Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
Page 1 of 1 • Share
மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "சுற்றுச்சூழலை பாதுகாக்க குரலை உயர்த்துங்கள்; கடல் நீர்மட்டத்தை உயர்த்தாதீர்கள்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. நமது வருங்கால சந்ததியினர் நலமாக வாழவேண்டும் எனில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது கட்டாயம்.
நமது வீடுகளில் மட்டுமல்ல, உலக மக்கள் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, இயற்கை வளங்களை குறைந்தளவில் பயன்படுத்துதல், இயற்கை பேரழிவு முன்னெச்சரிக்கை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
உயரும் கடல்நீர் மட்டம்
பருவநிலை மாற்றம் சுகாதாரம், உணவு உற்பத்தி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 100 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி உயர்ந்துள்ளது. இதனால் கடல் நீர்மட்டம் 10 முதல் 25 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்கு 85 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு வாயு அதிகரித்ததே காரணம். மனிதனின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் (அதிகரித்த குளிர்பதன பெட்டி, மின்சாரம் தயாரிப்பு முறைகள், நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாடு, மீத்தேன் வாயு அதிகரிப்பு ஆகியவை) காரணமாக கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரித்துள்ளது. புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. கடல் நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் புயல்களின் பாதிப்பும் அதிகமாக இருக்கும். கடலோர பகுதிகள் பாதிக்கப்படும். வெப்பநிலையால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மழைப்பொழிவில் மாற்றம் ஏற்படுவதால் உணவுப்பொருள் உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும். வரும் ஆண்டுகளில் ஆசியாவில் உணவுப்பஞ்சம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
டன் டன்னாய் கழிவுகள்
வீடு, அலுவலகம், வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் அன்றாடம் உருவாகும் கழிவுகள், முறையாக மேலாண்மை செய்யப்படாததால், அவை சுற்றுச்சூழலின் பெரிய எதிரியாக உருவாகியுள்ளன. 2025ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 800 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப கழிவுகளின் அளவும் அதிகரிக்கும். 2005ல் இருந்த கழிவுகளின் அளவு 2025ல் 44 சதவீதம் அதிகரிக்கும் என ஐ.நா., தெரிவிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நகரங்களில் 290 கோடி மக்கள் இருந்தனர். அப்போது ஒரு நபர் ஒரு நாளைக்கு 0.64 கிலோ கழிவுகளை வெளியிட்டனர். தற்போது நகரங்களில் 300 கோடி மக்கள் உள்ளனர். ஒரு நபர் ஒரு நாளைக்கு 1.2 கிலோ கழிவுகளை வெளியிடுகின்றனர். மொத்தமாக ஆண்டுக்கு 130 கோடி டன்னிலிருந்து, 220 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
பசுங்குடில் வாயுக்கள்
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு பசுங்குடி வாயுக்கள் அவசியம். இவை இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய், உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேர்ந்து இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்) சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. தொழிற்சாலைகள் இந்த வாயுக்களை அதிகம் வெளியிடுவதால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை, (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப இவை (பசுங்குடில் வாயுக்கள்) திருப்பி அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது.
கார்பன் வெளியீடு கணக்கீடு தெரியுமா
தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் வாயுவின் அளவு, 1990 முதல் 2010 வரை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளவில் சீனா மற்றும் அமெரிக்கா இதை அதிகம் வெளியிடுகிறது. இதன் அளவை குறைக்க வேண்டும் என, உலக நாடுகள் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும்.
சென்னை, மதுரைக்கு எந்த இடம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா 155வது இடத்தில் உள்ளது. மொத்தம் 178 நாடுகளில் சுற்றுச்சூழல் தன்மையை ஆராய்ந்து, சுத்தமாக இருக்கும் நாடுகளை அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் இந்தியாவுக்கு 155வது இடமே கிடைத்தது. இதிலிருந்து நாட்டின் சுற்றுச்சூழல் எந்தளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது என இதன் மூலம் தெளிவாகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் மோசமான நகரம் என்ற பட்டியலில், இந்தியாவின் 21 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உலகளவில் 13வது இடம், இந்திய அளவில் முதலிடத்தை மீரட் பெற்றுள்ளது. இந்திய அளவில், தமிழகத்தின் சென்னை (உலகளவில் 44), மதுரை (உலகளவில் 112), கோவை (உலகளவில் 140) முறையே 7, 16, 17வது இடத்தில் உள்ளதன.
காவு வாங்கப்படும் காடுகள்
காடுகளின் பரப்பளவு குறைவதும் வெப்பநிலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 1980ல் 7.18 கோடி ஹெக்டேராக இருந்தது. இது தற்போது 6.84 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது. ஆண்டுதோறும் காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே செல்வதால், இந்தியாவின் பருவநிலை மோசமானதாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல்லுயிரினங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
இப்படித்தான் எதையாவது சொல்லி
பயமுறுத்துவாங்க..!
-
பூமி எப்போதும் சாய்ந்த நிலையில் சுற்றுகிறது.
அதன் தன்மையிலிருந்து மேலும் சற்று
சாய்ந்து சுற்றுவதால்தான் இத்தனை பருவ
கோளாறுகளும் என்பதே உண்மை...!!
-
பயமுறுத்துவாங்க..!
-
பூமி எப்போதும் சாய்ந்த நிலையில் சுற்றுகிறது.
அதன் தன்மையிலிருந்து மேலும் சற்று
சாய்ந்து சுற்றுவதால்தான் இத்தனை பருவ
கோளாறுகளும் என்பதே உண்மை...!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
பயனுள்ள விழிப்புணர்வு தகவல்களுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
கொஞ்சமாவது அக்கறை கொள்வோம்... காப்போம்...
Re: மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் !
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உலக சுற்றுச்சூழல் தினம்
» இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்
» இன்று காதலர் தினம்
» இன்று அறிவியல் தினம்
» இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்
» இன்று காதலர் தினம்
» இன்று அறிவியல் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|