Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பினால் நம்புங்கள்!
Page 1 of 8 • Share
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நம்பினால் நம்புங்கள்!
* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்!
* பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன.
* 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது.
[You must be registered and logged in to see this image.]
* சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
* விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து உட்கொண்டிருத்தல், வெடிகுண்டு பயன்படுத்துதல், இதய நோய், அனீமியா ஆகிய விஷயங்களைக் கண்டறிய முடியும்.
* நம் காதுகளில் உள்ள குறும்பியும், தாடையின் அசைவும் சேர்ந்து, காதுகளில் சேரும் தூசு, அழுக்கு போன்றவற்றை நீக்கி விடுகின்றன.
* 2050ம் ஆண்டில், நமது மூளையில் நிறைந்திருக்கும் அத்தனை தகவல்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட முடியும் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகும்.
* நிலப்பரப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நெதர்லாந்தையே மிக அதிக சூறாவளிகள் தாக்குகின்றன. ஒவ்வொரு 1991 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் ஒரு சூறாவளி தாக்குகிறது. அமெரிக்காவில் 8187 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி.
* மனித உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் கிலோமீட்டர்.
நன்றி : தினகரன்
* பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன.
* 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது.
[You must be registered and logged in to see this image.]
* சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
* விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து உட்கொண்டிருத்தல், வெடிகுண்டு பயன்படுத்துதல், இதய நோய், அனீமியா ஆகிய விஷயங்களைக் கண்டறிய முடியும்.
* நம் காதுகளில் உள்ள குறும்பியும், தாடையின் அசைவும் சேர்ந்து, காதுகளில் சேரும் தூசு, அழுக்கு போன்றவற்றை நீக்கி விடுகின்றன.
* 2050ம் ஆண்டில், நமது மூளையில் நிறைந்திருக்கும் அத்தனை தகவல்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட முடியும் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகும்.
* நிலப்பரப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நெதர்லாந்தையே மிக அதிக சூறாவளிகள் தாக்குகின்றன. ஒவ்வொரு 1991 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் ஒரு சூறாவளி தாக்குகிறது. அமெரிக்காவில் 8187 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி.
* மனித உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் கிலோமீட்டர்.
நன்றி : தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this link.]
- தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.
- 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
- பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
- சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
- காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
- மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.
- பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!
- தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.
* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.
* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!
* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.
* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.
* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.
* ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.
* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.
* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.
* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.
* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.
* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!
* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.
* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.
* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.
* ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.
* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.
* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.
* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.
* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).
[You must be registered and logged in to see this link.]
* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.
* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
* ‘பேய் பிடித்த வீடு’ என நம்பப்படுகிற வீட்டை, அந்த விஷயத்தைக் கூறாமல் விற்பனை செய்வது, நியூயார்க்கில் சட்டப்படி குற்றம்!
* புலியின் தோலில் அதன் மென்மயிர்களைப் போலவே டிசைன் கீற்றுகள் காணப்படுகின்றன.
கோலா விலங்குகளும் மனிதர்களும் ஒரே விதமான விரல் ரேகைகளையே கொண்டுள்ளனர்.
* சாலமாண்டார் என்கிற ஊர்வன வகை உயிரிகளில் சில, தாம் இழந்த வால், கால் பகுதிகளை மட்டுமல்ல... கண்ணின் பகுதிகளைக்கூட திரும்ப வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை!
* பெண் கழுதையையும், ஆண் வரிக்குதிரையையும் கலப்பினம் செய்து ‘ஜீடாங்’ என்ற உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது.
* ஸ்லிங்கி என்ற சுருள் வளையத்தை (ஒரிஜினல்) 6வது மாடியின் ஜன்னலிலிருந்து தரை வரை நீட்சியடையச் செய்ய முடியும்.
* ஆண் தீக்கோழி சிங்கத்தைப் போலவே கர்ஜிக்கும்.
* சைபீரியாவில் குளிர் அதிகமாகும்போது, உங்கள் மூச்சுக்காற்று வெளியே வந்த உடனேயே, ஐஸ் ஆகிவிடும்!
* பகடைக்காய்களில் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 7 ஆகவே இருக்கும்.
* எலிபென்ட் சீல் விலங்குகளில் சில, நீர்மூழ்கிக் கப்பல்களுக்குக் கீழேயும் கூட ‘டைவ்’ அடித்துச் செல்லும்.
தினகரன்
* புலியின் தோலில் அதன் மென்மயிர்களைப் போலவே டிசைன் கீற்றுகள் காணப்படுகின்றன.
கோலா விலங்குகளும் மனிதர்களும் ஒரே விதமான விரல் ரேகைகளையே கொண்டுள்ளனர்.
* சாலமாண்டார் என்கிற ஊர்வன வகை உயிரிகளில் சில, தாம் இழந்த வால், கால் பகுதிகளை மட்டுமல்ல... கண்ணின் பகுதிகளைக்கூட திரும்ப வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை!
* பெண் கழுதையையும், ஆண் வரிக்குதிரையையும் கலப்பினம் செய்து ‘ஜீடாங்’ என்ற உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது.
* ஸ்லிங்கி என்ற சுருள் வளையத்தை (ஒரிஜினல்) 6வது மாடியின் ஜன்னலிலிருந்து தரை வரை நீட்சியடையச் செய்ய முடியும்.
* ஆண் தீக்கோழி சிங்கத்தைப் போலவே கர்ஜிக்கும்.
* சைபீரியாவில் குளிர் அதிகமாகும்போது, உங்கள் மூச்சுக்காற்று வெளியே வந்த உடனேயே, ஐஸ் ஆகிவிடும்!
* பகடைக்காய்களில் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 7 ஆகவே இருக்கும்.
* எலிபென்ட் சீல் விலங்குகளில் சில, நீர்மூழ்கிக் கப்பல்களுக்குக் கீழேயும் கூட ‘டைவ்’ அடித்துச் செல்லும்.
தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* யானைகள் சராசரியாக தினமும் 150 கிலோ உணவு உட்கொள்கின்றன. 180 லிட்டர் நீர் பருகுகின்றன.
* கொறிவிலங்குகளில் 1,700க்கும் அதிக இனங்கள் உள்ளன. எலிகள், சுண்டெலிகள், முயல்கள், கினி பன்றிகள் போன்றவை இவ்வினமே!
* சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரி ஆற்றல் கொண்ட உணவு தேவை. அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 3,200 கலோரி உட்கொள்கிறார். எத்தியோப்பியாவில் ஒருவருக்கு 500 கலோரி கிடைத்தாலே ஆச்சரியம்தான்!
* சராசரியாக, நாம் 10 வினாடிகளில் ஒரு லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம்.
* நமது நரம்புகள் அதிகபட்சமாக நொடிக்கு 120 மீட்டர் வேகத்தில் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.
* நமது ரத்தம் தமனிகள் வழியாக ஒரு நொடிக்கு 1 மீட்டர் தூரம் பயணிக்கிறது.
* எஃகைக் காட்டிலும், அதே அளவு எடை கொண்ட எலும்புகள் 5 மடங்கு வலிமையானவை.
* யானைக்கு அடுத்து காண்டாமிருகங்களும் நீர்யானைகளும் அதிக எடை கொண்டவை. ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருகத்தின் எடை 9 டன் வரை இருக்கும்.
* யானைகள் சராசரியாக தினமும் 150 கிலோ உணவு உட்கொள்கின்றன. 180 லிட்டர் நீர் பருகுகின்றன.
* கொறிவிலங்குகளில் 1,700க்கும் அதிக இனங்கள் உள்ளன. எலிகள், சுண்டெலிகள், முயல்கள், கினி பன்றிகள் போன்றவை இவ்வினமே!
* சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரி ஆற்றல் கொண்ட உணவு தேவை. அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 3,200 கலோரி உட்கொள்கிறார். எத்தியோப்பியாவில் ஒருவருக்கு 500 கலோரி கிடைத்தாலே ஆச்சரியம்தான்!
* சராசரியாக, நாம் 10 வினாடிகளில் ஒரு லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம்.
* நமது நரம்புகள் அதிகபட்சமாக நொடிக்கு 120 மீட்டர் வேகத்தில் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.
* நமது ரத்தம் தமனிகள் வழியாக ஒரு நொடிக்கு 1 மீட்டர் தூரம் பயணிக்கிறது.
* எஃகைக் காட்டிலும், அதே அளவு எடை கொண்ட எலும்புகள் 5 மடங்கு வலிமையானவை.
* யானைக்கு அடுத்து காண்டாமிருகங்களும் நீர்யானைகளும் அதிக எடை கொண்டவை. ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருகத்தின் எடை 9 டன் வரை இருக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்!
எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.
பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!
சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.
சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!
ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்!
டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.
காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி ஙிமீமீயீணீறீஷீ என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை!
முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.
‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்!
எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.
பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!
சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.
சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!
ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்!
டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.
காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி ஙிமீமீயீணீறீஷீ என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை!
முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!
உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!
அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.
தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!
சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.
சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.
வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!
அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.
உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!
அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.
தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!
சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.
சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.
வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!
அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* 5 ஆயிரம் வயது தாண்டியும் உயிர் வாழும் மரம் பூமியில் உண்டு. பிரமிடுகளின் வயதுக்கு இணையான இம்மரம், Great Basin bristlecone pine வகையைச் சேர்ந்தது. அமெரிக்காவின் கலி ஃபோர்னியாவிலுள்ள ஒயிட் மவுன்டன்ஸ் பகுதியில் உள்ளது.
* மூளையின் தகவல்கள் நமது நரம்பு மண்டலத்தில் மணிக்கு 322 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்கின்றன.
* இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருந்து 16,657 கிலோமீட்டர் தாண்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பெண்ணுக்கு ஒரு பீட் சா டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.
* நம் தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்!
* ஆப்பிள் சாஸ் - இதுதான் விண் வெளியில் உண்ணப்பட்ட முதல் உணவு. அந்தப் பெருமை அமெரிக்க விண்வெளி வீரருக்குக் கிடைத்தது!
* இந்தோனேசிய மழைக்காடுகளில் உலகின் மிகப்பெரிய மலர் பூக்கிறது. அது ஒரு கார் டயர் அளவுக்குப் பெரியது.
* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.
* ஒரு குண்டூசி முனையில் நம் உடலின் 10 ஆயிரம் செல்களை நிறுத்தி வைத்துவிட முடியும்.
* விரல் நகம் நுனி முதல் அடி வரை வளர 6 மாதங்கள் ஆகும்.
* 5 ஆயிரம் வயது தாண்டியும் உயிர் வாழும் மரம் பூமியில் உண்டு. பிரமிடுகளின் வயதுக்கு இணையான இம்மரம், Great Basin bristlecone pine வகையைச் சேர்ந்தது. அமெரிக்காவின் கலி ஃபோர்னியாவிலுள்ள ஒயிட் மவுன்டன்ஸ் பகுதியில் உள்ளது.
* மூளையின் தகவல்கள் நமது நரம்பு மண்டலத்தில் மணிக்கு 322 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்கின்றன.
* இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருந்து 16,657 கிலோமீட்டர் தாண்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பெண்ணுக்கு ஒரு பீட் சா டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.
* நம் தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்!
* ஆப்பிள் சாஸ் - இதுதான் விண் வெளியில் உண்ணப்பட்ட முதல் உணவு. அந்தப் பெருமை அமெரிக்க விண்வெளி வீரருக்குக் கிடைத்தது!
* இந்தோனேசிய மழைக்காடுகளில் உலகின் மிகப்பெரிய மலர் பூக்கிறது. அது ஒரு கார் டயர் அளவுக்குப் பெரியது.
* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.
* ஒரு குண்டூசி முனையில் நம் உடலின் 10 ஆயிரம் செல்களை நிறுத்தி வைத்துவிட முடியும்.
* விரல் நகம் நுனி முதல் அடி வரை வளர 6 மாதங்கள் ஆகும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
* உலகில் 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.
* 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை).
* 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
* 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997).
* 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
* 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர்.
* 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை.
* 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை.
* 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை).
* 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
* 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997).
* 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
* 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர்.
* 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை.
* 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.
* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.
* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!
* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.
* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.
* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.
* ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.
* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.
* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.
* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.
* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.
* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.
* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!
* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.
* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.
* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.
* ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.
* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.
* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.
* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
நம்பிட்டேன் நண்பா.
அறிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
அறிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.
* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.
* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.
* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!
* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.
* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.
* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.
* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!
* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!
* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.
* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.
* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.
* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!
* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.
* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.
* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.
* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!
* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!
* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]
* மண்புழுக்களுக்கு 5 இதயங்கள்!
* மழையில் ஓடும்போது 50 சதவீதம் அதிகம் நனைவோம்!
* ‘லேடிபக்’ எனப்படும் வண்டினத்துக்கு பயம் ஏற்படுகையில், மூட்டுகளின் வழியே வாசனையுள்ள நீரை வெளியேற்றும்.
* ‘ஜெயன்ட்’ வகை ஆமைகள் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டே இருக்கும்.
* 10 ஆயிரம் ‘டூத் பிக்ஸ்’ குச்சிகளைக் கொண்டு 4 அடி நீளமுள்ள படகை உருவாக்கியுள்ளார் ஒரு கலைஞர். இதை ரிமோட் கன்ட்ரோல் கொண்டு இயக்கவும் முடியும்!
* நியூசிலாந்து நாட்டு மக்கள்தொகையை விட, அங்குள்ள செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்!
* ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான லட்சாதிபதிகள், இன்று இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
* விண்வெளி வீரர்களின் பாதத் தடங்கள் என்றும் நிலவில் நிலைத்திருக்கும். அவற்றை அழிக்க அங்கே காற்றில்லையே!
* அமெரிக்காவில் நிஜ ஃப்ளமிங்கோ பறவைகளை விட, பிளாஸ்டிக் பறவைகளே அதிகம்.
* பார்வைக்கு, மூளையின் மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு தேவைப்படுகிறது.
* மண்புழுக்களுக்கு 5 இதயங்கள்!
* மழையில் ஓடும்போது 50 சதவீதம் அதிகம் நனைவோம்!
* ‘லேடிபக்’ எனப்படும் வண்டினத்துக்கு பயம் ஏற்படுகையில், மூட்டுகளின் வழியே வாசனையுள்ள நீரை வெளியேற்றும்.
* ‘ஜெயன்ட்’ வகை ஆமைகள் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டே இருக்கும்.
* 10 ஆயிரம் ‘டூத் பிக்ஸ்’ குச்சிகளைக் கொண்டு 4 அடி நீளமுள்ள படகை உருவாக்கியுள்ளார் ஒரு கலைஞர். இதை ரிமோட் கன்ட்ரோல் கொண்டு இயக்கவும் முடியும்!
* நியூசிலாந்து நாட்டு மக்கள்தொகையை விட, அங்குள்ள செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்!
* ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான லட்சாதிபதிகள், இன்று இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
* விண்வெளி வீரர்களின் பாதத் தடங்கள் என்றும் நிலவில் நிலைத்திருக்கும். அவற்றை அழிக்க அங்கே காற்றில்லையே!
* அமெரிக்காவில் நிஜ ஃப்ளமிங்கோ பறவைகளை விட, பிளாஸ்டிக் பறவைகளே அதிகம்.
* பார்வைக்கு, மூளையின் மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு தேவைப்படுகிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]* 4 விண்கற்களுக்கு பீட்டில்ஸ் ராக் இசைக்குழுவினரின் பெயர்கள் (ஜான், பால், ஜார்ஜ், ரிங்கோ) சூட்டப்பட்டிருக்கின்றன.
* கிரிக்கெட் பூச்சிகள் தங்கள் மூட்டுகளின் வழியாகவே ஒலியை உணர்கின்றன.
* துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது.
* தூசு மற்றும் பனி அடங்கிய பிரமாண்டப் பந்துதான் வால் நட்சத்திரம்.
* ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!
* கட்டுப்பாடற்ற வான்கோழிகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கூட ஓடும்!
* பிளாக்ஹோலில் இருப்பதாகக் கற்பனை செய்தால், அங்கு நாம் ‘ஸ்பாஹெட்டி’ எனும் ஒருவகை நூடுல்ஸ் உணவு போல இழுக்கப்பட்டிருப்போம்!
* உலகின் மிகச் சிறிய குரங்கின் உயரம் - ஒரு டூத் ப்ரஷ் அளவுதான்!
* எவரெஸ்ட் சிகரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கும்!
* பன்றிகளுக்கு வேனிற்கட்டிகள் (வியர்க்குரு) ஏற்படுவதில்லை!
* கிரிக்கெட் பூச்சிகள் தங்கள் மூட்டுகளின் வழியாகவே ஒலியை உணர்கின்றன.
* துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது.
* தூசு மற்றும் பனி அடங்கிய பிரமாண்டப் பந்துதான் வால் நட்சத்திரம்.
* ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!
* கட்டுப்பாடற்ற வான்கோழிகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கூட ஓடும்!
* பிளாக்ஹோலில் இருப்பதாகக் கற்பனை செய்தால், அங்கு நாம் ‘ஸ்பாஹெட்டி’ எனும் ஒருவகை நூடுல்ஸ் உணவு போல இழுக்கப்பட்டிருப்போம்!
* உலகின் மிகச் சிறிய குரங்கின் உயரம் - ஒரு டூத் ப்ரஷ் அளவுதான்!
* எவரெஸ்ட் சிகரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கும்!
* பன்றிகளுக்கு வேனிற்கட்டிகள் (வியர்க்குரு) ஏற்படுவதில்லை!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
[You must be registered and logged in to see this image.]* சிம்பன்சிகள், குரங்குகள், நாய்கள் மற்றும் ஒரு கினிப்பன்றியும் சுண்டெலியும் கூட விண்வெளிக்குச் சென்றுள்ளன.
* 1945-1947 காலகட்டத்தில் ‘மைக்’ என்ற சிக்கன் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது -தலையே இல்லாமல்!
* வியாழன் கோளில் 300 ஆண்டு களாகத் தொடரும் சூறாவளி, இன்னும் வலுவாக உள்ளது.
* ஒரு மனிதனின் தலையை விடவும் பெரியதும் எடை அதிகமானதுமான வெங்காயம் ஒருமுறை அறுவடையாகியுள்ளது. என்ன விலையோ?
* ராய் சல்லிவன் என்ற அமெரிக்கரை 7 வெவ்வேறு முறைகள் மின்னல் தாக்கிய பிறகும், அவர் உயிர் பிழைத் திருந்தார்!
* உடலின் மிகப்பெரிய உறுப்பு - நம் சருமம்தான்!
* ‘கேட்னிப்’ எனும் மூலிகைச்செடி சிங்கம் மற்றும் புலிகளைக்கூட பாதிக்கும்!
* பண்டைய எகிப்தியர்கள் குரங்குகளை இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், நடனம் ஆடவும் பழக்கியிருந்தனர்!
* பெரு நாட்டில் புத்தாண்டன்று மஞ்சள் வண்ண உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை!
* பிரமாண்டமான ஹம்பர்கர் போன்ற வடிவில் இருக்கும்படிதான் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் முதலில் வடிவமைக்கப்பட்டது.
* 1945-1947 காலகட்டத்தில் ‘மைக்’ என்ற சிக்கன் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது -தலையே இல்லாமல்!
* வியாழன் கோளில் 300 ஆண்டு களாகத் தொடரும் சூறாவளி, இன்னும் வலுவாக உள்ளது.
* ஒரு மனிதனின் தலையை விடவும் பெரியதும் எடை அதிகமானதுமான வெங்காயம் ஒருமுறை அறுவடையாகியுள்ளது. என்ன விலையோ?
* ராய் சல்லிவன் என்ற அமெரிக்கரை 7 வெவ்வேறு முறைகள் மின்னல் தாக்கிய பிறகும், அவர் உயிர் பிழைத் திருந்தார்!
* உடலின் மிகப்பெரிய உறுப்பு - நம் சருமம்தான்!
* ‘கேட்னிப்’ எனும் மூலிகைச்செடி சிங்கம் மற்றும் புலிகளைக்கூட பாதிக்கும்!
* பண்டைய எகிப்தியர்கள் குரங்குகளை இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், நடனம் ஆடவும் பழக்கியிருந்தனர்!
* பெரு நாட்டில் புத்தாண்டன்று மஞ்சள் வண்ண உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை!
* பிரமாண்டமான ஹம்பர்கர் போன்ற வடிவில் இருக்கும்படிதான் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் முதலில் வடிவமைக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
* இன்றைக்கு மட்டுமல்ல... அன்றைக்கும் நீலத்திமிங்கலங்களே உலகில் மிகப் பெரிய உயிரினங்கள், டைனோசர்களை விடவும்!
* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.
* ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.
* பாத்டப்பிலேயே ஆடப்படும் விளையாட்டுகள் ஐரோப்பாவில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன. அப்படி ஆடப்பட்ட மோனோபாலி ஆட்டம் ஒருமுறை 99 மணி நேரம் நீடித்தது.
* தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து வெடிப்பொருட்களைக் கண்டறியச் செய்ய முடியும்.
* டீன் ஏஜிலேயே எகிப்து ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.
* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!
* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.
* பூமியில் உள்ள ஒட்டுமொத்த மணற்துகள்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன.
* பிரமாண்டமான டைனோசர்கள் வெஜிடேரியன்களே!
* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.
* ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.
* பாத்டப்பிலேயே ஆடப்படும் விளையாட்டுகள் ஐரோப்பாவில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன. அப்படி ஆடப்பட்ட மோனோபாலி ஆட்டம் ஒருமுறை 99 மணி நேரம் நீடித்தது.
* தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து வெடிப்பொருட்களைக் கண்டறியச் செய்ய முடியும்.
* டீன் ஏஜிலேயே எகிப்து ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.
* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!
* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.
* பூமியில் உள்ள ஒட்டுமொத்த மணற்துகள்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன.
* பிரமாண்டமான டைனோசர்கள் வெஜிடேரியன்களே!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நம்பினால் நம்புங்கள்!
* லெபனான் நாட்டில் ஒரு விவசாயி 11 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கை அறுவடை செய்திருக்கிறார்.
* சில டைனோசர்களுக்கு சுமார் ஆயிரம் பற்கள் வரை இருந்தன.
* தேனீக்கள் பச்சை அல்லது நீலம் அல்லது சிவப்பு வண்ணத்திலும் இருக்கும்.
* சில வகை காளான்கள் இருளில் ஒளிரும்.
* பூனைகள் பிறக்கும்போது நீலக்கண்களையே கொண்டிருக்கின்றன.
* பெரியவர்களுக்கு ஓராண்டில் சராசரியாக 1,500 கனவுகள் ஏற்படுகின்றன.
* சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் 19 வினாடிகள் ஆகின்றன.
* உருகி வழிவது போன்ற தோற்றத்தில் இத்தாலியில் ஒரு கட்டிடம் உள்ளது.
* சில பன்றிகள் மண்ணைப் பார்த்து பயப்படும்.
* கால்களில் வியர்வை அல்லது ஏதேனும் வாசனை உடையவர்களைக் கடிக்க கொசுக்கள் விரும்புகின்றன.
* சில டைனோசர்களுக்கு சுமார் ஆயிரம் பற்கள் வரை இருந்தன.
* தேனீக்கள் பச்சை அல்லது நீலம் அல்லது சிவப்பு வண்ணத்திலும் இருக்கும்.
* சில வகை காளான்கள் இருளில் ஒளிரும்.
* பூனைகள் பிறக்கும்போது நீலக்கண்களையே கொண்டிருக்கின்றன.
* பெரியவர்களுக்கு ஓராண்டில் சராசரியாக 1,500 கனவுகள் ஏற்படுகின்றன.
* சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் 19 வினாடிகள் ஆகின்றன.
* உருகி வழிவது போன்ற தோற்றத்தில் இத்தாலியில் ஒரு கட்டிடம் உள்ளது.
* சில பன்றிகள் மண்ணைப் பார்த்து பயப்படும்.
* கால்களில் வியர்வை அல்லது ஏதேனும் வாசனை உடையவர்களைக் கடிக்க கொசுக்கள் விரும்புகின்றன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
» நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
» நம்பினால் நம்புங்கள்
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
» நம்பினால் நம்புங்கள்!!! ஒரு மர்மம்!!!!??????!!!!!
» நம்பினால்....நம்புங்கள்..(பாகம்:1)
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|