “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா” என்று அழைத்தார். குறைந்தது நமக்கு நாம், உண்மையாக நடந்து கொள்வதில் உறுதியாக நிற்போம். உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
maalaimalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
நல்ல கருத்துகுறைந்தது நமக்கு நாம், உண்மையாக நடந்து கொள்வதில் உறுதியாக நிற்போம்.
Similar topics
» மன உறுதி
» மனதில் உறுதி வேண்டும்
» உழைப்புக்கு உயர்வு உறுதி
» நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி
» பற்கள்: இறுதிவரை உறுதி பெற…
» மனதில் உறுதி வேண்டும்
» உழைப்புக்கு உயர்வு உறுதி
» நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி
» பற்கள்: இறுதிவரை உறுதி பெற…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|