Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூச்சுக் காற்றில் நச்சு!
Page 1 of 1 • Share
மூச்சுக் காற்றில் நச்சு!
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரங்களே! காடுகள் அழிக்கப்பட்டு நகரங்களாகவும், கான்க்ரீட் காடுகளாகவும் மாறிய நொடியிலிருந்து சுற்றுச்சூழல் மாசுபட ஆரம்பித்தது! அதுமட்டுமல்லாமல் வாகனப் போக்குவரத்து அதிகரித்ததும் சூழலுக்கு வேட்டு வைக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் நம் சூழல் நிலையை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இன்று இந்தியாவில் அதிக மரங்கள் கொண்ட நகரம் எது தெரியுமா? ‘பெங்களூரு’ என்றுதான் சொல்வீர்கள். இல்லவே இல்லை. நாக்பூரில்தான் மரங்கள் அதிகம். நாக்பூரில் 21,43,838 மரங்கள் உள்ளதாக கணக்கெடுத்துள்ளார்கள். மும்பையில் 19,17,844 மரங்களும் நவி மும்பையில் 4,78,120 மரங்களும் உள்ளனவாம். பெங்களூரில் 14,78,412 மரங்களே இருக்கின்றன.
ஒரு மனிதன் ஆண்டுக்கு சராசரியாக 383 கிலோ கார்பன் டை ஆக்சைடை வெளிப்படுத்துகிறான். ஆனால் ஒரு மரம் அதிகபட்சமாய் சுவாசத்தின் மூலமாக எடுத்துக் கொள்வது 6 கிலோ மட்டுமே.
உலகில் மோசமான சுற்றுச்சூழல்களால் காற்று மாசுபட்டுள்ள 20 இடங்களில் 13 இடங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த 13ல் முதலிடம் டெல்லிக்கு! பாட்னா, ஆக்ரா, அமிர்தசரஸ், குவாலியர், அகமதாபாத், ஜோத்பூர், ராய்ப்பூர், அலகாபாத் போன்றவையும் பட்டியலில் இருக்கின்றன.
ஆச்சர்யம் என்னவென்றால், இன்று உலகிலேயே அதிகம் மூச்சு விட சிரமப்படும் நாடு, சீனா. ஆனால் இந்த நாடு பற்றி உலக சுகாதார நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்படவேயில்லை. ஏற்கனவே சீனாவில் பயங்கர மாசுக் காற்று உலவுகிறது எனக் கூறி, வெளிநாட்டு வாய் மூடும் முகமுடிகளுக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தித் தந்துவிட்டது உலக சுகாதார நிறுவனம்! அதேபோல் நம் நாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி, வெளிநாட்டு முகமுடிகளை விற்கச் செய்யும் ரகசிய ஏற்பாடாக இது இருக்குமோ என்கிற சந்தேகமும் இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் யூனிசெப் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான்! பிரதி உபகாரம் இல்லா மல் இவை செய்யுமா? பொதுவாக சமீபகாலமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அறிக்கைகள் இந்தியாவை மட்டம் தட்டும் வகையிலேயே உள்ளன! மற்றொரு புறம் ‘எல் நினோ’ வினால், இந்தியாவில் மழை பொய்க்கும் என அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் செய்திகளைப் பரப்பி வருகின்றன! இதன் நோக்கம், ‘இந்தியாவில் செயற்கை நெருக்கடியை உருவாக்கி, தங்கள் பொருட்களை விற்பதுதான்’ என சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சமீபகாலமாக நம் அரசு இத்தகைய அறிக்கைகளை எதிர்க்கத் துவங்கியுள்ளது. அதே சமயம் இப்படி மோசமான காற்றைச் சுவாசித்து நுரையீரல் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் வந்து வருடத்திற்கு 2 லட்சம் பேர் சாவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த மாசுக்காற்றால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்று அலறுகிறது ஆய்வு.
இந்தியாவில் இது தொடர்பாக 124 நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கெல்லாம் காற்றில் தூசு மற்றும் புகையின் பாதிப்பு அதிகம் இருந்தது உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக லக்னோ, குவாலியர், ராய்ப்பூர் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
டெல்லி சில ஆண்டுகளுக்கு முன்புவரை, நகர் காற்றை சுத்தப்படுத்துவதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டது. சமீபகாலமாக மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகமாகி விட்டது. தென் இந்தியா இந்த விஷயத்தில் பரவாயில்லை என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். காற்றை மாசாக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டமெல்லாம் இருக்கிறது. செயல்படுத்த ஆள் இல்லாததே இந்த இழிநிலைக்கு காரணம், இந்நிலை நீடித்தால் நாளை நமக்கு மூச்சு திணறும் என்பது காலம் விடுக்கும் எச்சரிக்கை!
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மூச்சுக் காற்றில் நச்சு!
அதிர்ச்சியளிக்கும் விஷயம்தான்
இருக்கின்ற மரங்களை வெட்டாமல் இருப்பதே பெரிய விஷயம்
இருக்கின்ற மரங்களை வெட்டாமல் இருப்பதே பெரிய விஷயம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நச்சு எண்ணங்கள்
» சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்
» காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
» காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
» சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்
» காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
» காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|