தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்!

View previous topic View next topic Go down

மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்! Empty மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்!

Post by நாஞ்சில் குமார் Tue Jun 24, 2014 5:25 pm

[You must be registered and logged in to see this image.]

தமிழகத்தில் புதுமை சிகிச்சை

இப்போதெல்லாம் ரெண்டு வீட்டுக்கு ஒன்று என பியூட்டி பார்லர்ஸ் பெருகிவிட்டன. ஃபேஷியல், த்ரெட்டிங், ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் என ஒரு காலத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமே செய்துகொண்டிருந்த அழகுப் பிரயத்தனங்களை இப்போது எல்லோரும் செய்கிறார்கள். அப்படியென்றால், சினிமா பிரபலங்கள்..? அடுத்த கட்டம் போயிருப்பார்கள்தானே? ‘‘அந்த அடுத்த கட்டம்தான் சார் அழகு மருத்துவம். எஸ்... இப்போ ‘அழகுக் கலை’ பழசாகிடுச்சு. அழகு அறிவியல், அழகு மருத்துவம்னு ஆகிப்போச்சு. தோல் சுருக்கத்தை மறைச்சு அழகாக்கணுமா? மாநிறமா இருக்கவங்களை சிவப்பாக்கணுமா? அழகு சம்பந்தப்பட்ட எல்லாத்துக்கும் இப்ப மருந்து, மாத்திரை இருக்கு!’’ என்கிறார் டாக்டர் கார்த்திக் ராம்.

‘‘நம்ம நாட்டுல பெரும்பாலும் அழகு சிகிச்சைங்கறது தோலோட நிறம் சம்மந்தப்பட்டதுதான். எவ்வளவு கலரா இருந்தாலும் நம்மவர்கள் எல்லாருக்கும் இன்னும் ஒரு டோன் சிவப்பழகு வேணும்னு தோணுது. அதனாலதான் மார்க்கெட்ல ஆயிரக்கணக்கான கிரீம்கள் சக்கை போடு போடுது. பொதுவா இந்தியர்களோட கலர் மாநிறமா இருக்கறதுக்கும், ஆப்ரிக்க நாடுகள்ல இன்னும் கறுப்பா இருக்கறதுக்கும் அடிப்படைக் காரணம் இருக்கு.

இங்க அடிக்கற வெயிலில் இருந்து நம்ம உடம்பைப் பாதுகாக்குறதுக்காக நம்ம தோல்ல மெலனின் என்கிற வேதிப்பொருள் உற்பத்தி ஆகுது. அதுதான் நிறத்தைக் கறுப்பாக்குது. நாம என்னதான் கிரீம் போட்டாலும் ஐரோப்பியர்கள் மாதிரி ஆக முடியாது. சொல்லப் போனா நமக்கு இந்தக் கலர்தான் நம்ம தட்பவெப்ப நிலையை எதிர்கொள்றதுக்குத் தேவை. நமக்கு கறுப்பா இருக்குறது பிரச்னைன்னா, வெள்ளைக்காரங்களுக்கு மெலனின் குறைபாட்டால கேன்சரே வருது’’ என்கிற கார்த்திக் ராம், சென்னை ப்ளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையைச் சேர்ந்தவர்.

‘‘அப்படி முழுவதுமாகப் போக்க முடியாத நம் கறுப்பு நிறத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும்... அது உடலுக்கும் கேடு தராது’’ என்கிறார் அவர் உறுதியாக. ‘‘பிறக்கும்போது இருக்கு பாருங்க... அதுதான் நம்ம ஒரிஜினல் கலர். அதை மறுபடி கொண்டு வர்றது மருத்துவ ரீதியா சாத்தியம். மனுஷங்களோட தோல் எப்பவுமே கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன துகளா உதிர்ந்துக்கிட்டேதான் இருக்கும். ஆனா, அதிக மெலனின் சுரக்குறதாலயும், சிலவகை ஹார்மோன் பிரச்னைகளாலும் நம்ம மேல் தோல் உதிராம கறுப்பாகி, கெட்டிப்பட்டுடுது. இந்த மேல் தோல்ல இறந்து போன அணுக்களும் கெட்டுப்போன தோல் திசுக்களும்தான் இருக்கும்.

இந்த மேல் தோலை எடுத்துட்டா, உள்ளே இருக்குறதுதான் உங்க ஒரிஜினல் கலர். இப்படி மேல் தோலை எடுக்கறதை ‘ஸ்கின் பீலிங்’ சிகிச்சைன்னு சொல்றோம். சாதாரணமா முகத்தில் கிரீமா அப்ளை பண்ணிட்டு காய்ந்ததும் உரித்து எடுக்குற பீலிங் முறைன்னு இதை நினைச்சுடாதீங்க. இது வேற!’’ என்கிறவர், அதற்கான வழிமுறை களையும் விளக்குகிறார்...

‘‘மென்மையான ஆசிட் மூலமா செய்யப்படுற சிகிச்சை இது. க்ளைகோலிக் ஆசிட், பிருவிக் ஆசிட், செலிசைக்ளிக் ஆசிட்... இதோட சேர்த்து பால்ல இருந்து எடுக்கப்படுற லேக்டிக் அமிலத்தையும் இந்த சிகிச்சையில பயன்படுத்தறோம். தோலின் நிறம், கடினத் தன்மை, வயது, வேறு தோல் பிரச்னை ஏதாவது இருக்கா... இப்படி நிறைய விஷயங்களைப் பரிசீலிச்சு இந்த ஆசிட்கள்ல ஒண்ணையோ அல்லது பலதும் இணைந்த கலவையையோ மேல் தோலில் தடவிவிடுவோம்.

சுமார் 15 முதல் 20 நிமிஷத்துக்கு இந்த ஆசிட் தோல்ல ஊறணும். பிறகு அந்த ஆசிட்டைக் கழுவ சில வகை நியூட்ரலைஸர் ரசாயனங்களைப் பயன்படுத்துறோம். இந்த சிகிச்சை முடிஞ்சதும் உடனடியா தோல் சிவப்பாகிடாது. கொஞ்ச நாள் கழிச்சு, மேல் தோல் மெல்ல மெல்ல உரிந்து வர ஆரம்பிக்கும். அது வழியா இறந்த செல்களும், பழைய தோல் திசுக்களும் வெளியேறும்போது உங்க ஒரிஜினல் கலர் கிடைக்கும்’’ என்கிறார் கார்த்திக் ராம் உறுதியாக.

ஆனால், தோல் வளர்ச்சி அதிகமாக உள்ளவர்கள், தவிர்க்க முடியாமல் வெயிலில் அலைபவர்கள், சிலவகை ஹார்மோன் பிரச்னை கொண்டவர்களுக்கும் இந்த சிவப்பழகு சிகிச்சை சுமார் 4 மாதத்திலிருந்து 6 மாதங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்குமாம். அதுவுமில்லாமல் சூரிய ஒளி, தூசுக்களிலிருந்து காப்பாற்றுவதற்கான சன் ஸ்கிரீன் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தியே தீர வேண்டும்.
‘‘எல்லாமே தற்காலிக சிகிச்சைதான்.

நாம எந்த அளவுக்கு மெயின்டெயின் பண்றோம்ங்கிறதைப் பொறுத்து இந்த சிவப்பழகை 1 வருஷம் வரை பாதுகாத்துக்க முடியும். பெரும்பாலும் இப்ப சினிமா ஆர்ட்டிஸ்டுகள் புதுப் படம் ஆரம்பிக்கும்போது இந்த சிகிச்சை செய்துக்க வர்றாங்க. கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கிற ஆண், பெண்களும் வர்றாங்க. அடிக்கடி இந்த சிகிச்சையை செய்துக்க முடியாதவங்களுக்கும், தோல், ஹார்மோன் பிரச்னை உள்ளவங்களுக்கும் இந்த சிகிச்சைக்கு ஈடு கொடுக்குற மாதிரியான சில மருந்து, மாத்திரைகளையும் எழுதித் தர்றோம். சீக்கிரத்தில் தோலை கறுப்பாக விடாத தடுப்பு மருந்துகள் அதெல்லாம். ஆனா, தகுந்த மருத்துவர்கள் எழுதித் தராம சாப்பிடவே கூடாது!’’ என்கிறார் கார்த்திக் ராம்.

‘‘நான் பிறக்கும்போதே கறுப்பாதான் இருந்தேன். என் ஒரிஜினல் கலரே அதுதான். அப்போ நான் வெள்ளையாகவே முடியாதா?’’ - இதுதான் கார்த்திக் ராமிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி யாம்.
‘‘ஆக்சுவலா கறுப்பு ஆளை வெள்ளையாக்க முடியாது... ஆனா, ப்ரைட் ஆக்க முடியும். ப்ரைட்ன்னா தோலில் ஒரு பளபளப்பு, மினுமினுப்பு, சுருக்கங்கள் இல்லாத இளமை லுக்... இதெல்லாம் கொண்டு வரலாம். அதுக்கு ஒரு இஞ்ஜெக்ஷன் இருக்கு. ஆனா, கொஞ்சம் காஸ்ட்லி. இஞ்ஜெக்ஷன் மட்டுமே 4000 ரூபாய்.

அதைப் போட்ட பிறகு எடுத்துக்க வேண்டிய மாத்திரை, மருந்துகள் மாசத்துக்கு சுமார் 6000 ரூபாய் வரை ஆகும். இந்த இஞ்ஜெக்ஷனுக்கு ‘க்ளூடாதியான்’னு பெயர். இது புரோட்டீனிலிருந்து கிடைக்கும் ஒருவகை அமினோ ஆசிட். ஆனால் இந்த ஊசி, மாத்திரைகளை நாங்க முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் பரிந்துரைக்கிறதில்லை. ஒருத்தர் வேளா வேளைக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கும்போது, தன்னை ஏதோ நோயாளி மாதிரி உணர்வார்.

இதனால வர்ற உளவியல் ரீதியான சோர்வு இருக்கு பாருங்க... நாம எவ்வளவு கலரா இருந்தாலும் அழகா இல்லாத மாதிரி ஆக்கிடும் அந்த உணர்வு. ஸோ, ஒருத்தருக்கு கலரும் இளமையும் எவ்வளவு முக்கியமா தேவைப்படுது, அதனால அவர் அடைஞ்சிருக்குற மன அழுத்தம் எவ்வளவு? இதையெல்லாம் வச்சித்தான் இந்த சிகிச்சையை செய்வோம்’’ என்கிறார் அவர்.

மிக முக்கியமான ஒரு விஷயம்... எல்லா மருந்துகளும் நல்ல விளைவுகளைப் போலவே பக்க விளைவுகளையும் தர வல்லவை என்பதை இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் ஓகே... இந்த சிகிச்சை செய்து ‘பளிச்’ ஆன சினிமா நட்சத்திரங்கள் யார்ன்னு தானே கேக்குறீங்க? உஷ்..!
பிறக்கும்போது இருக்கு பாருங்க... அதுதான் நம்ம ஒரிஜினல் கலர். அதை மறுபடி கொண்டு வர்றது மருத்துவ ரீதியா சாத்தியம்.

கறுப்பு ஆளை வெள்ளையாக்க முடியாது. ஆனா, பளபளப்பு, மினுமினுப்பு, சுருக்கங்கள் இல்லாத இளமை லுக் கொண்டு வரலாம்.


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்! Empty Re: மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்!

Post by செந்தில் Tue Jun 24, 2014 5:34 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum