Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பணம் காய்க்கும் மரங்கள்
Page 1 of 1 • Share
பணம் காய்க்கும் மரங்கள்
பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம்.
அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்கும் முறை பற்றித் தோட்டக்கலை வல்லுநர் அந்தோணி ராஜ் தெரிவித்ததாவது:
வீட்டிற்குக் குளிர்ச்சியையும் அழகையும் தரவல்ல மரங்களை நிழல், பயன் மற்றும் பணம் தரும் மரங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் நிழல் தரும் மரங்கள்: வேப்ப மரம், புங்க மரம், சரக் கொன்றை (சரம் போல மஞ்சள் பூக்களைக் கொண்டவை), பூவரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம்.
பயன் தரும் மரம்: மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி.
பணம் தரும் மரங்கள்: தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக்.
மரங்கள் நடும் முறை:
கோடைகாலமே மரங்கள் நடத் தகுந்த காலம். இங்குக் குறிப்பிட்டுள்ள மரக் கன்றுகள் அரசுத் தோட்டக் கலை வாரியத்திலும், தனியார் நர்சரிகளிலும் கிடைக்கும். மரக்கன்றுகள் வாங்கும்போதே குறைந்தபட்சம் நாலடி உயரமாவது இருக்க வேண்டும். இவ்வாறு நாலடிக்கு மேல் வளர்ந்த மரங்கள்தான் பக்குவப்பட்ட மரங்கள்.
இரண்டடிக்கு இரண்டடி சதுரப் பள்ளத்தில் ஆழமும் இரண்டடி இருக்குமாறு தோண்ட வேண்டும். இதில் ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும். இதற்கு மேலேயே எரு இரண்டு பங்கு, செம்மண் மூன்று பங்கு இடுதல் அவசியம். ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு அவசியம் போட வேண்டும். முன்னதாக வெட்டிய குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டுவிட வேண்டும். இதனால் பள்ளத்தில் உள்ள பூமிச் சூடு எல்லாம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும்.
இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளைக் காலை அல்லது மாலை வேளையில்தான் நட வேண்டும். வழக்கம் போல் மரம் நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது. பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு கூடும். இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்கிவிடும். ஆனால் பணம் தரும் மரங்கள் பலனளிக்கக் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் தேவை. இம்மரங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உயரமாக வளருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பயனைப் பணமாகத் தரும். இம்மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு நேர்குத்தாக வளருமாறு செய்தால் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும். ஒரு சந்தன மரம் மட்டும் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணமாகவே பயன் அளிக்கும். இதை வெட்டுவதற்குத் தோட்டக்கலை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். நிழல் மற்றும் பயன் தரும் ஒரு மரம் வளர்க்க 10 அடி நிலமும், பணம் தரும் மரத்திற்குப் பதினைந்து அடி நிலமும் தேவை.
நகரத்தில் வளர்ந்தாலும் மரம் மகத்தான பயனையே தரும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பணம் என்னடா பணம் பணம்.....
» புத்தளத்தில் பேரீச்சம்பழம் காய்க்கும் அதிசயம்
» ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம்
» கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும்
» மரங்கள் . .
» புத்தளத்தில் பேரீச்சம்பழம் காய்க்கும் அதிசயம்
» ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம்
» கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும்
» மரங்கள் . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|